<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-20242795</id><updated>2011-12-31T11:20:05.744-08:00</updated><title type='text'>என் நூலகம்</title><subtitle type='html'>இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mugamoodireader.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>39</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-1495594427636310961</id><published>2011-12-31T11:00:00.000-08:00</published><updated>2011-12-31T11:19:05.979-08:00</updated><title type='text'>எக்ஸைல் - மாமல்லன்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.maamallan.com/2011/12/blog-post_30.html"&gt;எக்ஸைல் - மாமல்லன்&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு நாவலை எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத்தெரியாது. தெரிந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேனா? ஆனால், நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அதில் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது சாரு நிவேதிதாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆண்டுக்கொன்றாய் எழுதிக்கொண்டே இருக்கிறார் போலும். ஆரம்ப வாசிப்பில், ஆசிரியரின் மேலை வாசிப்பு காரணமாக அதை அப்படியே இறக்கிக் கீழ் வாசிப்பாக எழுதிக்கொண்டு போவதுபோல் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோஃபிக்‌ஷன் மேல் பாரத்தைப்போட்டு,எழுதுவதையெல்லாம் நாவலாக்கிவிடலாம் போல இருக்கிறதே என ஆச்சரியமாக இருந்தது.. சாதாரண விஷயத்தை சிறுகதையாக எழுதினால் கூட நம்மை ஏற்க மாட்டேன் என்கிறார்கள். நமக்கு நாமே வைத்துக்கொண்ட தாண்டு கழியே தடையாய் இருப்பது மகிழ்ச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் முடிய இருக்கையில் எழுதப்பட்ட கடிதமாகக் கூறப்படும், உதயா அஞ்சலிக்கு எழுதும் கடிதமும் அஞலி உதயாவுக்கு எழுதும் கடிதமும் அப்புறம் அவர்கள் இருவரும் பண்ணுவமுமாக கவர்ச்சிகரமாக நாவல் ஆரம்பிப்பதே ரொம்ப சீப்பாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உதயா அஞ்சலிக்கு எழுதிய கடிதம் வலிந்து எழுதப்பட்ட தோற்றமே காட்டுகிறது.என்னதான் லகுவாக வாசிக்க முடிகிறவிதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அடர்வின்மை காரனமாய் போலி உணர்வாய் இளித்துவிடுகிறது. எளிதாக வாசிக்க முடிவது என்பது ஒரு நல்ல அம்சம், அதற்காக எளிமை மட்டுமே உயர்வுக்கு உத்த்ரவாதமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;உறுப்புகள் எல்லோரிடமும் இருப்பவைதான். சொல்லும் விதத்திலும் தொனியிலும் அதே விஷயம் உடற்கூறு விளக்கமாகவும் கிளுகிளுப்பாகவும் வசையாகவும் மாறிவிடுவதில்லையா. ஃபாரீனில் உயர் இலக்கியவாதிகளால் எழுதப்படும் நாவல்களில் இருக்கும் அதே உறுப்புகளை வைத்துத்தானே நானும் எழுதி இருக்கிறேன் அதே விஷயம் அங்கே உயர்வாகவும் இங்கே இழிவாகவும் பார்க்கப்படுவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்டப் பார்வைக்கு இது மாபெரும் கேள்விபோலவும் இதை விமர்சிப்பவனெல்லாம் இலக்கியப் போலி என்றும் மேலோட்டமான வாசகர்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால் உறுப்பு மேட்டரோடுகூட மனித மனத்தின் இறுக்கம் நெகிழ்வு எப்படிச் அங்கு எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது இங்கு எப்படிச் சொல்லப்படுகிறது என்பதுதான் எனக்கு முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு மூடன். எனக்கு சுத்தமாகப் படிப்பறிவு கிடையாது. இதைக்கூட கேட்டிருக்காவிட்டால் படித்திருப்பேனா என்பதே சந்தேகம். அடிப்படையில் சினிமா பைத்தியம். கிட்டத்தட்ட 19-20 வயதிலிருந்தே, எழுத ஆரம்பிக்கும் முன்பாக இருந்தே ஏதோ கொஞ்சம் சினிமா பார்த்த பழக்கம். ஆங்கிலம் படிப்பது முடியாத காரியமாய் இருந்த காரணத்தால் உலக இலக்கியம் படிக்க இயலாமையை சினிமாக்களைப் புத்தகம்போல் பார்த்து ஈடுகட்ட முடியுமா என்கிற எளிய குறுக்குவழியாகத்தான் தொடங்கியது. தொடக்கத்தில் புரியாதிருந்த படங்கள் கொஞ்ச நாட்களிலேயே கொஞ்சம்போலப் புரியத்தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் எல்லா அம்சங்களையும் வெளிப்படையாய் விவாதிக்கும்போது செக்ஸை மட்டும் ஏன் இலைமறைவு காய்மறைவாகப் பேச வேண்டும் என்பதுபோல் உலக சினிமாவில் உடைகள் அவிழ்க்கப்பட்டன. ஆரம்ப அதிர்ச்சியும் கிளுகிளுப்பும் நீராகி வெளியேறிய பின் ’அது’ என்னவென்றுப் புரிந்தது. உலக சினிமாவில் ’அது’ இருக்கிறது என்பதற்கும் ‘அதை’ அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக பயன்படுத்துவதற்கும் ’அதை’ மட்டுமே வைத்துக்கொண்டு கொண்டாட்டம் கொண்டாட்டம் என்று கூத்தடிப்பதற்குமான வேறுபாடுகள் தெளிவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சலிக்கு உதயாவும் உதயாவுக்கு அஞ்சலியும் கடித பரிவர்த்தனை பண்ணி முடிக்கையில் பண்ணுகிற காட்சி வருகிறது.அதுவும் அஞ்சலி தன் கணவனோடு ஃபோன் பேசிக்கொண்டு இருக்கையில் பண்ணுகிற காட்சி என்பதால் கிளுகிளுப்பு கூடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முக்கோணக் காதல் கதை புதிதல்ல முக்கோணக் காதல் கதைகளில் குறைந்தது மூன்று சாமான்கள் இருந்துதானே ஆகவேண்டும். அவற்றின் கூடவே மூன்று மனங்களும் தட்டுப்படுகின்றனவா என்பதே வாசிப்பில் என் தேடல்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு வெள்ளையில் 1962ல் ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய Knife in the Water ஏன், போட்டில் எழுதிய கவிதையாக இருக்கிறது. அவரே, சரியாக முப்பது வருடம் கழித்து 1992ல் அதே முக்கோனத்தை நவீனமாய் கப்பலில் வைத்து எடுத்த Bitter Moon ஏன் அப்படி இல்லை என்பதையும் பார்ப்போர் புரிந்துகொள்ள முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;பிட்டர் மூனையும்விட,கட்டற்ற கருத்துசுதந்திர அமெரிக்காவிலேயே சென்சாருக்கு உள்ளான, உடலுறவுக்காட்சிகள் அப்பட்டமாய் இடம்பெற்ற படம் பெர்னார்டோ பெர்ட்டுலூச்சி இயக்கிய Last Tango in Paris. வயசாளிக்கும் இளம்பெண்ணுக்கும் தற்செயலாய் ஏற்படும் உறவைப் பற்றிய படம். அதில் ஏன் செஞ்சிகிட்டே மட்டும் கிடக்காமல் அத்துனைப் பேச்சு பேசுகிறார்கள்? அந்தப் பேச்சில் வெளிப்படுவது என்ன? காமம் காதலாகும் படமில்லையா அது. &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் நான் சொல்லி சாரு தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. எனக்குத் தெரிந்து 70-80களின் இலக்கியச் சூழலில் உலக சினிமாவை ஆர்வத்துடன் அதிகம் பார்த்தவர்கள் என்று வெ.சா, செ.ரவீந்திரன் மற்றும் சாருவைத்தான் கூறுவேன். குறைந்தபட்சம் தில்லியில் இருந்தவரையிலேனும் எக்கச்சக்கப் படங்கள் பார்த்தவர் சாரு. அதற்கு தில்லியில் இருந்தது மட்டுமே காரணமன்று. அப்படிப்பார்த்தால் நிறையபேர் தில்லிவாசிகள்தான். ஆனால் எல்லோருக்கும் இலக்கியம் அளவிற்கு உலக சினிமாவில் பெரிய ஆர்வம் இருந்ததென்று சொல்ல முடியாது. அப்படி இருந்துதான் தீரவேண்டும் என்கிற கட்டாயமும் கிடையாது. எழுத்தாளனுக்கு இதெல்லாம் வெறும் பின்னணிதான். தான் வாழ்ந்த வாழ்வை எவ்வளவுதூரம் ஜோடனை செய்யாமல் உண்மையாகப் பார்க்கிறான். அவனையும் மீறி அவனுக்கு எதிரானவற்றை எழுத்தில் வெளிப்பட தன்னை எழுத்துக்கு எவ்வளவுதூரம் திறந்து வைத்திருக்கிறான் என்பதே எனக்கு முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாம் பக்கத்தில் ஆரம்பிக்கும் எக்ஸைல் நாவலில் 9ஆம் பக்கத்தில் அஞ்சலியின் உறுப்பை உதயா சுவைத்து ஈரமாக்கும்போது, அஞ்சலியின் கணவன் ஃபோனில் கேட்கிறான். சுவரெல்லாம் வெட் ஆகறதுன்னு சொன்னியே மேரில (முனுசிபாலிட்டி) புகார் குடுத்துட்டியா?&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸைல் 10ஆம் பக்கத்தில் உதயா தன் பைப்பைத் தூக்கி வைக்கும்போது அஞ்சலியின் கணவன் கேட்கும் கேள்வி ப்ளம்பர் வந்துட்டானா?&lt;br /&gt;&lt;br /&gt;முனிசிபாலிட்டியும் ஈரமான சுவரும் ப்ளம்பரும் பைப்பும் வெறும் இரட்டை அர்த்த கிளுகிளுப்புக்காகவே உபயோகிக்கப் பட்டிருக்கின்றன எனில் இது சரோஜாதேவி ரகம் மட்டுமே. ஆனால் பாரீசில் முனுசிபாலிடியால்தான் எல்லா வீட்டுச்சுவர்களும் செப்பனிடப்படுகின்றன என்றோ அல்லது அரசுக் குடியிருப்புகள் மேரியால் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன என்றோ அல்லது அஞ்சலி வாழ்வது முனுசிபாலிடியால் பராமரிக்கப்படும் வீடு என்றோ இருந்தால் குறைந்தபட்சம் இதை சீப்பான செய்திறன் என்றாவது ஏற்கலாம் இவை எதுவும் இல்லையெனில் இது வெறும் அச்சிலிருக்கும் காமலோகம்.காம் மட்டுமே அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;16 வயதினிலே படத்தின் கிளைமாக்ஸில், மயிலை பரட்டை கற்பழிக்க முயலும் காட்சியில் இடைவெட்டி ”வெளக்கக்கொஞ்சம் அமத்துங்கன்னு பொண்ணு சொன்னாளாம், ஹூஹும் விடியவிடிய எரியட்டுன்னு மாப்ள சொன்னானாம் இந்த மாப்ள சொன்னானாம்” என்று சப்பாணி பாடிக்கொண்டு வரும் உச்சுக்கொட்டவைக்கும் பாரதிராஜா சுவீகரித்த கே.பி மார்க் டக்கர் டைரக்‌ஷனை அல்லவா இந்த இலக்கியக் கொண்டாட்டம் நினைவுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதிரிப்பூக்கள் என்கிற நல்ல படத்தின் உறுத்தலாய் இருப்பது, செடியையோ பூவையோ ஒவ்வொன்றாய் நாயகன் கிள்ளக்கிள்ள இடைவெட்டி அவன் கட்டிக்கொள்ளப்போகும் நாயகியை, வில்லன் கட்டாய துகிலுரிப்பாய்க் காட்டப்படும் காட்சி. இந்த நாவலில் இந்த இடம் அதுபோன்ற பிசிறாக மட்டுமே இருக்குமென்றால் ஒழிகிறது போகட்டும் மீதி 450 பக்கங்கள் எப்படி எனப் பார்க்கலாம் எனத் தாண்ட வைக்கும் நல்ல பகுதிகள் பின்னால் வரக்கூடுமோ என்கிற நப்பாசையில் தொடர்ந்தால், 11-13ஆம் பக்கங்களில் ஆரோகன அவரோகனத்துடன் வழக்கமான புளித்துப்போன தமிழ் எழுத்தாளனின் வாழ்வின் அவலம் பற்றிய புலம்பல் தொடங்கிவிடுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புலம்பலைப் படிக்கையில்தான், கிளுகிளுப்பு தடவி ‘இதுதான் இந்த நாவலின் க்ளைமாக்ஸ்” என்று எழுதியது வெறும் புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் கொக்கி மட்டுமேவோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மனைவி இட்டுக்கொடுத்த அப்பளம் வடாம்களை சைக்கிளில் எடுத்துக்கொண்டுபோய் விற்று குடும்பத்தின் வயிற்றைக்கழுவி அமரத்துவம் வாய்ந்த கதைகளை எழுதியவனோ ஊரூராய் பிரா விற்ற கவிஞனோ உள்ளூரப் புழுங்கியிருந்தாலும் ஒருபோதும் அதைப் பற்றிப் எழுத்தில் புலம்பியதில்லை.பெரும்பாலான வாழ்வை அரசு அலுவலகத்தில் கழித்துவிட்டு இப்படிப் புலம்புவதையே பெரிய இலக்கிய சாதனையாகக் கொண்ட்டாட வேண்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து 13-14ல் தமிழ்நாட்டின் வாழ்நிலை பற்றிய புலம்பல். கையில் காலில் அடிபட்டால் களிம்புகூடத் தடவ வக்கில்லாமல் வாழும் விளிம்பு நிலை மனிதர் போல ஓவென்ற புலம்பல். இது வெளிநாட்டு வாசகர்களுக்காகவென்றே பிரத்தியேகமாக எழுதப்பட்டிருக்கலாமோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;15ல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, முகவரி சான்றுக்காய் ரேஷன்கார்டு பற்றிய புலம்பல். ஆசிரியருக்கு அன்றாட வாழ்வோடு தொடர்புண்டா இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. பாஸ்போர்ட்டு விண்ணப்பத்தைக் கண்ணாலாவது பார்த்தவர் எழுதியதா என்கிற சந்தேகமே எழுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;(1) While applying for a fresh passport attach two copies of the following documents:&lt;br /&gt;&lt;br /&gt;(a)       Proof of address (attach one of the following): &lt;br /&gt;Applicant’s ration card, certificate from Employer of reputed companies on letter head, water /telephone /electricity bill/statement of running bank account/Income Tax Assessment Order /Election Commission ID card, Gas connection Bill, Spouse’s passport copy, parent’s passport copy in case of minors. (NOTE: If any applicant submits only ration card as proof of address, it should be accompanied by one more proof of address out of the above categories).  http://passport.gov.in/cpv/checklist.htm&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் குறிப்பிடப்படும் டெலிபோன் பில் இபி பில் வங்கிக் கணக்கு வாக்காளர் அடையாள அட்டை கேஸ் இணைப்பு பில் இவற்றில் எதுவுமே இல்லாமல்தான் ’இந்த’ எழுத்தாளர் விளிம்புநிலையில் வாழ்கிறாரோ? விளிம்பு நிலையில் வாழும் திருநங்கைகளும் நாடோடிகளாய்த் திரியும் நரிக்குறவர்களுமே மொபைல் ஃபோன் வைத்திருக்கும் தமிழ்நாடு இது என்றாவது தெரியுமா? ’கண்ணி வெடி தமிழ்நாடு’ என்று அதீதமாய்க் கூவுமளவுக்கு என்ன ஆகிவிட்டது உதயாவின் வாழ்க்கையில்? சொடைய்ங் போட வீட்டிலொன்று வெளியில் ஒன்று என ஒன்றுக்கிரண்டாய் இருக்கையில் ஏன்ன குறை? இணையத்திலேயே கொடுக்கத் தெரிந்த வங்கிக்கணக்கை பாஸ்போர்ட் ஆபீசில் கொடுக்கத் தெரியாதா?வங்கிக் கணக்கென்ன பிரத்தியேகமாக இணையத்திற்காகவென்றே உருவாக்கப்பட்ட்டதா? &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான அக்கறை ஏதுமின்றி ஊரான் குடுமியையெல்லாம் வெறும் சுவாரசியத்துக்காக பிடித்து ஆட்டு ஆட்டு என ஆட்டிவிட்டு, பாதிக்கப்பட்டவன் எடுத்துவிடக்கூடிய சட்டரீதியான அவதூறு வழக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உருவான பாத்திரமே ’உதயா’. சட்டரீதியில் உதயா என்பது நானில்லை எனக்காட்டவே உதயாவின் மனைவியின் பெயர் பெருந்தேவி என்றாகிறது. (பக்கம்15 பத்தி 2 வரி 10) பெருந்தேவி - என் மனைவி - அந்த ரேஷன் அலுவலகத்திற்கு 20 முறை சென்றுவந்துவிட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர் தம் வலைத்தளத்தில் ஏற்கெனவே பொங்கிய ஊசிப்போன பொங்கலை எல்லாம் உதயாவின் எண்ணங்களாக அதீத தர்மாவேசங்களாகக் கிழக்கு தொண்ணையில் விநியோகிப்பதைப் பார்க்க, இவ்வளவு வறட்சியா எனப் பரிதாபப்படுவதற்கு பதிலாக, கண்டதையும் கலந்துகட்டி புக்கு தேற்றும் புத்திசாலித்தனத்தைப் பார்த்து எரிச்சல்தான் வருகிறது. இந்த லட்சணத்தில் இதைத் தமிழ்நாடு கொண்டாடவில்லை என்கிற குமுறல் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;நாகார்ச்சுணனும் ஸ்டாலினும், உப்பு மேல நிக்கிறோம் என்கிற கோணங்கி-ஜெயமோகன் அலைபேசி உரையாடலைக் கிண்டலடித்து எழுதிய பெருங்காயத்தின்மேல் நிற்கிறோம், இன்று சுதந்திர தினம் என்றார் மனுஷ்ய புத்திரன் போன்றவற்றை தளத்தில் படித்தபோது ஏற்பட்ட வயிறு வலித்த சிரிப்போ தாஸ்தாவெஸ்கி பற்றிய தங்கமீன் கட்டுரையைப் படித்தபோது உண்டான நெகிழ்வோ, நாவல் வடிவில் திரும்பப் படிக்க நேர்ந்தால் கிடைக்குமா? இப்படியான அத்திப்பூத்தல்களை விட்டால் தளத்தில் இருப்பவை பெரும்பாலும் சுய விளம்பரப் புலம்பல்கள்தானே. அவற்றை அப்படியே அச்சடித்து அட்டையைப் போர்த்தி அடுக்கிக் கொள்வதற்குப் பெயர் இலக்கிய சாதனையா?&lt;br /&gt;&lt;br /&gt;இருபது பக்கம் தாண்டுவதே இமாலய ஏற்றம் போல் மூச்சுவாங்கிவிட்டது. சரி எஸ்.ராவைப் படிப்பது போல, அட்லீஸ்ட் மூடித்திறந்தால் கிடைக்கும் பக்கத்தையாவது பார்க்கலாம் என்றால், வந்து தொலைந்ததோ உதயாவின் முற்கால வாழ்வு பற்றிய எரிச்சலூட்டும் தியாக சித்திரம்.  காழ்ப்பும் வன்மமும் உதயாவின் வாழ்க்கையில் இருந்து எழுதப்பட்டதைப் போலல்லாது, உதயாவை முகமூடியாய் வைத்து அடித்துவிட்டவையாகவே தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கவும் இதற்குமேல் இதைப் படிக்க முடியவில்லை. படிக்கும் தருணம் என ஒன்று வாய்க்கக்கூடும் என்றும் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸைலைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான், இதெல்லாம் நாவல் என்று தைரியமாக வெளியிடப்படும் சூழலில், அடடா நாம் ஏன் நாவல் எழுத முயற்சிக்கவில்லை என்று தோன்றியது. அதற்கு என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-1495594427636310961?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/1495594427636310961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/1495594427636310961'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2009/01/blog-post_22.html' title='எக்ஸைல் - மாமல்லன்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-2228047624852523343</id><published>2009-08-28T15:41:00.000-07:00</published><updated>2009-08-28T15:44:28.952-07:00</updated><title type='text'>சென்னை - சில குறிப்புகள் : மாதவராஜ்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://mathavaraj.blogspot.com/2009/08/blog-post_28.html"&gt;சென்னை - சில குறிப்புகள் :: மாதவராஜ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் விடிந்திருக்கும் காலையில் ஆம்னி பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி வழியே ஒவ்வொரு முறை சென்னைக்குள் நுழையும்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மெல்ல எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறிக்கிற ஊர் இல்லை இது. எண்ணெய் தேய்க்காமல், பவுடர் பூசி அந்த நேரத்திலும் ஓட்டமும் நடையுமாக பல பெண்களைப் பார்க்க முடியும். மணிக்கட்டை பார்த்தபடி பஸ் ஸ்டாண்டில் தவிப்பவர்களை, ஷூ, ஷாக்ஸ் போட்ட குழந்தைகளைப் பார்க்க முடியும். அருகாமையில் செல்லும் காருக்குள் உற்றுப் பார்த்தால் கோர்ட் சூட் போட்டு பேப்பர் படித்துக்கொண்டு இருக்கும் மனிதர் தெரிவார். பிரமை பிடித்தபடியும், வெறிபிடித்தபடியும் மனிதர்கள் உட்கார்ந்திருக்கிற ஒரு இராட்சச சக்கரம் எப்போதுமே சுற்றிக்கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. துருப்பிடித்து நிற்கும் மரங்கள் மனதில் ஒட்டுவதேயில்லை. பறவைகளின் சத்தங்களை விழுங்கிவிட்டு வாகன இரைச்சல்களாய் சதாநேரமும் ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமா போஸ்டர்களுக்குள்ளும், விளம்பர பேனர்களுக்குள்ளும்  தன்னைச் சுருட்டி வைத்துக் கொண்டு நிற்கிற ஒரு பைத்தியக்கார உலகம் என்றே தெரியும். இதெல்லாமுமே ஒரு இந்திய நகரத்தின் பொதுவான, அதுவும் வெளித்தோற்றமாகவே இருக்கின்றன. சென்னையைப் பற்றிய சித்திரம் அவரவர் அனுபவங்களிலிருந்தே தீட்டப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தது இங்கேதான் என்பது எதோ காகிதத்தில் எழுதிவைத்த குறிப்பாகத்தான் இருக்கிறது. அது குறித்து சிலிர்ப்பூட்டும் எந்த உணர்வும் இல்லை. திருவல்லிக்கேணியில் மணி ப்ரொப்ரைட்டரி ஸ்கூலில் சேர்ந்த முதல் நாள் வகுப்பறை இருட்டுக்குள் இருந்ததாய் தெரிகிறது. கிருஷ்ணாம்பேட்டையில் கண்ணகிச்சிலைக்கு நேர் உள்ளே வரும் தெருவில் இருந்த பெரிய இரண்டடுக்குக் கட்டிடத்தின்  மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் கடல் ஞாபகத்தில் இருக்கிறது. கபாலீசுவரர் கோவிலில், அம்மாவையும், அண்ணன்களையும் விட்டு, தொலைந்து போனவனாய் கூட்டத்தில் தேடி அழுதுகொண்டே அலைந்ததை இப்போது நினைத்தாலும் திக்கென்று இருக்கிறது. இரும்புக்கடையும், பொட்டுக்கடையும் கோடம்பாகத்துக்கு நகர்ந்திட, சூளைமேட்டில் பஜனைகோவில் தெருவில் இருந்த வீட்டின் நடு அறையில் அப்பா மஞ்சள் காமாலையில் படுத்துக் கிடந்தது லேசாய் மனதில் இருக்கிறது. அரசுப்பள்ளியில், பக்கத்திலிருந்தவன் என் வலது கையை பிளேடால் வெட்டிவிட முதன்முதலாய்ப் பார்த்த என் ரத்தம் உறைந்து போயிருக்கிறது. இன்றைக்கும் எனக்கான அடையாளங்களில் ஒன்றாய் அந்த வெட்டுக்காயம் ரெக்கார்டுகளில் பதியப்பட்டு கூடவே வருகிறது. ‘நான் தன்னந்தனி காட்டு ராஜா, என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’என்னும் அந்தப் பாடல் வழியே சென்று குழந்தைகளோடு காரில் வரும் சிவாஜி கணேசனை முதன் முதலாய் ராம் தியேட்டரில் பார்க்க முடிகிறது. ஒருநாள் ஊர்நோக்கி எல்லோரும் ரயிலில் போய்க்கொண்டு இருந்தோம். வளர்ந்து வாழ்ந்த இடங்களை விட்டு ஒரேயடியாக அப்பா திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.“உனக்கு இந்த ஊர் லாயக்குப்படாது. ஓடிப் போய்விடு” என்று அப்பாவை சென்னை விரட்டி விட்டதை நான்காம் வகுப்பு படித்து முடித்திருந்த நான் புரிந்திருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஊர்தான் என்னையும் என் உலகத்தையும் எனக்கு அடையாளம் காட்டியது. “நீ ஜோதியின் மகனா”, “தங்கவேல் தாத்தாவின் பேரனா” என்ற விசாரிப்புகளும், “மாது” என வாஞ்சையோடு தூக்கிவைத்துக் கொண்டவர்களுமாய்  நிறைந்திருந்தது. வயலுக்கும், குத்தகை எடுத்திருந்த ரைஸ்மில்லுக்குமாய் அப்பா ஓடிக்கொண்டு இருந்தார்கள். ஆச்சியின் மகாபாரதக் கதைகளின் ஊடே சென்னையின் கடந்த கால வாழ்வும் புரிய ஆரம்பித்தது. அரக்குமாளிகையில் இருந்து தப்பிவந்த ஐந்து பேரும் நாங்கள்தான் என்றே பட்டது. வாய்க்கால்களும், குளங்களும், மனிதர்களும், கதைகளுமாய் நிரம்பிய உலகத்தில் நான் முழுவதுமாய் சுவாசித்தேன். கூடப் படித்தவர்கள் திடுமென காணமல் போய், அந்த வருட அம்மன்கோவில் கொடைக்கு சென்னையிலிருந்து திரும்பி வருவார்கள். அப்படி வந்த சேகர்தான் முதன்முதலாய் ஊருக்குள் பெல்ஸை அறிமுகப்படுத்தியவன். எதாவது கடையில் வேலைபார்க்கும் அவர்கள் சென்னையைப்பற்றி அளந்துவிடுபவை ஒரு மாய உலகத்திற்கு ஊரையே இட்டுச்செல்லும். “ஆமாம், பெரிய ஊர்..” என அம்மா முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறேன். அப்பாவைக் கல்யாணம் செய்துகொண்டு முதன்முதலாய் சென்னைக்குச் செல்லும்போது அம்மாவுக்கும் நிறைய கனவுகள் இருந்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியின் இரண்டாமாண்டு படிக்கும்போதுதான் திரும்ப சென்னைக்கு வந்தேன். தினத்தந்தியில் அப்ரைண்டிசாக இரண்டு மாத காலம் பணிபுரிய கோடை விடுமுறையில் கல்லூரியிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள். என் அண்ணனோடு படித்து, சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்தவர் நுங்கம்பாக்கத்தில் தண்டவாளங்களின் அருகே ஒரு வீட்டில் அவரது நண்பர்களோடு தங்கியிருந்தார். அங்கேதான் நானும் அடைக்கலம் புகுந்தேன். சாவகாசமாய் நகரும் புகைவண்டியில் தினந்தோறும் திருச்செந்தூருக்கு நண்பர்களோடு படிக்கச் சென்று வந்துகொண்டு இருந்த எனக்கு எலக்டிரிக் டிரெய்னின் வேகமும், தடதடக்கும் சத்தமும் மிரட்சியைத் தந்தது. அந்தக் கூட்ட நெரிசலில் நுங்கம்பாக்கத்திலிருந்து எக்மோருக்கு செல்வதற்குள் கசங்கித்தான் போனமாதிரி இருக்கும். கண்ணிழந்த ஒருவன் எப்போதும் அங்கே பாடிக்கொண்டிருந்தான். எல்லா இடங்களிலும் நிரோத் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன். பிளாட்பாரம் தாண்டி வெளிச்செல்ல படியேறி மேல்நின்று பார்க்கும்போது கூட்டம் பெரும் பைத்தியம் பிடித்ததாய் கீழே அலைபாய்ந்து கொண்டு இருந்தது. சென்னையின் அழிக்கமுடியாத சித்திரங்களில் அதுவும் ஒன்று. லிபர்ட்டி தியேட்டரில் நான்கு தடவை பார்த்த ஒருதலை ராகம் படம் ஊரின் நினைவுகளையே மீட்டிக்கொண்டு இருந்தது. இரண்டுமாதம் கழித்து ஒரு காலையில் புதுக்குளத்தில் முங்கி குளித்து எழுந்த போது அப்பாடா என்று இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன்கள், தம்பி எல்லோரும் வேலைக்குச் சென்றுவிட படித்து முடித்து ஊரில் சும்மா இருந்த என்னை சென்னையில் மாமா வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். அண்ணாநகரில் அவர்  இருந்தார். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் டெவலப்மெண்ட் ஆபிசராகிவிடலாம் என்று ஏஜண்ட்டாக சேர்த்துவிட்டார். தனியாகவே சென்னையில் அலைந்தேன். கார்கள் இருக்கும் வீடுகளின் அழைப்புமணியடித்துக் காத்திருக்கும் அந்த நிமிடங்கள் பதற்றமானவை. திறந்ததும் அவர்களிடமிருந்து பாயும் பார்வைகளில் தலைதெறிக்க ஒடிவிடத் தோன்றும். எனக்கான மனிதர்கள் யாரும் இல்லையெனத் தோன்றியது. நானும் தோற்றுக்கொண்டு இருந்தேன். என்னை விட்டு விடுங்கள் என ஊருக்கு திரும்பிவிடத்தான் எப்போதும் தோன்றும். அண்ணாநகர் டவரிலிருந்து சென்னயைப் பார்க்க பயமாய் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழில் வரும் classified பக்கங்களாய்த்தான் கட்டிடங்கள் அடைந்து கிடந்தன. வீடுகளின் வாசல்களில் ஒரு வயதான அம்மாவோ அப்பாவோ தெருவைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அப்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் பெரம்பூர் மாதவராம் ஹைரோடு சென்று, அங்கு ஸ்டேஷனரி கடை வைத்திருந்த பால்ய சினேகிதன் அழகுவேலைப் பார்ப்பேன். ரெயில்வே ஸ்டேஷன் சென்று பேசிக்கொண்டு இருப்போம். சென்னையைப் பற்றி நிறைய எனக்குச் சொன்னவன் அவன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழெட்டு மாதங்களில் அண்ணனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, திருமணமும் ஆனது. கே.கே.நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தான். நானும் அவனோடு போய் ஒன்றரை வருடம் போல இருந்தேன். சென்னை என்னும் நகரத்தின் அகவாழ்வு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். வீட்டுக்காரர் தெலுங்கு. பக்கத்து வீடு மலையாளம். அந்தத் தெருவின் ஒருமுனையில் டைரக்டர் மணிவண்ணன் வீடு. இன்னொரு முனையில் குடிசை மாற்றுவாரியக் கட்டிடங்கள். அம்முவையும் அங்குதான் பார்த்தேன். வாழ்க்கை மீண்டும் சுவராசியமானது. தினமும் கன்னிமரா லைப்ரரிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எல்.ஐ.சி கட்டிடத்தை காண்பித்து, இதுதான் சென்னை என்று சினிமா அடையாளம் காட்டிக்கொண்டு இருக்க, புதுமைப்பித்தன் வீடுகளுக்கு வெளியே டிராம் வண்டிகள் ஓடிய சாலைகளுக்குள் சிக்கிக்கொண்டு இருந்த சென்னையின் கதைகளைச் சொன்னார். வீடுகளுக்குள்ளும், சேரிகளுக்குள்ளும் இருந்த சென்னையை ஜெயகாந்தன் காண்பித்தார். சென்னையின் மனிதர்கள் மெல்ல மெல்ல  புலப்படவும் பரிச்சயமாகவும் ஆரம்பித்தார்கள். பயம் மட்டும் விலகாமலேயே இருந்தது. ஊரில் எப்போதாவது யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து சிகரெட் குடித்தவன் ‘யார் என்னை இங்கே கேட்க முடியும்’ என்பதாய் காமராஜ் சாலையில் சிகரெட்டைக் குடித்து நான் பாட்டுக்கு புகையை ஊதிக்கொண்டு தைரியமானவனாய் காட்டிக்கொண்டேன். சென்னையின் எல்லாத் தியேட்டர்களிலும் படம் பார்த்துக் கொண்டு அலைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;வேலை கிடைத்து சாத்தூருக்கு வந்தேன். அண்ணன் பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டான். சாத்தூரில் பார்த்துப் பழக ஆரம்பித்த நண்பர்கள் எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் சென்னையா” என்று கேட்டது ஆச்சரியமாயிருந்தது. உடைகளையும், பேசுவதையும், பழக்க வழக்கங்களையும் பார்த்தால் தெரிகிறது என்பார்கள். இது ஒரு வினோதம்தான். இரண்டு, இரண்டரை வருடங்களுக்குள் சென்னையால் ஒரு மனிதனுக்குள் ஊடுருவிக்கொள்ள முடிகிறது. மனிதர்கள் அந்த அடையாளங்களுக்கு  தனிப்பார்வையும், மரியாதையும் கொடுப்பதும் புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை என்ற சொல்லே அப்போது பிடித்துப் போனதாயிருந்தது. என் தனிமையையும், தூக்கத்தையும் அது கொன்று கொண்டு இருந்தது. அம்முவைப் பார்க்க வேண்டுமென்றால், திருவொற்றியூரில் இருந்த நண்பனின் வீட்டில் போய்த் தங்க வேண்டியிருந்தது. தொழிற்சங்க வேலைகளாக தோழர்களோடு செல்லும்போதெல்லாம் காவேரி லாட்ஜிலும், பாரிஸ் கார்னரில் இருந்த தொழிற்சங்க அலுவலகங்களிலும் தங்கிக்கொள்வோம். வருசத்துக்கு பத்துப் பனிரெண்டு தடவையாவது லேபர் கமிஷனரையும், வக்கீலையும், அப்படியே அம்முவையும் பார்த்து வந்தேன். சென்னையில் காதலர்களுக்கான இடம் ஏராளமாய் இருந்தாலும் காதலுக்கான் இடம் சொற்பமாகவே இருக்கிறது. மெரீனா கடற்கரையெல்லாம் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு திருமணம் நடத்திவைக்கிற சங்கதிதான். உயிருக்குள் இறங்கும் கடல் அலைகளின் இரைச்சலையும் அங்கு விழுங்கிவிடுகிறார்கள். குழந்தைகளோடு சென்று  விளையாடலாம். வள்ளுவர் கோட்டம், அடையாறு பார்க், எம்ரால்டு தியேட்டர் அல்லது ஒரு ஓட்டலின் மேஜை என்று காதலர்கள் நிரம்பி வழிந்தாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவே  தனிமையையும், காதலர்களுக்கான ஏகாந்தத்தையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து இன்றுவரை சென்னைக்கு போய் வந்து கொண்டே இருக்கிறேன். திருமணம், குடும்பம், தொழிற்சங்கப்பணிகளோடு இருபது வருடங்களாக அவ்வப்போது சென்னையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் இப்போதும் அம்மு உற்சாகமாகி விடுகிறாள். திருச்செந்தூர் அருகில் உள்ள தேரிக்காடு சார்ந்த என் சொந்த ஊர் செங்குழிக்குச் செல்ல குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. சென்னை என்றால் குதூகலம் கொள்கிறார்கள். “ஐ.பி.எல் மேட்ச்சில் சென்னை இருக்கிறது, செங்குழி இருக்கிறதா” என்று என் எட்டு வயதுப் பையன் கேட்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;அலுவல் வேலையாக காலையில் சென்னை சென்று மாலையில் மதுரைக்கு வீடு திரும்பும் கனவான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.. எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாமல், மூட்டை முடிச்சுக்களோடு மூச்சு விட மட்டுமே முடிந்த நெரிசலில் டிரெய்னில் முன்பதிவு செய்யப்படாத கம்பார்ட்மெண்ட்டில் மக்கள் சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். சென்னை எல்லாருக்குமான இடமாக இருக்கிறது. ஹோலிப் பண்டிகையும் கொண்டாடுகிறார்கள். பொங்கலையும் கொண்டாடுகிறார்கள். தீவுகளால் ஆன தனித்தனி பிரதேசமாகவும் இருக்கிறது. ஒரே உலகமாகவும் இருக்கிறது. புரசைவாக்கம் வேறு. திருவல்லிக்கேணி வேறு. அம்பத்தூர் வேறு. திருவொற்றியூர் வேறு. அண்ணாநகர் வேறு. குரோம்பேட்டை வேறு. பர்மா பஜாரும், பாண்டி பஜாரும், ரெங்கநாதன் வீதியும், டாஸ்மார்க் கடைகளும், தேவி தியேட்டர்களும் பொதுவானவை.&lt;br /&gt;&lt;br /&gt;காலமும், விதிகளும் இங்கு வேகமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒருகாலத்தில் பேச்சலர்ஸுக்கு வீடு கிடையாது என்று சொல்லப்பட்ட இடத்தில் இப்போது பேச்சலர்ஸுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எவ்வளவு வேகமாக மாற்றிக் கொள்ளும் போதும், இந்திய நகரங்கள் தங்கள் தொன்மங்களையும், பழைய காலங்களையும் எங்காவது தேக்கி அடைகாத்துக் கொள்கின்றன. சட்டென்று ஒரு தருணத்தில் அவை பிடிபட்டு, வேர்களின் வாசனையோடு வெளிப்படும். சென்னைக்கு அந்த பிடிவாதம் இல்லையென்று தோன்றுகிறது. மிக எளிதாக உதறிவிட்டு, தன்னை உருமாற்றிக் கொள்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் மூர்மார்க்கட்டே இருக்கும் இடம் தெரியாமல் போனதே!&lt;br /&gt;&lt;br /&gt;தோற்பதற்கும், ஜெயிப்பதற்குமான ஒரு பெரும் திடல் சென்னை. சதா நேரமும் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. ஏராளமான மனிதர்கள் மூச்சிறைத்தபடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அருமை எழுத்தாளர் புதுமைப்பித்தன் தோற்றுப்போய் நின்றது இங்குதான். ஒரு ஆர்மேனியப் பெட்டியுடன் வந்த இளையராஜாவும், வீட்டை விட்டு ஓடி வந்த ஜெயகாந்தனும் ஜெயித்துக் காட்டியதும் இங்குதான். எங்கள் அப்பா தோற்றுப்போனது இங்குதான். இந்தக் கதைகள் மகாபாரதம் போன்றவை. எங்கோ இருக்கும் தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமத்திலும், ஒரு குடிசையிலும் கூட சென்னை பற்றிய எதாவது குறிப்புகள் இருக்கின்றன. விளையாடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவை தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ, போத்திஸ் ஜவுளிக்கடையின் முன்புறம் குளிர்பதனக் காற்றும் வாசமும் வீச, பட்டுப்புடவை உடுத்துக்கொண்டு ஒரு பெண் வருகிறவர்களையெல்லாம் பார்த்து சிரித்து வரவேற்றுக் கொண்டு இருக்கிறாள். அவளும் இந்த மாபெரும் போட்டியில் ஒடிக்கொண்டு இருப்பவள்தான். சென்னையில் இப்போது ஷோ கேஸ் பொம்மைகள் உயிர் பெற்றிருக்கின்றன. அவர்களின் கதையை எந்த எழுத்தாளன் எழுதப்போகிறான்? &lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-2228047624852523343?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/2228047624852523343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/2228047624852523343'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2009/08/blog-post.html' title='சென்னை - சில குறிப்புகள் : மாதவராஜ்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-1362671006916233503</id><published>2009-04-21T23:15:00.000-07:00</published><updated>2009-04-21T23:17:06.777-07:00</updated><title type='text'>கோபிகிருஷ்ணன்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஜ்யோவ்ராம் சுந்தர் : கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/2009/04/1.html"&gt;(பகுதி 1)&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு : மழை சிற்றிதழுக்காக கோபிகிருஷ்ணனை யூமா வாசுகி எடுத்த நேர்க்காணல் இது. என்னைப் பற்றி நானே சொல்லிவிடுகிறேன்; கேள்விகள் வேண்டாம் என்று கோபிகிருஷ்ணன் பேட்டியின் ஆரம்பித்திலேயே சொல்லிய பேட்டி! மழை சிற்றிதழுக்கு நன்றியுடன் இதை நான்கு பகுதிகளாகப் பதிவிடுகிறேன். இதழைத் தேடிக் கொடுத்துதவிய பைத்தியக்காரனுக்கு எப்போதும் போல் என் அன்பு).&lt;br /&gt;&lt;br /&gt;நான் 23 ஆகஸ்ட் 1945ல் மதுரையிலே ஜடாமுனி கோயில் தெரு, மீனாட்சியம்மன் கோயில் அருகில் பிறந்தேன். எனக்கு இப்போ வயசு 56. முதல் தம்பி பெயர் நாகராஜன். எம்.எஸ்ஸி., எம்.எட்., படித்திருக்கிறான். அவன் திருவொற்றியூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறான். அடுத்து தங்கை மீரா. தங்கை கணவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் (parkinsons disease). கழுத்து, கைகள் ஆடிக்கொண்டே இருக்கும். அதனால் அவர் எந்த வேலைக்கும் போக இயலவில்லை. மீரா தன் மகனிடமிருந்து பண உதவி பெற்று வாழ வேண்டியிருக்கிறது. மீராவுக்குப் பிறகு ஹம்ஸா. திருவ்ண்ணாமலையில் எய்ட்ஸ் ப்ராஜக்டில் வேலை செய்கிறாள். அவளுக்கு வயது 50. அடுத்த தங்கை இந்திராவின் குடும்பம்தான் இருப்பதிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம். பிளாட்பாரத்தில் கண்ணாடி வளையல் போட்டு வியாபாரம் செய்கிறார். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை மார்க்கெட் பகுதியில் இருக்கிறது அவர்களின் கடை. இந்திராவுக்குப் பிறகு உள்ள தங்கை கீதா பி.எஸ்ஸி ஸூவாலஜி படித்தவர். காஞ்சிபுரத்தில் நல்ல வசதியான நிலையில் வசிக்கிறார். அவர் கணவர் உதயகுமார், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தில் வேலை செய்கிறார். கீதாவுக்குப் பின்னுள்ள தம்பி தேவராஜன் பி.டெக்., எம்.எஸ் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். மிகவும் வசதியான குடும்பம் இவர்களுடையதுதான். தேவராஜன் மனைவி அமுதாவும் எம்.எஸ். கம்ப்யூட்டர் படித்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியிறுதி வரையிலும் மதுரை வாசம். படித்தது சௌராஷ்ட்ரா ஹைஸ்கூல். அது 1961ம் ஆண்டில். அப்பாவின் பூர்வீகம் பரமக்குடி.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் துணிக்கடை ஒன்றில் அப்பாவுக்கு வேலை. தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. மதுரை எம்.எஸ். சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் தங்களை பிராமணர்கள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் பெயரின் பின்னால் பிராமண ஓட்டுக்களைப் போட்டுக் கொள்கிறார்கள். என் அப்பா பெயர் என்.பி. கிருஷ்ணமாச்சாரி, மாமனார் பெயர் கோபால் ராவ், தாத்தாவின் பெயர் சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். அம்மாவழித் தாத்தா இவர். நிலம் நீச்சுடன் மிகவும் வசதியாக வாழ்ந்தவர் தாத்தா. சொந்தமாக கதர்க்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார். கதர்க்கடையை தாத்தா மூடிவிட்ட பிறகு அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யுமளவு பாதிக்கப்பட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அம்முயற்சியிலிருந்து காப்பற்றப்பட்டார். பாட்டிக்கு மதுரைதான். அப்பா அம்மா மட்டும்தான் சென்னையோடு தொடர்புடையவர்கள். தாத்தாவின் மனநோயின் பொருட்டு பாட்டி அவரைக் குணசீலத்தில் சேர்த்தாள். ஒரு மண்டலத்திற்கு, தாத்தாவின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு ஆட்கள் அவருடன் இருந்து அப்போது பார்த்துக் கொண்டார்கள். ஒரு மண்டலம் முடிந்து வீட்டிற்கு வந்த உடனே தாத்தா இறந்து போனார். அவர் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. உடல் வெகுவாக மெலிந்திருந்தது. அந்த நேரத்தில் நான் சென்னையில் பி.ஏ. முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். பிரசிடென்சி காலேஜ். பி.ஏ. சைக்காலஜி. 1962லிருந்து 65 வரை. முதலாமாண்டு படிக்கும்போது அம்மா அப்பாவுடன்தான் இருந்தேன். கணக்கில் மிகவும் பின்தங்கியவன் நான். எஸ்.எஸ்.எல்.சி.யில் கணக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது. பால்யத்தில் நான் நன்றாகப் படித்ததினால் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு முன்னேற்றப்பட்டேன். நான்காம் வகுப்பு கணக்குப் பாடம் படிக்க முடியாமல் போய் அந்தப் பிரச்சனை இன்றும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஏ. ஆன்ஸிலரி புள்ளிவிவரவியலும் லாஜிக்கும். புள்ளிவிவரவியல் பாஸ் பண்ணுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆரம்பத்திலிருந்தே, எஸ்.எஸ்.எல்.சி. காலத்திலிருந்தே சைக்காலஜியில் ஆர்வம். தாத்தா இறந்த பிறகு அந்த ஆர்வம் கூடுதலாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;கோ-எஜூகேஷன் கல்லூரி அது. இயல்பிலேயே கூச்ச சுபாவமுடையவன் நான். பெண்களிடம் பழகுவதில் கூச்சம் மிக அதிகமாயிருந்தது. இதற்குக் காரணம் என் பாட்டிதான். பாட்டி வீட்டிலேயே பஜனை மண்டலி வைத்திருந்தாள். வீட்டில் சிறு கோயிலும் இருந்தது. எல்லா தெய்வ விக்ரகங்களும் உள்ள கோயில். தினமும் காலையில் பூஜை நடக்கும். பூஜையை நான்தான் செய்ய வேண்டும். மாலைகளில் பஜனை நடக்கும். எட்டாம் வகுப்பு வரையிலும் பூஜை செய்வதில் பாட்டிக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பூஜைக்கு, பஜனைக்கு வரும் எல்லாப் பெண்களையும் உறவு முறையில் மாமி, அக்கா, அத்தை என்றுதான் அழைப்பேன். இதனாலெல்லாம் கூச்சம் உருவாகிவிட்டது. பாட்டியினுடையது பெரிய வீடு. சுமார் இருபது பெண்களுக்குமேல் வழிபாட்டிற்கு வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு கலைக் கல்லூரியிலிருந்து எகனாமிக்ஸ் படிக்கவும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து ஆங்கில இலக்கியம் படிக்கவும் மாநிலக் கல்லூரியில் உளவியலுக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நான் உளவியலையே தேர்வு செய்தேன். சீட் கிடைப்பது அப்போது மிகவும் எளிது. நன்கொடைகளோ சிபாரிசுகளோ தேவையில்லை. மூன்றாம் வருடம் படிக்கும்போது ஒரு பெண்ணுடன் மானசீகக் காதல் ஏற்பட்டது. அந்தப் பெண் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நான் மாலை நேரத்தில் ஹிந்தி டியூசன் எடுத்தேன். அந்தப் பெண்மீது எனக்கு முழு ஈடுபாடு இருந்தது. அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு, காதல், உணர்ச்சி வேகம். இதைத்தான் calf love என்று சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு வீடு வறுமையினால் சூழப்பட்டு விட்டது. என்னை வேலைக்குப் போகச் சொல்லி அப்பா தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். நான் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ‘நீ படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போ. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்' என்று சொன்னவர்தான் அப்பா. நான் விடாப்பிடியாகப் படித்தேன். படிப்பை முடிப்பதற்கு எனக்கு மூன்று நண்பர்கள் உதவினார்கள். ஹிந்தி டியூசனிலிருந்து எனக்குக் கொஞ்சம் பணம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ராஸ் எஜூகேஷனல் ரூல்ஸ் (92 எம்.இ.ஆர்) படி ஆஃப் ஃபீஸ் கன்ஸஷன் கொடுத்தார்கள். அதன்படி நான் பாதியளவு பணம் கட்டினாலே போதும். அரிஜன் வெல்ஃபேர் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. என் அம்மாவின் தம்பியாகிய மாமா வாரத்திற்கு 5 ரூபாய் கொடுப்பார். 5 ரூபாய் அந்தக் காலத்தில் மிகப்பெரிய தொகை. அதை வைத்துச் சமாளித்துப் படித்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வேஷ்டி, ஒரு பேண்ட், ஒரு டி ஷர்ட் மட்டும்தான் இருந்தது. மூன்று வருடமும் இதே நிலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது என்.எம்.பதி அறையில் தங்கியிருந்தேன். காலையில் 2 இட்லி சாப்பிடுவேன். மதியச் சாப்பாடு பெரும்பாலும் கிடையாது. மாலையில் நான் ஹிந்தி டியூசன் எடுக்கும் பெண் (அவள் பெயர் அனுராதா) வீட்டில் ஒரு கப் காபி கொடுப்பார்கள். அதுதான் சாப்பாடுபோல. இரவு திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அரை கிளாஸ் பால் மற்றும் 2 பன்கள். அதோட சரி.&lt;br /&gt;&lt;br /&gt;1965ல் மூன்றாமாண்டு படிக்கும்போது சமூக உளவியலாளர் ஒருவரிடத்தில் அவரது ஆராய்ச்சிக்குத் தரவுகள் சேகரித்துத் தரும் வேலையை இரண்டு மாதம் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிசல்ட் வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஜாஜி ஹாலில் 'மீட் த சேலஞ்ச்' (இந்திய பாகிஸ்தான் போர் பர்றிய கண்காட்சி)ல் கண்காட்சி விருவுரையாளராக ஐந்து நாட்கள் வேலை பார்த்தேன். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 5 ரூபாய் சம்பளம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பாரத் சேவக் சமாஜத்தின் சார்பாக வீடு வீடாகப் போய், வாங்கும் மளிகை சாமான்களின் விலையைப் பற்றி - எவ்வளவு ரூபாய்க்கு என்ன பொருள் வாங்குகிறார்கள் - தகவல் சேகரிக்கும் வேலையை இரண்டு மாதங்கள் செய்தேன். இதில் மாதம் ரூ 100 சம்பளம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரியண்டல் ஃபயர் அண்டு ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-இல் குமாஸ்தா உத்தியோகம் ஒரு வருடம் ஏழரை மாதங்கள் பார்த்தேன். இங்குதான் நான் டேபிள் டென்னிஸ் கற்றுக் கொண்டேன். இரண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன் - அரசு மருத்துவமனை மனமகிழ் மன்றத்தில் singles-ல் runner ஆகவும் doubles-ல் winner ஆகவும். டேபிள் டென்னிஸ் ஓர் அற்புதமான விளையாட்டு. எல்லா அலவன்சும் சேர்த்து மாதச் சம்பளம் 253 ரூபாய். இந்த வேலை தற்காலிகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு அரசு வேலை கிடைத்தது. லோயர் டிவிஷன் கிளார்க். ஆல் இந்தியா ஹேண்டிகிராஃப்ட்ஸ் போர்டில். சென்னையில்தான். 67லிருந்து 69 வரையில் ஒரு வருஷம் நான்கு மாதங்கள். மாதச் சம்பளம் ரூ 300. அப்போது மாலை வகுப்பில் டிப்ளமோ இன் ஆந்த்ரோபாலஜி (மானிடவியல்) மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் சேர்ந்தேன். இது இரண்டு வருடப் படிப்பு. புரபேஷன் பீரியடிலேயே அரசு வேலையை ரிஸைன் செய்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பொது மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் நிலையம் - புனர்வாழ்வ்ய் மையத்தில் அடுத்த வேலை. அது கைகால் இழந்தோருக்கான புனர்வாழ்வு மையம். என்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு வேலையை அங்கே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மார்க்கண்டேயன் என்பவர்தான் இந்த ப்ராஜக்டின் தலைவர். அவர் என் கல்லுரியில் வகுப்புத் தோழராயிருந்தவர். என்னைவிட ஓர் ஆண்டு மேல் வகுப்பில் படித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு வேலையை 11-4-69ல் ரிஸைன் செய்துவிட்டு 12-4-69ல் இந்தப் புது வேலையில் சேர்ந்தேன். 69ல் 23 அல்லது 24 வயது இருக்கும் எனக்கு. இந்த வேலை திருப்திகரமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உளவியல் பரிசோதனை நடத்துதல்தான் வேலை. நோயாளிகளை பேட்டி கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். மாதம் 550 ரூபாய் சம்பளம். வேலை முடியும்போது தோராயமாக, 1974 வரையில் 5 வருடங்கள் இந்த வேலையில் இருந்தேன். இந்த வேலைதான் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை. எப்படியென்றால் முதலில் ஒன் இயர் ரிசர்ச் அண்டு டெமான்ஸ்ட்ரேஷன் ப்ராஜெக்ட் ஆக இருந்தது. அதில் ஒரு கிறிஸ்துவப் பெண். என் வயதுதான் இருக்கும். அவள் என்னுடன் நெருங்கிப் பழகினாள். பிரதி ஞாயிறு எங்கள் வீட்டிற்கு வருவாள். அவளுக்கு நான் ஆங்கில இலக்கணம் டியூசன் எடுப்பேன். அவள் ரொம்ப அழகு. என்னைவிட உயரம். அந்தக் காலத்து கே.ஆர்.விஜயா சாயல்ல இருப்பா. ஒன் இயர் ப்ராஜக்ட் முடிந்தவுடன் அவள் போய் விட்டாள். நான் தொடர்ந்தேன். அவள் மேல் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருந்தது. அதைக் காதல் என்று சொல்ல முடியாது. அவள் சென்று வெகுநாட்களான பிறகு அவளிடமிருந்து ஒரே ஒரு லெட்டர் வந்தது. இந்தச் சமயத்தில் அடுத்த ப்ராஜக்ட் தொடரும்போது என் கல்யாணத்திற்கான ஆயத்தங்களை என் பெற்றோர்கள் 72-ல் செய்தார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தக் கிறிஸ்தவப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தாள். நான் அவளிடம் ‘என் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள்' என்றேன். அவள் ‘இனி நாம் பழைய மாதிரி பழக முடியாதே' என்றாள். இதுதான் இண்டிகேஷன். இதன் மூலம்தான் அவளுக்கு என்மீது காதல் இருப்பது எனக்குத் தெரிகிறது. அவள் பெயர் நான்ஸி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கிறிஸ்தவப் பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு காதல் ஏற்பட்டு அதில் அவள் தோற்றிருந்தாள். எனக்கும் ஒரு காதல் தோல்வி முன்பே இருந்தது. நான் வேலை செய்துகொண்டிருந்த அரசு பொது மருத்துவமனையில் (ஒரு வருட ப்ராக்டிஸ் முடிந்து நான்ஸி சென்ற பிறகு) ஒரு ஃபிஸியோதெரபிஸ்டும் வேலை பார்த்டு வந்தாள். அவள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள். அவளுக்கு தன் கணவனைத் தவிர வேறு தொடர்பு இருந்ததுதான் விவாகரத்திற்கான காரணம். அவளுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உண்டு. ஃபிஸியோதெரபிஸ்டின்மீது ஆழமான காதல் கொண்டிருந்தேன். என் திருமணத்திற்கு முன்பு நடந்தது இது. காதல் வேகத்தால் உந்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடுத்தேன். அந்தக் கடிதம் பாலுணர்வின் வேகத்தில் எழுதப்பட்டது. மிகவும் கொச்சையானது. அதை அவள் மட்டும் படிக்காமல் சக ஊழியரான ஆண் ஃபிஸியோதெரபிஸ்டிடமும் படிக்கக் கொடுத்துவிட்டாள். அது மட்டுமின்றி அவள்பால் ஏற்பட்ட பாலுணர்வு எழுச்சிக்கான வடிகால் என்ன என்று புரியாமல், நான் ஓர் அருவருப்பானவன் என்று கருதிக்கொண்டு மிகவும் குழம்பிய நிலையிலும் குற்ற உணர்விலும் உருக்குலைந்திருந்தேன். அவளுக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. இது எனக்குப் பெரிய மனப் பிரச்சினையாகிவிட்டது. என் கடிதத்தை எல்லா ஃபிஸியோதெரபிஸ்டுகளும் மற்றவர்களும் படித்துவிட்டது போலவும் எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரிந்துவிட்டது போலவும் ஒரு மாய உணர்வால் பீடிக்கப்பட்டேன். முதன் முதலாக மனதளவிலான பாதிப்பு இதுதான். இந்த மாய உணர்வு என் காதுகளில் மாய ஒலியாகக் கேட்க ஆரம்பிதுவிட்டது. ‘நீ மிகவும் மோசமானவன்... நீ மிகவும் பச்சையானவன்... நீ ஒரு காமுகன்... நீ அசிங்கம் பிடித்தவன்...' என்று என்னை எல்லோரும் திட்டுவதுபோல; கெட்ட வசவுகளால் என்னைத் துன்புறுத்துவதுபோல. என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு சைக்யாட்ரிஸ்டை பார்க்கும்படி அறிவுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர். தைரியம் என்பவரைப் போய்ப் பார்த்தேன். அவர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் சீனியரான பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளின் பிரிவில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகப் பணிபுரிந்து வந்தார். அவரிடம் என் பிரச்சினைகளைச் சொன்னபோது, அவர் என்னை டாக்டர் சாரதா மேனனிடம் அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உளவியல் சிகிச்சையில் முக்கியமானது என்னவென்றால் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இது அவசியமானது. நல்லபடியாகக் குணமாகிக் கொண்டு வருகிறது என்று தெரிந்தால் மாத்திரைகளின் வீர்யத்தைக் குறைத்துக் கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமயத்தில்தான் அந்தக் கிறிஸ்தவப் பெண் நான்ஸி வந்து என்னை மீட்டாள். சாந்தோம் தமிழ் சர்ச் பாண்டியன் பாதிரியார்தான் எனக்கு ஞான ஸ்னானம் கொடுத்தது. உண்மையில் நான் கடவுள் நம்பிக்கையாளன் அல்ல. என் கிறிஸ்தவப் பெயர் கே. கார்ல் ராஜன் என்றானது.&lt;br /&gt;&lt;br /&gt;12-7-72 அன்று ராமநாதபுரம் கிரைஸ்ட் சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு என் நண்பர்கள் யாரும் வரவில்லை. என் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திடீரென்று நான் புறப்பட்டுப் போய்த் திருமணம் செய்துகொண்டேன். நான்கு நாட்கள்தான் இதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டேன். மணப்பெண்ணிற்கு மதுரைதான் பூர்வீகம். சென்னை வந்து வீட்டிற்குப் போகாமல் நண்பர்கள் விட்டில் தங்கினேன். என் தந்தை என்னைத் தேடி வந்து ‘நீ எங்கேயும் போகவேண்டாம். நம் வீட்டிலேயே வந்து இரு' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதம் ஒருதடவை நான் ராமநாதபுரம் போய் அவளைச் சந்திப்பேன். அல்லது அவள் சென்னைக்கு வருவாள். அவள் இங்கு வரும்போது நண்பர்கள் வீட்டில்தான் சந்தித்துக் கொண்டோம். நான் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதைக் கவனித்த அவள் ‘எதற்கு மாத்திரை சாப்பிடுகிறாய்' என்று கேட்டாள். நான் ஒன்றுமில்லை என்று மறைத்தேன். இதனால் நான்ஸிக்கும் எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆயினும் எப்படியோ உறவு தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/2009/04/2.html"&gt;(பகுதி 2)&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அவளுக்கும் எனக்கும் பிரச்சினைகள். ஒருமுறை ராமநாதபுரம் சென்று அவள் வீட்டிலேயே 17 மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதீத எரிச்சலினாலும், மாத்திரை சாப்பிடுவது தொடர்பான கேள்விகள் பெரிதும் இரிட்டேட் செய்ததாலும் அப்படிச் செய்தேன். நான் மாத்திரைகள் விழுங்கியிருப்பது தெரியாமல், சினிமாவுக்குப் போகலாம் என்றாள் அவள். மாலை நேரம். சரி என்று கிளம்பிவிட்டேன். அவள் தோழி ஒருத்தி எங்களுடன் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாத்திரை சாப்பிட்டதனால் என்னால் நேராக நடக்கமுடியவில்லை. பக்கவாட்டில் சாய்ந்து தட்டுத்தடுமாறி நடந்தேன். ஏதோ சிக்கல் என்று அவளுக்குப் புரிந்து விட்டது போலிருக்கிறது. உடனே ராமநாதபுரம் ஹெட்குவார்ட்டர்ஸ் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்து சிகிச்சையளித்தாள். குணமாக மூன்று நாட்களானது. நீங்கள் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தினால்தான் நாம் சேர்ந்து இருக்க முடியும் என்றாள் நான்ஸி. சரி என்று ஒத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் மாத்திரை சாப்பிடுவதை நான் விடவில்லை. விடக்கூடாது. அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்கு ஒன்று எனும்படி எங்களிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. அவள் சென்னை வந்து என்னுடன் தங்குவதற்காக அவளது டிரான்ஸ்ஃபருக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அவள் சென்னை வருவதில் அக்கறையில்லாமலிருந்தாள். அது எனக்கு உடனே புரிந்தது. ராமநாதபுரத்தில் அவள் பணியிடத்தில் அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். குறிப்பாக ஒரு டாக்டருடன் அவளுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. சந்தேகத்திற்குரிய தொடர்பு அது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வெறுமையும் குழப்பமும் வெறுப்புமான அலைக்கழிப்பு. அல்லாட்டம். இனி வாழமுடியாது என்று தோன்றிவிட்டது. திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. ‘நீ சென்னைக்கு வா. நம் முதலாமாண்டு திருமணநாளைக் கொண்டாடுவோம்' என்று அவளை அழைத்தேன். அவள் வந்தாள். நான் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கினோம். அந்த வீட்டு எண் 13. நான்கு நாட்கள் கழிந்தபிறகு நான் சொன்னேன் ‘நீ யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள். அதைப் பற்றி எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அவர்களைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாதே' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை அவள். அடிக்கடி அவள் அந்த டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததும் மற்ற ஆண் பணியாளர்களைப் பற்றி மிகவும் நெருக்கமாகப் பேசியதும் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. இதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நிலைமை பொறுக்க முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண முதல் ஆண்டு நிறைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு துக்கம் தாளாமல், அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்ஸி பிடித்து வெளியே சென்று நாற்பது மனநல மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்தேன். வீட்டினுள் தண்ணீர் குடித்தால் அந்த ஓசையில் அவள் விழித்து சந்தேகிக்கலாம் என்ற யோசனையில் மாத்திரைகளைக் கக்கூஸ் குழாயில் வரும் தண்ணீரைக் கொண்டு விழுங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. வாழ விருப்பமில்லாததால் நான் சாகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இனி உனக்கு முழு சுதந்திரமுண்டு. நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். உன்னை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்' என்று கடிதம் எழுதி அவள் தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். அவள் என்னை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். நான் எழுந்திருக்கவில்லை. நான்ஸி என்னைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தாள். அங்கே என்னைப் பரிசோதித்த டாக்டர் எனக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் உடனடி மரணம் தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துவிட்டார். தலையிலிருந்து கால் வரை துணியால் மூடிவிட்டார்கள். முற்றும் பிரக்ஞை கெட்டுப் படுத்திருக்கிறேன் நான். அங்குள்ள வேறு டாக்டர் எனக்கு ஏற்கனவே நண்பராயிருந்தவர். லேசாக அவருக்குச் சந்தேகம் தட்டியிருக்கிறது. மூடிய துணியை விலக்கி என்னைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். சன்னமாக உயிர் இருப்பது தெரிந்தது அவருக்கு. அந்த நண்பர் LASIX இன்ஜக்‌ஷன் கொடுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் கிடந்தபோது என்னைப் பார்க்க வந்தாள் என் மாமியார். ‘உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். வெளியே விட்டு வைக்கக் கூடாது. எங்களை மிகவும் அவமானப் படுத்திவிட்டாய். பெருங் கேவலத்தைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டாய். உன் முகத்தில் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது' என்று வசவுக் கூச்சல் போட்டு கலங்கடித்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி பார்ப்பதற்கு வருவாள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு சிறப்பாக வருவாள். என்னை உதாசீனம் செய்து மற்ற நோயாளிகளுடன் அரட்டையடிப்பாள். அவளும் அவளது பழைய சினேகிதனும் நான் படுக்கையில் கிடந்து போராடிக் கொண்டிருக்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என் நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார்கள். அவளிடம் ‘இனிமேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்' என்று முடிவாகச் சொல்லி விட்டேன். அத்துடன் அந்தச் சாப்டர் முடிந்தது. இந்த தற்கொலை முயற்சிக்குப் பிறகு LARGACTYL மாத்திரைகளை உட்கொள்ளுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி என்னை விட்டுப் போன நான்கே மாதங்களில் சென்னைக்கு மாற்றலாகி வந்தாள். ஓர் ஆடவரைத் திருமணம் செய்து கொண்டாள். இவை இரண்டும் அவள்மீதான என் சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தின. ஆனால் மனநல மருத்துவர்கள் இது கற்பனைச் சந்தேகம் என்று schizophrenia paranoid என்ற மனப்பிணிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறபோது மாலை நேர வகுப்பில் சேர்ந்து போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் கிரிமினாலஜியும் ஃபேரன்ஸிக் சயின்ஸும் ஒரு வருட கோர்ஸில் படித்திருந்தேன். 1974ல் எங்கள் ப்ராஜக்ட் முடிந்துவிட்டது. அது அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ப்ராஜக்ட். நிதியுதவி நின்றவுடன் எல்லோருக்கும் வேலை போய்விட்டது. பி.எல்.480 நிதி என்று பெயர். அமெரிக்காவிலிருந்து வரும். எங்கள் சீஃப் தவிர எல்லோரும் எங்கெங்கோ சிதறிப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. பல விதங்களிலும் கடன் வாங்கி நான்ஸிக்கு மிக அதிகம் செலவு செய்தது பெருந் தொல்லையாகி விட்டது கடைசியில். திருமண முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பெண் வந்து தங்கிய நான்கு நாட்களும் செலவு மிக அதிகம். என் நண்பர் சொன்னார். ‘இங்கே இருக்காதே. வேறு எங்காவது சென்றுவிடு. முக்கியமாகச் சென்னையில் இனிமேலும் நீ இருக்காதே.'&lt;br /&gt;&lt;br /&gt;வேலை போன அடுத்த நாளே வடக்கே புறப்பட்டேன். சில புத்தகங்களும் சில சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டேன். இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தேன். மகாராஷ்டிராவில் உள்ள சேவாக்கிராம் காந்தி மெடிக்கல் காலேஜ்-ல் கிளாக்காகப் பணிபுரிந்தவர் என் உயர்நிலைப் பள்ளி நண்பர். அவரிடம் எழுதிக் கேட்டதற்கு ‘சரி! நீ வா' என்று பதிலளித்திருந்தார். வார்தாவில் இறங்கி சேவாக்கிராம் சென்று அங்கு ஒரு மாதம் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நண்பர் போதிய பணவசதி இல்லாதவர். திரும்பத் திரும்ப என்னைச் சென்னைக்கே சென்றுவிடும்படி கூறிக்கொண்டிருந்தார். பி.ஜி.பிரகாசன் அவர் பெயர். நான் சென்னை செல்லாமல் மகாராஷ்டிரா மாநிலம் புசாவலுக்குச் சென்று அங்கிருந்து பாம்பே சென்றேன். எல்லாமே டிக்கெட் இல்லாத பயணம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பே ரயிலில் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் அகப்பட்டுக் கொள்ளும்படி ஆகிவிட்டது. என்னைப் பற்றி விசாரித்து ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொண்டு போனார். பாம்பேயில் இறங்கி டிக்கெட் கேட் கடக்கும்போது இன்னொரு பரிசோதகர் பிடித்துக் கொண்டார். ‘நான் இங்கே பிழைப்பதற்காக வந்திருக்கிறேன். எனவே என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் பேரில் மனமிரங்கி விட்டுவிட்டார். ஏதாவது சாப்பிட்டாக வேண்டியிருந்தது. ஒரு ஹோட்டலுக்குச் சென்று வேலை வேண்டினேன். அந்த ஹோட்டலில் வேலை எதுவும் காலியாக இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் எங்கே தங்குவது என்று பிரச்சினையாகிவிட்டது. தாராவிக்குப் போய் அங்கு ஒருவரிடம் என் சிரமங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன். அவர் வீட்டுப் பரணில் படுத்துக் கொள்ளும்படி அனுமதித்தார். தங்க மட்டுமே இடம். இதற்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. கையில் சுத்தமாகப் பணம் கிடையாது. எடுத்து வந்திருந்த சில புத்தகங்களை எடைக்குப் போட்டு ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டேன். மொத்தமாக மூன்று நாட்கள்தான் பாம்பேயில் இருந்திருப்பேன். சோர் பஜாரில் என் துணிகளை விற்றதன்மூலம் கொஞ்சம் சில்லறை தேறியது சாப்பிடுவதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் வேறு ஒரு ஹோட்டலில் வேலை கேட்டேன். விண்ணப்பம் எழுதிக் தரும்படி சொன்னார், அங்கு பொறுப்பிலிருந்தவர். நான் எழுத முயற்சித்தேன். கை நடுங்கியது. எழுத்து சரியாக வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வேலை தர இயலாது என்றும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் கூறினார். ‘வேலை தந்தால்தான் சாப்பிடுவேன்' என்றேன் நான். ‘இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். சும்மா சாப்பிடுங்கள்' என்று அவர் கேட்டுக் கொண்டபிறகு மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே நடந்து கொண்டிருந்தபோது சென்னை திருவல்லிக்கேணி ஜிம்கானா கிளப்பில் டேபிள் டென்னிஸ் விளையாடும் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். இரண்டு இட்டிலி வாங்கிக் கொடுத்து கையில் கொஞ்சம் காசு கொடுத்து சென்னைக்குப் போய்விடும்படி சொன்னார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பேயிலிருந்து டிக்கெட் இல்லாமல் ஹைதராபாத் போனேன். அப்போது என்னிடம் ஒரு சட்டையும் பேண்டும் மட்டுமே இருந்தது. ஹைதராபாத்தில் எனக்கு நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட் இருந்தார். அவரிடம் ஊர் திரும்புவதற்கு உதவும்படி கேட்டேன். 'நீ இங்கிருந்து கடிதம்போட்டு உன் அப்பா அம்மாவிடமிருந்து பணம் வாங்கிப் புறப்பட்டு போ. நான் பணம் தரமாட்டேன்' எனக் கறாராகக் கூறினார் அவர். இது சிக்கலான ஏற்பாடாகத் தெரிந்தது. ரயில் ஏறிவிட்டேன். இப்போதும் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கித் தப்பினேன். ஓங்கோல் வந்து அங்கிருந்து சென்னைக்கு ரயில் பிடிக்க வேண்டும். கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஏறியபோது எதிர்பட்டார் டிக்கட் பரிசோதகர். நான் என்ன செய்வதென்று நிதானிப்பதற்குள் ரயில் வேகமெடுத்துவிட்டது. வேறு வழியின்றி குதித்துவிட்டேன். முழங்காலில் பலமாக அடிபட்டு விட்டது. வலியினால் நகர முடியாமல் விழுந்த இடத்திலேயே வெகுநேரம் கிடந்தேன். பிறகு மெதுவாக நடந்து சென்று ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தேன். யாரோ ஒருவர் பேச்சுக் கொடுத்தார். தெலுங்குக்காரர். தமிழை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டீ வாங்கிக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு லாரி டிரைவரிடம் என்னை சென்னைக்குக் கொண்டுபோய் சேர்த்து விடும்படி சொன்னார். லாரி இரவில்தான் கிளம்பும். என்னிடம் பணமில்லாததால் என் சட்டையையும் கைலியையும் வாங்கிக் கொண்டார் டிரைவர். அடுத்த நாள் காலை லாரி போரூர் வந்து சேர்ந்தது. ‘இதுதான் சென்னை. நீ இங்கேயே இறங்கு' என்றார் டிரைவர். நான் அவர் சொன்னபடி செய்தேன். கையில் கொஞ்சம் சில்லறையும் கொடுத்து இறக்கிவிட்டார் அவர். நான் கொசப்பேட்டையிலிருந்த என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் யாருமே என்னை எதிர்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். எதை எதையெல்லாமோ நினைத்து அடிக்கடி அழுது கொண்டிருந்தேன். ஒரு நிலைக்குப் பிறகு சிகிச்சை எடுத்தே தீரவேண்டுமென்று தோன்றிவிட்டது. நண்பர் பாலகிருஷ்ணன் மூலமாக (கிளினிகல் சைகாலஜிஸ்ட்) அரசு மனநலக் காப்பகத்தில் சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1974ல் 45 நாட்கள் அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அங்கே சூப்பிரிண்டெண்டெண்ட் ஆக இருந்தவர் டாக்டர் சாரதா மேனன். எந்த இடையூறும் இல்லாதபடி சீராகவும் சரியாகவுமிருந்தது மருத்துவமனைச் சூழல். சிகிச்சையும் சிறப்பான வகையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போக்கிடமென்று எதுவும் இல்லாமலாகிவிட்டது. பாட்டிக்குக் கடிதம் எழுதினேன். பாட்டி கடிதமும் பணமும் அனுப்பியிருந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி மதுரைக்கு என் பாட்டியிடம் புறப்பட்டுப் போனேன். வேலை தேடியபடி 9 மாதங்கள் அங்கேயே இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சமயத்தில் மதுரை அதீனத்தின்மூலம் மறுபடி இந்து மதத்திற்கு மாறி என் இயற்பெயரைப் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு மருத்துவச் செலவு செய்ய பாட்டி விரும்பவில்லை. ‘நீ சென்னைக்கு போ'வென்று பாட்டி சொன்னதால் திரும்பவும் சென்னை வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நண்பரின் வீட்டுத் திண்ணையில் இரவில் படுக்கை. தெருக்குழாயில் காலைக் குளியல். சமயங்களில் கட்டணக் கழிப்பறையில். வேலை தேடுவதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவர் மூலமாக ராமாராவ் பாலிகிளினிக்கில் 1975ல் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ 200. அங்கு வேலை பார்த்த காலம் இரண்டரை வருடங்கள். பாலிகிளினிக்கில் ஒரு தோழி கிடைத்ததுதான் சந்தோஷம். அவளோடு தந்தை மகள் மாதிரியான உறவு. அவளுக்கும் தலைமை மருத்துவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவள் காஞ்சிபுரத்திற்குப் போனாள். நான் பாலிகிளினிக்கிலேயே தொடர்ந்தேன். நான் தொடர்ந்து மனநல மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். பெரிய ஜாப் எதுவும் என்னால் செய்ய இயலாதபடி மனநிலை பாதிப்படைந்திருந்தது. சில காலத்திற்குப் பிறகு பெரிய வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்து நிலைமையைச் சொன்னேன். எனக்கு வேலை தரும்படி வேண்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமகிருஷ்ணன் IMRB (இண்டியன் மார்க்கெட் ரிஸர்ச் பீரோ) வில் வேலை வாங்கித் தந்தார். அவர் என் நண்பரின் கல்லூரித் தோழர். இங்கே ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன். வீடு வீடாகப் போய் சிகரெட் - பேட்டரி - கார்பெட் இவை பற்றி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மே 1980ல் திரும்பவும் பெரிய மனபாதிப்பு ஏற்பட்டது. மறுபடியும் மாய ஒலிகள் காதில் கொடூரமாக ஒலிக்க ஆரம்பித்தன. ‘நீ எதற்கும் தகுதியில்லாதவன்... நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டாய்... இனிமேலும் நீ உயிருடன் இருக்க முடியாது...' இப்படி. அலுவலகம் மூலமாகவே அரசு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சேர்ந்து ஐந்தாம் நாளிலேயே சரியாகிவிட்டது. ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் கொடுக்காமல் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். வேலைக்குப் போனேன். என்னை உடனே வேலையில் சேர்க்காமல் ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி ஒரு மாதச் சம்பளமும் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஐம்ஆர்பி யில் முழுநேரமாகவும், க்ரியாவில் பகுதிநேரமாகவும் வேலை செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்தில் ந. முத்துசாமி எழுதிய ‘நாற்காலிக்காரர்கள்' புத்தகத்தையும், ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை' (ஹிந்தியிலிருந்து சரோஜா மொழிபெயர்ப்பு செய்தது) எனும் புத்தகத்தையும் கிரியா ராமகிருஷ்ணன் கொடுத்தார். இதற்கு முன்னால் மு. வரதராசன், ஹேமா ஆனந்ததீர்த்தன், சா. கந்தசாமி இவர்களை மட்டும் படித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் எனக்குப் பெண் துணை அவசியப்பட்டது. அம்மாவிடம் சொன்னேன். அம்மா புரோக்கர் மூலம் இப்போதிருக்கிற என் மனைவியைப் பெண் பார்த்தார். திருவொற்றியூர் திருமண மண்டபத்தில் 20-10-80ல் திருமணம் நடந்தது. ஐ எம் ஆர் பி நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். திருமணத்திற்கு முன் லாட்ஜில் தங்கியிருந்தேன். பிறகு மைலாப்பூரில் தனிக்குடித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/2009/04/3.html"&gt;(பகுதி 3)&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் முடிந்து வந்த முதல் சிக்கல் - ஏன் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்று என் மனைவி தொடர்ந்து கேட்ட கேள்விகள். எனக்குத் தலைவலி, தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று ஒருவாறு சமாளித்தேன். வாழ்க்கை தன்போக்கில் நடந்து கொண்டிருந்தது. நீங்கள் அலைந்து திரிய வேண்டாம் க்ரியாவுக்கே வந்துவிடுங்கள் என்று சொன்னார் ராமகிருஷ்ணன். அதை ஏற்று க்ரியாவுக்கே வேலைக்குப் போக ஆரம்பித்தேன். க்ரியா அப்போது ராயப்பேட்டையிலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கும் போது ‘ராணி' எனும் பெயர் பொருத்தமாகத் தெரிந்தது. 'ராணிஸ்ரீ'ன்னு வச்சிட்டேன். 1983 முடிவில் குழந்தை பிறந்த பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். இதற்கு முன்பு ஒரு முயற்சியாக 73ல் தூயோன் எனும் சிறுகதை எழுதியதைச் சொல்ல வேண்டும். அதை ஞானக்கூத்தனிடம் காட்டினேன். நன்றாக வந்திருப்பதாகச் சொன்னார் அவர். அந்தக் கதையை பிரசுரிக்கத் தோன்றவில்லை. அதை 86ல் திரும்பவும் எழுதினேன். அது விருட்சம் இதழில் பிரசுரம் ஆனது. 78ல் ராமராவ் பாலிகிளினிக்கில் வேலை செய்தபோது கிடைத்த தோழியைப் பற்றி (அவள் என்னை டாடி என்று அழைப்பாள்) ஒரு கதை எழுதினேன். அது ‘மையம்' பத்திரிகையில் 84 ஜனவரி - மார்ச் இதழில் வெளியானது. இதுதான் முதல் வெளியீடு. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து எழுதினேன். நிறைய கதைகள் சேர்ந்தன. கதைகள் நன்றாயிருக்கின்றன என்றார் ஆனந்த். நகுலனிடம் கதைகளைக் காட்டச் சொன்னார். இரு தினங்கள் கழித்து க.நா.சு தங்கியிருந்த அறைக்கு நகுலன் வந்திருந்தார். ஆனந்தும் நானும் சேர்ந்து என் ஏழு கதைகளை நகுலனிடம் கொடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் கடற்கரையில் நகுலனை ஞானக்கூத்தனோடு பார்த்தோம். ‘இந்தக் கதைகளை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னிடம் பணம் இருந்தால் புத்தகமாகப் போடுவேன்' என்றார் நகுலன். நகுலன் சொன்னதை ஜெயதேவன் (வி.ராஜகோபால்) மனதில் வாங்கி அவரே பதிப்பித்தார். "ஒவ்வாத உணர்வுகள்" மார்ச் 86ல் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பு அச்சில் இருந்த நிலையில் மிகத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. என் மனைவி, வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஏதேனும் வேலைக்குப் போகிறேன் என்றாள். நான் இந்த விஷயத்தை திலீப்குமாரிடம் சொன்னேன். ராயப்பேட்டை முத்தமிழ் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை இருப்பதாகப் பரிந்துரைத்தார் திலீப். என் மனைவியின் கல்வித் தகுதி 7ம் வகுப்பு. ஒரே மாதத்தில் கம்பாசிடர் வேலையைக் கற்றுக் கொண்டாள். அவளிடமுள்ள வினோத வழக்கம் என்னவென்றால் கையில் காசில்லை என்றால் முழுக்கவும் அப்செட் ஆகிவிடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வசதியான வீட்டில் நல்லபடியாக வளர்ந்தவள். என் கையில் காசு தீர்ந்து போனால் நண்பர்களிடம் கடன் வாங்கியாவது வைத்துக் கொள்வேன். ஒருதடவை சுத்தமாகக் காசில்லாமல் போய்விட்டது. நான் இரண்டு பித்தளைப் பாத்திரங்களை எடுத்து அடகு வைக்கப் போனேன். அன்றைக்குப் பார்த்து அடகுக்கடை லீவு. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் திரும்பவும் பாத்திரங்களை வீட்டில் வைத்துவிட்டு க்ரியாவுக்குப் போய்விட்டேன். நண்பர்கள் சினிமாவுக்குப் போகிற மனநிலையில் இருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நானும் சேர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அலங்கார் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.என்ன படமென்று இப்போது நினைவில்லை. திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு ‘க்ரியா கோபிகிருஷ்ணன் வான்டட் இம்மீடியட்லி. ஃபிரெண்ட்ஸ் ஆர் வெயிட்டிங்' என்று சிலைடு போட்டார்கள். கீழே போனேன். ‘உன் மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்' என்று தகவல் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக அவளைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு ஓடினேன். என் மாத்திரைகளை எடுத்துச் சாப்பிடிருப்பாளோ என்று எனக்குச் சந்தேகம். வீட்டில் பரிசோதிக்கையில் அதுதான் நடந்திருந்தது. முதலில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொள்ள முயன்றிருக்கிறாள். குழந்தை கிரஷ்ஷில் இருந்தது. குழந்தையைப் பக்கத்து வீட்டுப் பாட்டி அழைத்துக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாத்திரைதான் சாப்பிட்டிருக்கிறாள்; இதற்கு சரியான மாற்று கொடுத்து சரி செய்து விடுங்கள் என்று நான் டாக்டரிடம் சொன்னேன். போலீஸ் கேஸாகிவிட்டது. என்னை உள்ளே வைத்து விட்டார்கள். லாக்கப்பில் அல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குள். அந்த வளாகத்திற்குள்தான் நான் இருக்க வேண்டும். கேஸ் புக் செய்யப்பட்டது. அங்கிருந்த இன்ஸ்பெக்டர், ‘நான் சபரி மலைக்கு மாலை போட்டிருப்பதால் அடிக்க மாட்டேன். அடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது. உண்மையைச் சொல்லிவிடு' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எல்லாவற்றையும் அவரிடம் விளக்கிச் சொன்னேன். என் மனைவியின் இயல்பை தெளிவாக எடுத்துக் கூறினேன். போலீஸ்காரர்கள் நம்பவில்லை. அநாகரிகமான அசிங்கமான பல கேள்விகளைக் கேட்டார்கள். ‘உன் நண்பர்கள் எவரிடமாவது உன் மனைவிக்குத் தொடர்பு உண்டா?' என்றெல்லாம் கேட்டர்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 1986 புத்தாண்டு அன்று அந்த இன்ஸ்பெக்டர் ‘ஹேப்பி நியூ இயர்' என்று எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பித்தளைக் குடங்களை எடுத்துக் கொண்டு அடகுக் கடைக்குப் போனதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து என் மனைவியிடம் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. என் மனைவியின் உறவினர்கள் வந்தார்கள். என்னைக் கண்டித்துப் பேசி அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவள்மீது கேஸ் ஆகிவிட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு நானும் அவளும் சென்றோம். தற்கொலைக்கான முதல் முயற்சி என்று தண்டனையில்லாமல் விட்டு விட்டார்கள். கடைசியாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு வரும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் நன்றி சொன்னேன். ‘நீ நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம். உன் மனைவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அது போதும்' என்றார் அவர். எனக்கு மனது கேட்கவில்லை. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணனிடம் இதைப் பற்றிப் பேசினேன். ‘டாக்டர் இல்லாத இடத்தில்' எனும் புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார். நான் கொடுத்த புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் முதலான எல்லா செலவுகளையும் க்ரியா ராமகிருஷ்ணன்தான் பார்த்துக் கொண்டார். நான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நான்கு நாட்களும் க்ரியா ஸ்தம்பித்து விட்டது. அதன் பிறகு தனி ரூம் எடுத்துத் தங்கினேன். கொருக்குப்பேட்டையில் இருந்த என் மாமியாரிடம் குழந்தையின் படிப்பு தடைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். 3.30 மணிக்குக் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டுபோய் மாமியார் வீட்டில் விடுவேன். குழந்தை ராணிஸ்ரீ எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்தாள். ஒரு மாதம் கழித்து என் வீட்டிலிருந்து சாமான்களை மாமியார் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் 86ல் ஒவ்வாத உணர்வுகளுக்கும், க.நா.சு.வின் கவிதைப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா. சிட்டாடல் பதிப்பகம் - மையம் வெளியிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரியா டிக்‌ஷனரி ப்ராஜக்ட் 2.6.86ல் தொடங்கியது. நானும் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களும் ஆரம்ப கட்ட வேலைகளுக்காகச் சிதம்பரத்தில் மறைமலை நகரில் இருந்தோம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் என்.குமாரசாமி ராஜா அவர்களின் உதவி டிக்‌ஷனரிக்குத் தேவைப்பட்டதால்தான் சிதம்பரத்தில் இருக்க வேண்டி வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் நான் இதை நிச்சயமாகக் கூற முடியாது. Policy decisions பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் பா.ரா.சுப்பிரமணியனின் வீடு தஞ்சாவூரில் இருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் சிதம்பரத்திலிருந்து அவர் தஞ்சாவூர் புறப்படுவார். நான் சென்னை வருவேன். திங்கட்கிழமை சிதம்பரத்தில் சேர்ந்து கொள்வோம். 87ல் வேலையைச் சென்னையில் செய்ய இங்கு வந்தேன். சென்னையில் ப்ராஜக்ட் ஆபிஸ் அண்ணாநகர் (வெஸ்ட் எக்ஸ்டென்ஷன்)லிருந்தது. நான் கொருக்குப் பேட்டையிலிருந்து வருவது சிரமம். எனவே பாடியில் வீடு எடுத்தேன். 86லிருந்து மனைவி ஜனசக்தியில் கம்பாசிடராகப் பணியில் சேர்ந்தாள். சிறிய கருத்துவேற்றுமை காரணமாக 29-7-89ல் நான் க்ரியாவிலிருந்து வெளியேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1992ல் டிக்‌ஷனரி வெளியான பிறகு நான் மீண்டும் க்ரியாவின் நண்பனானேன். ஒன்றே ஒன்று இங்கு சொல்லத் தோன்றுகிறது. ஒரு சூழல் உறவுக்கு ஏதுவாக இல்லாவிட்டால் அந்தச் சூழலைவிட்டு பிரச்சினைக்குரிய நபர் விலக வேண்டும்; அது எவ்வளவு பெரிய ஊதியத்தை ஈட்டித்தரும் சூழலாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு தார்மீகமான செயல் என்றே கருதுகிறேன். அப்பொழுதுதான் சூழலுக்கு வெளியேயாவது நட்பு நிலைக்கும். எனக்கு நட்பு மிக மிக முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டாக இருந்த 3000 ரூபாயில் செலவுகளைப் பார்த்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் கழித்து வேலை கிடைத்தது. டாக்டர் சாரதா மேனனிடம் வேலை. இவர் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்தார். சைக்யாட்ரிக் சோஷியல் ஒர்க்கர் பணி எனக்கு. அவருடைய மாலை நேரத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை நேர்கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குதலும், குழு சிகிச்சையும் செய்ய வேண்டும். அது பகுதி நேரப் பணி.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே Guild of Service-ல் நண்பர் ஒருவரின் சிபாரிசினால் உதவு சமூகப் பணியாளர் வேலை கிடைத்தது. இந்த வேலையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அங்கு முக்கியமான நெருக்கமான ஒரு தோழி இருந்தாள். ‘ஓட்டம்' கதையில் வருபவள். என்னுடன் எட்டு மாதங்கள் வேலை செய்துவிட்டு ஹாங்காங் போய்விட்டாள். அவளிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அங்கேயே அவளுக்குத் திருமணம் முடிந்தது. ஒரு வருடம் கழித்து வந்தாள். வருடத்தில் மூன்று முறை அவளைப் பார்க்கப் போவேன். எனக்கு மனநலப் பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை. எழுதிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த், நகுலன், க.நா.சு., ஜெயதேவன், சுந்தர ராமசாமி முதலானோர் நண்பர்களானார்கள். வெங்கட் சாமிநாதன் இண்டியன் எக்ஸ்பிரஸில் என் கதைகளைப் பற்றி Curving Downwards என்று மதிப்புரை எழுதினார். பிறகு Economic Timesஸிலும் குறிப்பிட்டிருந்தார். ஞானக்குத்தன், ஆர். ராஜகோபால், ரா. ஸ்ரீனிவாசன், அழகிய சிங்கர் ஆகியோருடனும் நெருக்கமான தொடர்பிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்ததிலேயே மிகவும் நல்ல வேலை இது (Guild). ஒரு சொர்க்கம் போல. சகல சுதந்திரங்களும் உண்டு. 2500 ரூபாய் மாதச் சம்பளம். பதவி உயர்வு கிடையாது. நான் M.A. படிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். எம்.ஏ. படித்தால்தான் பிரமோஷன் எனும் நிலையில் தபால் வழியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சோஷியாலஜி சேர்ந்து அதை முடித்தேன். சான்றிதழ் வந்த உடனே பணி உயர்வு கேட்டதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அலுவலக சூழ்நிலை அடியோடு மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பிற்காக 5000 ரூபாயாவது செலவழித்திருப்பேன். 60 நாட்களாவது இதற்காக விடுப்பு எடுத்திருப்பேன். நான் இழப்பீடு கேட்டேன். யாரும் உதவி செய்யவில்லை. அந்தச் சமயம் பார்த்து எனக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. என் உடல்நிலை பெரிதும் மோசமடைந்தது. மூச்சுவிட இயலவில்லை. மருத்துவச் செலவு பூதாகரமாய் நின்று அச்சுறுத்தியது. வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்தேன். இதன்மூலம் கிடைத்த 28,000 ரூபாயில் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டேன். ‘கில்டி'ல் ஏழரை வருட காலம் வேலை பார்த்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘கில்ட்'ல் இருக்கும்போது 93ல் நானும் சஃபி மற்றும் லதா ராமகிருஷ்ணனும் ‘ஆத்மன் ஆலோசனை மையம்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். இதன் முக்கியமான செயல்பாடு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோசனை வழங்குவது. மையம் மூன்றரை வருடங்கள் இயங்கியது. ஆரம்பக் கட்டத்தில் நிறைய கிளையன்ட்ஸ் வந்தார்கள். என்னுடைய மனநல பாதிப்பினாலும், பிரமோஷனுக்காக எம்.ஏ. படித்துக் கொண்டிருந்ததாலும் தொடர்ந்து அதில் செயல்பட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கில்ட் ஆஃப் சர்வீஸில் ஒரு ஃபால்ஸ் ரிப்போர்ட் எழுதப் பணித்தார்கள். ஒவ்வொரு சோஷியல் ஒர்க்கருக்கும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி வசதி, மருத்துவ வசதி, வீட்டின் - வீட்டுக் கூரையின் நிலை என்ன என்பது பற்றியெல்லாம் கண்காணிக்க வேண்டும். வீட்டுக் கூரை பிரிந்தோ சேதமுற்றோ இருந்தால் அதைச் சரி செய்ய உதவ வேண்டும். லண்டன் ப்ராஜக்ட் இது. நாங்கள் டெல்லி கில்ட் ஆஃப் சர்வீஸ் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகப் பணியாளர் சுமார் 250 குடும்பங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இது அவ்வளவு சுலபமில்ல. ஆகவே பணியாளர்கள் ஆய்வு செய்யாமலேயே அலுவலகத்தில் இருந்தபடி அறிக்கைகளைத் தயார் செய்தார்கள். நானும் அவ்வாறு செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டேன். பார்க்காமல் ஆராயாமல் பொய்யாக என்னால் அறிக்கை எழுத முடியவில்லை. ஆனால் இதை நான் செய்தே தீர வேண்டியிருந்தது. அப்படிச் செய்யாமல் பணியில் நீடிக்க இயலாது. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பீதியினால் 3250 மில்லிகிராம் வீரியம் கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். தடயங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. கதவைத் தாழ் போடாததால் திறந்து பார்த்த என் மனைவி உடனடியாக ஒரு ஆட்டோ பிடித்து கே.எம்.சி.க்குக் கொண்டு சென்றாள். அங்கே என்னைச் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தார்கள். ஆட்டோ டிரைவரும் என் மனைவியும் வற்புறுத்திக் கெஞ்சியதன் பேரில் சேர்த்துக் கொண்டார்கள். ஏழு நாட்கள் சுத்த மயக்க நிலையில் கிடந்தேன். இதனாலும் என்னால் ஆத்மனைக் கவனிக்க இயலவில்லை. முழுதுமாக சஃபிதான் பார்த்துக் கொண்டிருந்தார். சில குறிப்பிட்ட கேஸ்களை லதா ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்டார். இதனால் கில்ட் ஆஃப் சர்வீஸ் வேலைக்குப் பாதகம் ஏற்படவில்லை. டாக்டர் சாரதா மேனன்தான் சிகிச்சை கொடுத்தது. போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டார்கள். டிஸ்சார்ஜ் ஆன நாளன்று மாலையில் டாக்டர் சாரதா மேனனைப் பார்த்தேன். மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்கள். இந்த விஷயம் நிறைய நண்பர்களுக்குத் தெரிந்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து தொடர்புடையது, அல்லாதது என்று பல இடங்களில் சிறிய சிறிய ஃப்ரீலான்ஸ் வேலைகள் பார்த்தேன். மனநிலை குன்றிய பையனை அழைத்துச் சென்று கம்ப்யூட்டர் செண்டரில் விட்டு வருதலும் அவற்றில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் இண்டெக்ஸர் வேலை க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாகக் கிடைத்தது. 4320 ரூபாய் சம்பளம். இதுவரை வாங்கியதிலேயே அதிக சம்பளம் இதுதான். இங்கு வேலை பார்த்த காலம் ஒரு வருடம் மூன்று மாதங்கள். என்னுடைய உற்ற சக-ஊழியர் ஒருவரை உதவி இயக்குனர் ஒருவர் அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் அந்த நல்ல வேலையைத் துறந்தேன். பொருளாதார பலகீனம் தற்போதும் நீடிக்கிறது. அடிக்கடி நண்பர்களின் உதவி தேவைப்படுகிற நிலை. இரண்டு மனநோய்க் குறிகள் இன்னும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. Obsessive ruminations 2. Obsessive Depression போன்ற பிரச்சினைகள் எனக்கிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது தாறுமாறான எண்ணங்கள். நான் நினைக்காமலேயே தானாகவே எண்ணங்கள் வருகின்றன. மோசமான எண்ணங்கள் அதிகம் வரும். இது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த மோசமான எண்ணங்கள் என்னுள் அதிகமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, ஆட்டிப்படைக்கும் மனச்சோர்வு. இதற்கான சிகிச்சையை டாக்டர் சாரதா மேனனிடம் சமீபகாலம் வரை பெற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது ESI ல் சிகிச்சை எடுத்து வருகிறேன். மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான் எழுதுவதில்லை. என் இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான நிலையிலிருந்தது என் மகளின் திருமணத்தின் போதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/2009/04/blog-post_21.html"&gt;(பகுதி 4)&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியிருந்தாலும் ஒரு நிரந்தர வேலைக்கான அவசியம் அதிகரித்து வந்தது. மனநிலை குன்றியவர்களுக்கான பள்ளி நடத்திய ஜலாலுதீன் எனும் நண்பரும், நந்தன் பத்திரிகையின் நண்பர் ஒருவரும் என்னை நக்கீரனில் சேர்த்து விட்டார்கள். ப்ரூஃப் ரீடர் உத்தியோகம். 11 மணிநேர வேலை. 2000 ரூபாய் சம்பளம். இடையிடையில் சில கிஃப்ட்ஸ் கிடைக்கும். போனஸ் உண்டு. இங்கே நான் காலந்தவறாமையை மிகச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. கோபால் மிகவும் தங்கமான மனிதர். கோபாலின் தம்பிதான் ஆர்ட் டைரக்டர். அவருடைய பிஹேவியர் சரியில்லை. எப்போதும் அதிகார தோரணை உண்டு. ஒத்துப் போக இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் இரவு 9.30 வரை வேலை பார்த்துவிட்டுச் சென்றதால் அடுத்த நாள் 11.30க்குத் தான் அலுவலகம் வர முடிந்தது. தாமதத்திற்காக முன்கூட்டியே என்னால் ஃபோன் செய்து சொல்ல இயலவில்லை. காலையில் கொஞ்சம் தூங்கிவிட்டேன். ‘ஏன் லேட்டா வர்றீங்க, ஃபோன் பண்ண முடியாதா?' என்று கத்திப் பேசினார் ஆர்ட் டைரக்டர் பிறர் முன்னால். இரவுகளில் சில சமயம் அலுவலகத்திலேயே தங்கவேண்டியிருந்தது. நக்கீரனில் இருக்கும்போதுதான் என் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. (10 செப்டம்பர் 2000). ஒரு வருடம் 3 மாதம் நக்கீரன் வேலை. கோபாலிடம் நான் வாங்கிய கடன் 4060 ரூபாயை இன்னும் என்னால் திருப்பித்தர முடியவில்லை. எப்படியிருந்தாலும் அதைக் கொடுத்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமோகமாக நடந்தது என் மகள் ராணிஸ்ரீயின் திருமணம். நண்பர்கள் உதவினார்கள். கேட்டதற்கு அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். 28,000 ரூபாய் செலவானது. பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மூன்று தோழர் தோழியரின் பேருதவியால்தான் திருமணம் நடந்தது. அவர்கள் தர்மசங்கடமாக உணர்வார்கள் என்று கருதி, பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1993ஆம் ஆண்டு டேபிள் டென்னிஸை எழுதிக் கொண்டிருந்தபோது எனது முன்னாள் மனைவி நான்ஸியை மீண்டும் பார்க்கவேண்டுமென்று தோன்றியது. சென்னையில்தான் அவர் இருந்தார். சந்தித்தேன். இரண்டு குழந்தைகளுடன் கணவருடனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார். கணவர் புள்ளிவிவரவியல் அதிகாரி. அந்தக் குழந்தைகள்மீது கொண்ட பிரியத்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினேன். நான்ஸி நெகிழ்ந்து போனார். நல்ல நிலைமையில் இருப்பதால் தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டார். அவர் பெயர் அப்போதும் நான்ஸி கார்ல்ராஜன் என்றே இருந்தது. அவரது பழைய பெயருக்கே மீண்டும் மாறிக் கொள்வதற்காக விடுதலைப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த சந்திப்பு அது. விடைபெறும்போது, இப்போதாவது கடவுளை நம்புகிறீர்களா என்றார் நான்ஸி. இல்லை என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் படைப்புகள் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் எழுதுவதில்லை. பிறர் எழுதுவதையும் விரும்புவதில்லை. எழுத்து ஒரு உழைப்பு. அதற்கான மதிப்பென்று நிச்சயம் உண்டு. எந்த ரூபத்திலிருந்தாலும் குரூரத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை. விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது. மென்மையான தொனியில் ஒன்றின் மீதான அபிப்ராயங்களைச் சொல்லலாம். இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது. 1993 பிப்ரவரியிலிருந்து மே வரை ஒரு வினோத மனநிலையிலிருந்தேன். அது மிகவும் பிரகாசமான நிலை. அந்த மனநிலையில் எழுதப்பட்டதுதான் ‘டேபிள் டென்னிஸ்'. அது ஒரு பறத்தல் போன்ற உணர்வு. அந்தப் பறத்தல் மனநிலையில் அறிவு பாதிக்கப்பட்டுவிடவில்லை. எம்.ஏ. நான்கு பேப்பர் பரிட்சை எழுதி மூன்றில் தேர்ச்சி பெற்றேன். வேறு எந்தப் படைப்பையும் பாதிப்பான மனநிலையில் எழுதியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி... என்பது போலத்தான். என் சில கதைகளில் அக்கிரமங்களையும் முறைகேடுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக உளவியல் துறை, சமூகப்பணித் துறை போன்ற தொண்டு நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை எழுதியிருக்கிறேன். மனநிலை மாறுபாடு என்றால் என்ன என்று மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக 59 மனநோயாளிகளைப் பேட்டி எடுத்து ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாசித்த எதிர் உளவியல் தொடர்பான எட்டு புத்தகங்களிலிருந்து முக்கியமான சில விஷயங்களை அதில் ‘சில செய்திகள் சில சிந்தனைகள்' எனும் தலைப்பில் எழுதியிருக்கிறேன். முஸ்லீம் ஹஸ்ரத்துகள், மலையாள மாந்திரீகர்கள், இந்து சுவாமிஜிகள், பாதிரியார்களைச் சந்தித்து பேட்டி எடுத்து மனநோய்க்கான சிகிச்சையாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் ‘இன்னும் தொடரும் பழமை' எனும் தலைப்பில் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து எழுதினால் பிரச்சினையாகிவிடும் என்று ஒரு நண்பர் கூறியதால் கோவையை மையமாக வைத்து அந்தப் புத்தகத்தை எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தின் மீதான ஒரு நல்ல மதிப்புரையை பாவண்ணன் தினமணியில் எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாதீன நிலைக்கும் சுவாதீனமில்லாத நிலைக்கும் இடையில் உள்ள மெலிதான இழையை நீங்கள் அறுத்துவிட்டீர்கள் என்றார் யுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதும்போது மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவதில்லை. முழுமையின் பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரையில் நான் எழுதியவை எனக்குத் திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி நான் எழுதமாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பமில்லை. நான் எழுதிய எல்லாக் கதைகளும் (சில கதைகளைத் தவிர) யதார்த்தக் கதைகள்தான். கற்பனையும் நிஜமும் கலந்தவை. ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை' என்ற கதை மட்டும்தான் சர்ரியலிஸக் கதை. இது சோதனை முயற்சி. ‘மிகவும் பச்சையான வாழ்க்கை' எனக்கு மிகவும் பிடித்த கதை; ‘காணி நிலம் வேண்டும்' செண்டிமெண்ட் கதை. எனக்கு ஆதவன் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்க அவரால் முடிகிறது. நகுலன், சுந்தர ராமசாமியையும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. எனக்கு வாழ்க்கையே முக்கிய பிரச்சனையாக இருப்பதால் படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது. நண்பர்களிடமிருந்து புத்தகங்கள் இரவல் பெற்றே படிப்பேன். என் சேகரிப்பில் ஏற்கனவே ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கோணங்கியின் கதையில் உள்ள ஓட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் புரியவிலை. அந்த ஓட்டம் தடைப்படாமல் நீண்டு கொண்டே போகும். ஒரு கதை முடிந்த பிறகும்கூட அதை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர ராமசாமி தங்கு தடையற்று நன்றாகப் பேசக்கூடியவர். அது பெரிய பலம் அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சாமர்செட் மாம், ஆல்டஸ் ஹக்ஸ்லெ என் விருப்பத்திற்குரியவர்கள். சாமர்செட் மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன். எரிக்க யாங், பேர்ல் எஸ் பக், மேரி கோரல்லி, ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர், தாஸ்தாயெவெஸ்கி, மார்க்குவெஸ் ஆகியவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இலக்கியத்திற்கு இதுவரை எந்தப் பரிசும் பெற்றதில்லை. பிரசுரிக்கத் தகுந்தவை என்றளவில் கணையாழில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இதுவரை மூன்றே மூன்று தடவைகள் இலக்கியவாதியாக இருப்பதற்காகக் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நண்பர் வே.மு. பொதியவெற்பன் அவர்கள் தன் பொன்விழாவில் ‘பொதிகை' பொன்விழா மலரை என்னை வெளியிடச் சொன்னார். நானும் இதற்கென்றே குடந்தை சென்றிருந்தேன். இது 30.4.2000 அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி. மிகவும் மனநெகிழ்வு தந்த ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;2. திருப்பூர் தமிழ்ச் சங்கம் 20.1.2002 அன்று எனக்கு நன்கொடையாக ரூ 4000 கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;3. National Folklore Support Centre நடத்திய விழாவில் 9.3.2002 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் கௌரவிக்கப் பட்டேன். இது எம்.டி.எம். எனக்குச் செய்த மறக்கவியலாத சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியக் கூட்டங்களுக்கு நான் அதிகம் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவங்களை எழுதுவதற்கு கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்து விடலாம். Will Durant எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி எனும் புத்தகம் மேற்கத்திய தத்துவங்கள் எல்லாவற்றையும் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன். ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளத் தீர்மானித்தால் சமூக பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. அது பாதுகாப்பான உறவாக இருந்தால் சரி. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், அந்த உணர்வு இருக்கும்வரை. இதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஒரு மனிதன் 60 வயதுவரை வாழ்கிறான் என்றால் நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு. இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்று சொல்கிறேன். கற்பு எப்படிப் புரிந்து கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அது தேவையற்றது. திருமணத்தை மீறிய உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;பெண் தான் விரும்புகிறபடி உறவு வைத்துக்கொள்ளக் கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும். பாலியல் சுதந்திரம் மிகவும் அவசியமானது. 9ம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சக மனிதனை விரோதியாகக் கருதுவது மிககொடூரமான விஷயம். தனக்கும் சக மனிதனுக்குமான சமூக இடைவெளிதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அலுவலகங்களில் ஊழியரென்றும் அதிகாரி என்றும் வேறுபாடு இருக்கக்கூடாது. அப்போதுதான் சுமுகமாக இருக்கும். இந்திய நிலையை முதலாளிகள் புரிந்துகொள்ளவில்லையென்று தெரிகிறது. உதாரணமாக சரியான நேரத்திற்கு ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இது நிச்சயம் நடைமுறையில் பலன் தராது. பஸ் சீக்கிரம் வராது. சில வேளைகளில் பஸ்ஸே இருக்காது. குளிப்பதற்கு பாத்ரூம் கிடைக்காது. இது போன்ற காரணங்களால்தான் மிகவும் தாமதமாகிவிடும். இந்த விஷயம் நிறைய சிக்கல்களுக்குக் கொண்டுபோகும். இதையெல்லாம் கடந்து அலுவலகம் சென்றடைந்த ஊழியரை ‘ஏன் தாமதம்' என்று அதிகாரி கூச்சல் போட்டால் ஊழியர் அப்செட் ஆகிவிடுகிறார். அவரால் அன்று முழுதும் சரியாக வேலை செய்ய இயலாதபடியாகிறது. இதனால் அலுவலகத்திற்குத்தான் நஷ்டம். இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணமாகச் சொன்னேன். இதைப்போன்று அனேக விஷயங்கள் உண்டு. இந்த நடவடிக்கைகளால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 17 நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பணி அனுபவத்தில் நான் மூன்று நல்ல உயர் அதிகாரிகளைத்தான் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. A S Kalyanaraman, Sr. Field Manager, IMRB&lt;br /&gt;2. Cre-A: S. Ramakrishnan&lt;br /&gt;3. Dr M Saradha Menon&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுகிற எழுத்தை எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போதுதான் அதில் நேர்மை இருக்கும். எழுத்தை மிக உணர்ந்துதான் எழுதுகிறோம். ஆகையால் அந்த உணர்வோடு வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி என் கதைகளைப் படிக்க மாட்டாள். அவளுக்கு இலக்கியப் பழக்கம் குறைவு. பக்கத்திலிருக்கும் சிவன் கோயிலில் கதா காலட்சேபம் நடந்தால் போவாள். சுகி சுப்பிரமணியம் பேச்சிலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தனியன். எந்த அமைப்பையும் குழுவையும் சார்ந்து இயங்குபவன் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனங்களில் வேலை பார்ப்பது இதுவரை சிக்கலாகவே இருந்திருக்கிறது. இதனால் நான் ஒரு எதிர் நிறுவன ஆளுமை என்று என்னைப் பற்றி நினைக்கிறேன். இதைப்பற்றி ‘தூயோன்' தொகுப்பில் ‘பரிணாமம்' என்ற கதையில் சொல்லியிருக்கிறேன். அனேக சிரமங்கள் இருந்தாலும் மன நிறைவான தருணங்களும் உண்டு. நண்பர்களாலும் தோழியராலும் நிறைந்தது என் வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை எப்படி மாற்றவேண்டுமென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது மாதம் முன்பு, தொடர்ந்து மூன்று வாரங்கள் சுய நினைவில்லாமல் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். டாக்டர் சாரதா மேனன் ‘மூன்று வாரங்கள் உங்கள் மெமரி இரேஸ் ஆகியிருந்தது' என்றார்கள். இது எப்படி நடந்தது, என்ன காரணமென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் சில மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது உடனடித்தேவை - ஒரு வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;(மழை ஜூலை 2002ல் வெளியானது)&lt;br /&gt;&lt;br /&gt;=========================================&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்  &lt;a href="http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=64"&gt;கோபி கிருஷ்ணன் : வலி தரும் பரிகாசம்&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் எனது சிறுகதையான தெருவின் சுபாவத்தைத் தேர்வு செய்திருந்தார். அந்தக் கதையைப் பற்றி தபால் கார்டு ஒன்றில் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எனக்கு எழுதியிருந்தார். அப்படித்தான் கோபி கிருஷ்ணனுக்கும் எனக்குமான உறவு துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் முன்னதாக கோபியின் கதையொன்றை கணையாழியில் வாசித்திருக்கிறேன். அவரது குறு நாவல் ஒன்றும் என்னுடைய குறுநாவல் ஒன்றோடு தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்வாகியிருந்தது. கோபியின் குறுநாவலை வாசித்தபோது அதன் பரிகாசமான குரலும், அன்றாட வாழ்வை அவர் காணும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் யார் கோபிகிருஷ்ணன், எங்கேயிருக்கிறார் என்று நான் அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இனி இதழில் புயல் என்றொரு கோபியின் கதை வெளியாகியிருந்தது. அந்தக் கதையைப் பலமுறை படித்திருப்பேன். எதிர்பாராத ஒரு மழை நாளைப் பற்றியது கதை. கதையின் மையமாகபுயல் இருந்தபோதும் கதை மத்தியதர வர்க்கக் குடும்பம் ஒன்றில் நிகழ்கிறது. கதையை கோபி எழுதியுள்ள விதம் அற்புதமானது. குரலை உயர்த்தாமல் கதையின் வேகம் அதிகமாகிக்கொண்டே போகும். கதை முடியும்போது கதையின் மையம் புயல் அல்ல நமது அன்றாட வாழ்வின் நிலைகுலைவு என்பது புரியத்துவங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதையை வாசித்த நாளில் இருந்து கோபி கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அவர் சென்னையில் வசிக்கிறார் என்ற விபரத்தைத் தவிர வேறு எதையும் அப்போது அறிந்துகொள்ள முடியவில்லை. பிறகு அவரது ஒவ்வாத உணர்வுகள் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதிலிருந்த கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி கிருஷ்ணனின் கதைகள் நகரவாழ்வின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மனிதர்களைப் பற்றியவை. குறிப்பாக வாழ்விடத்தில் அவர்கள் கொள்ளும் சிக்கல்கள், பிரச்சினைகள் அதன் ஊடாக வெளிப்படும் அதீத மனவோட்டங்கள் இவை அவரது கதைகளின் அடிநாதம். கோபி கதைகளை மிகச் சிறியதாகவே எழுதக்கூடியவர். நான்கு பக்க அளவிற்குள் பெரும்பான்மைக் கதைகள் முடிந்துவிடுகின்றன. ஆனால் இந்தக் கதைகள் நம்மைச் சுற்றிய சமூகவாழ்வைப் பிரதிபலிக்கக்கூடியவை. சினிமா, அரசியல், அதிகாரம், நகரவாழ்வின் வேகம் என்று பெருநகரின் பிரிக்கமுடியாத அம்சங்கள் அவரது கதைகளில் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கோபியின் கதாபாத்திரங்கள் எதிர்பாராத நிலைகுலைவைச் சந்திப்பவர்கள். அல்லது ஏதோவொரு குற்றபோதத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டவர்கள். எல்லாப் பிரச்சினைகளுக்குப் பிறகும் உலகின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனச்சிதைவு கொண்டவர்கள் என்று அறியப்பட்டு ஒதுக்கப்படுகின்றவர்கள் மீது அவரது பெரும்பான்மை கவனம் குவிகிறது. மனச்சிதைவின் பின்னால் உள்ள காரணங்களும் மனச்சிக்கல்களுக்கு, குடும்பம் என்ற அமைப்பு எவ்வளவு ஆதாரமாக உள்ளது என்பதையும் அவரது கதைகள் விவரிக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;1990களின் துவக்கத்தில் சென்னையில் சுற்றியலைந்த போது ஒருநாள் மதிய நேரத்தில் தி.நகர்  கிருஷ்ணவேணி திரையரங்கம் அருகில் தற்செயலாக கோபி கிருஷ்ணன் கடந்து போவதைக் கண்டேன். அது கோபி கிருஷ்ணன்தானா என்று நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அவரது புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். ஆகவே அது கோபியாகத்தான் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பின்னாடியே சென்றேன். அவர் பேருந்து நிலையத்தின் எதிரிலிருந்த டீக்கடையில் நின்று கொண்டு தேநீர் அருந்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் சென்று நீங்கள் கோபி கிருஷ்ணன்தானே என்று கேட்டேன். ஆமாம் என்று தலையசைத்தார். நான் எஸ். ராமகிருஷ்ணன், கணையாழியில் எனது கதை வெளி வந்திருக்கிறது என்றதும் உடனே என் கைகளைப் பற்றிக் கொண்டு உற்சாகமாக நல்லா எழுதிட்டு வர்றீங்க நான் உங்க சிறுகதையை இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஞாபகமிருக்கா என்று கேட்டார். பின்னர் இருவருமாகத் தேநீர் குடித்துவிட்டு அங்கேயே பேசிக் கொண்டிருந்தோம். பேருந்தின் இரைச்சல்களை மீறி எங்கள் பேச்சு தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கோபியின் பார்வை இடையிடையே என் பேச்சைக் கடந்து அருகில் இருந்த கடையின் ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் மீது குவிந்து இருந்தது. அந்த மனிதன் கசக்கி எறியப்பட்ட காகிதம் ஒன்றைக் கிழித்து வீசியபடியே உட்கார்ந்திருந்தான். அவன் தலை செம்பட்டை படிந்து பற்கள் காவியேறிப் போயிருந்தன. அழுக்கேறிய பேண்டும் சட்டையும் போட்டிருந்தான். அவனது வலது கையில் பெரிய தழும்பு தெரிந்தது. வயது நாற்பதைக் கடந்திருக்கும். முகத்தில் இறுக்கம் படிந்து போயிருந்தது. தன் கைகளை வேகமாகக் காற்றில் வீசி அவன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி அவனை கையைக் காட்டி அவன் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறான் பாருங்கள் என்று சொன்னார். இருவருமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவன் செய்கைகள் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை, அதில் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவிதம் உருவாகிறது. அவன் மிக உற்சாகமாக இருக்கிறான்  என்று சொல்லியபடியே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தான் புகை பிடிக்கலாமா என்று என்னிடம் கேட்டார். நடந்து சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு வந்து பற்றவைத்த படியே திரும்பவும் அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு என்னிடம் நீங்கள் முன்றிலுக்கு வந்தீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அருகில் ஆத்மன் ஆலோசனை மையம் என்ற ஒன்றை, தானும் நண்பர் சபியும் சேர்ந்து திறந்திருப்பதாகவும் அதற்காகத் தான் மாலை வேளைகளில் அங்கே வந்து போவதாகவும் அந்த மையம் புகை மற்றும் மதுப் பழக்கங்களில் இருந்து மீண்டுவர நினைப்பவர்களுக்கான ஆலோசனையைத் தருகிறது என்றார். நான் தலையசைத்துக்கொண்டேன். பிறகு அவராகவே அந்தப் பழக்கங்கள் என்னிடமே இருக்கிறது. ஆனாலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதை மீறிச் செல்லும்போதுதான் ஆலோசனைகள் தேவை. தன்னால் அதை ஒரு மருத்துவச் சேவையாக  எடுத்துச் சொல்லவும் மாற்றவும் முடியும் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி கிருஷ்ணனின் சிரிப்பு மிக அலாதியானது. இயல்பாகவும் அடக்க முடியாததாகவும் சில வேளைகளில் வெளிப்படும். கோபி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர் என்பதை அருகில் இருந்து சில முறைகள் கண்டிருக்கிறேன். முதல் சந்திப்பிலே என்னிடம் கோபி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை தஸ்தாயெவ்ஸ்கியிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “My friends, God is necessary to me, because he is the only being that I can love eternally.” என்ற அவரது பதில் குழப்பமாக இருக்கிறது, திடீரென அது நினைவிற்கு வந்தது. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நிறைய நேரங்களில் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது என்றபடியே நீங்கள் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் அந்தத் தேநீர்க்கடையில் இன்னொரு தேநீர் குடித்தபடியே தஸ்தாயெவ்ஸ்கி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக  இடியட்  என்னும் நூலைப் பலமுறை வாசித்திருப்பதாகச் சொல்லியபடியே   குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெற்றுள்ளதாக Talking nonsense is man's only privilege that distinguishes him from all other organisms என்ற வரியைச் சொல்லியபடியே இது மிக நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது  என்று அவராகச் சிரித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருமாகப் படியேறி ஆத்மன் ஆலோசனை மையமிருந்த வளாகத்திற்குள் சென்றோம். நான் முன்றில் புத்தகக் கடைக்கும் அவர் ஆலோசனை மையத்திற்குள்ளமாகப் பிரிந்துவிட்டோம். முன்றில் கடையில் இருந்த எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்கள் கோபி உங்க கூட வந்த மாதிரி இருந்தது. இருக்கானா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அவர் தன்னிடம் படிக்கக் கேட்டதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அது டி.ஹெச்.லாரன்ஸின் யீஷீஜ் என்ற புத்தகம். சில நிமிசங்களுக்குப் பிறகு கோபி வந்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைபிடிப்பதற்காக கோபி முன்றிலைக் கடந்து அருகில் இருந்த வெற்று வெளிக்குச் செல்வார். அப்போது குனிந்த தலையோடு மிக மெதுவாகவே கடந்து செல்வார். தனியே புகைபிடித்துவிட்டு வேகமாகக் கடந்து போய்விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மன் ஆலோசனை மையத்திற்கு யார் வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நான் ஆவல் கொண்டதில்லை. ஆனால் அங்கே வரும் கோபி கிருஷ்ணனோடு பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை அவர் சூளைமேட்டுப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரருடன் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பக்கமிருந்த பொன்விஜயன் அச்சகத்தில் கல்குதிரை ஓடிக் கொண்டிருந்தது. ஆகவே அதைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எதிரே வந்தார் கோபி. வெள்ளைக்காரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மூவருமாகத் தேநீர் அருந்தச் சென்றோம். அவர் பேசிய மிக அழகான ஆங்கிலம் என்னை வியப்பூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மறுநாள் பேருந்தில் இருவரையும் மறுபடி பார்த்தேன். அந்த வெள்ளைக்காரன் ஒரு அமெரிக்கன் என்று சொல்லி ஆய்வுப் பணிக்காக வந்திருக்கிறான் என்றார். அவருக்கு நிறைய வெளிநாட்டு நண்பர்கள் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி அவ்வப்போது சிறுகதைகள் எழுதக்கூடியவர். தனது கதைகளைப் பற்றி அவர் அதிகம் பேசிக் கொண்டதில்லை. கதைகள் நன்றாக உள்ளது என்று பாராட்டும்போது கூட அவர் சிரித்துக்கொள்வார். அதுபோலவே வேறு எந்த எழுத்தாளரையும் பற்றி அவர் கடுமையாகப் பேசியது கிடையாது. கோணங்கியின் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ கதையைப் படித்து விட்டு மிக நன்றாக வந்திருக்கிறது. அதுபோல தானும் ஒரு கதையை எழுதிப் பார்த்ததாகச் சொன்னார். தன்னைப் பற்றியோ தனது மன உளைச்சல்கள் பற்றியோ அவர் அதிகம் சொல்லியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை அவரைத் தற்செயலாக அம்பத்தூர்ப் பகுதியில் பார்த்தேன். தன் வீடு அருகில்தான் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச் சென்றார். மிகச் சிறிய குடியிருப்பு. எளிமையான குடும்பம். தன் மனைவியைத் தான் காதலிப்பதாகவும் மனைவியைக் காதலிப்பதில் ஒரு சௌகரியமிருக்கிறது, அதற்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை என்றும் சொல்லிச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கதைகளில் அவரது வசிப்பிடமும் அதன் நெருக்கடியும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. அப்படிப் பதிவான கதைகளில் ஒன்றில் அண்டை வீட்டுக்காரன் ஒருவனின் காயப்போட்ட ஜட்டி ஒன்று காணாமல் போய்விடுகிறது. உடனே அந்தக் குடித்தனத்தில் இருந்த ஆண்கள் அத்தனை பேரையும் ஜட்டியைக் காட்டச் சொல்லி அந்த நபரின் மனைவி வலம் வருவாள். இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என்று கோபியிடம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சிரித்தபடியே அந்தப் பெண்மணி முரட்டுத்தனமானவள். தன் கணவனின் ஜட்டியை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்காவிட்டால் அப்படி நடந்து கொள்ளப் போவதாக  உரத்துக் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். உள்ளுக்குள் ஒரே நேரத்தில் அப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவலும், அதே நேரம் அவமதிப்பாகிவிடுமே என்ற உணர்ச்சியும் ஒன்றாகத் தோன்றியது. வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளுக்கு பயந்து  வீட்டிற்குப் போகாமல் இரவு வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி  மதுரையில் பிறந்தவர். தன் பால்ய வயதில் கண்ட மதுரையைப் பற்றிய நினைவுகள் அதிகம் அவருக்குள் இருந்தன. அதை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். கடைசி வரை எழுதவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உளவியல், சமூக சேவை இரண்டிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள பிரபலமான சில உளவியல் மையங்களில் பணிபுரிந்திருக்கிறார். சிகிட்சை மையங்களில் செயல்படும் அதிகாரமும் நோயாளிகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறையும் அவரை இணைந்து செயல்படவிடாமல் தடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் வேலை செய்த இடம் ஒன்றில் கையூட்டு அதிகம் நடை பெறுகிறது என்று சொல்லி வேலையை விட்டதாகச் சொன்னார். இன்னொரு அலுவலகத்தில் வெளிநாட்டுப் பணத்தை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சொன்னதால் வேலையை விடும்படி ஆனது என்றும் அப்படி  வேலை நீக்க உத்தரவு தந்த போது, தான் அந்த உத்தரவில் நாலைந்து ஆங்கிலச் சொற்கள் தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதோடு எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் இருப்பதைக் கண்டு பிடித்து உயரதிகாரிக்குத் தெரிவித்தபோது  அவர் மிகுந்த ஆத்திரத்துடன் கோபப்பட்டுத் துரத்தியதாகவும் பரிகாசத்துடன் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் தனக்கு வேலை பறிபோன விஷயத்தைக்கூட இப்படிப் பரிகாசமும் எள்ளலுமாகச் சொல்ல முடியுமா என்று தோணியது. வாழ்க்கை நெருக்கடி அவரை தினசரி படுத்தி எடுத்தபோது அவரிடமிருந்த எள்ளல் மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வு குறையவேயில்லை. அவரது மனைவி ஒரு அச்சகத்தில் பணியாற்றுகிறார் என்றும் அங்கே வேலை கடினம் என்றும் அவராகச் சில வேளைகளில் சொல்லியிருக்கிறார். அபூர்வமாகத் தன் மகளைப் பற்றி உணர்ச்சி பூர்வமான நெகிழ்வுடன் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபியின் கதைகள் மனித அவலங்களை, கீழான செயல்களை, ஒடுக்கப்படும் உணர்வுகளை, மறுக்கப்படும் பாலியலை, அடங்க மறுக்கும் மனச்சிதைவுகளைப் பேசுகின்றவை. அந்த வகையில் அவரது எழுத்திற்கான முன்னோடியாக நகுலனைக் குறிப்பிடலாம். ஆனால் நகுலனிடம் உள்ள தத்துவ சார்பு கோபியிடம் இல்லை. அது போலவே கோபியிடம் உள்ள அன்றாட உலகமும் அதன் மீதான எள்ளலான விமர்சனமும் நகுலனிடம் கிடையாது. இருவருமே தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடுபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எந்த வேலையும் செய்வதற்கு அவர் தயராக இருந்தார். சில மாதங்கள் அவர் நக்கீரன் பத்திரிகையில் பிழை திருத்துபவராக வேலை செய்தார். சில மாதங்கள் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் வேலை செய்தார். கொஞ்ச நாட்கள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் அம்பலம் என்றொரு அமைப்பின் கலை இலக்கியப் பணிகளை நான் சில மாதங்கள் ஒருங்கிணைப்புச் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் தங்களது நிகழ்ச்சி குறித்த பதிவுகளைத் தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமாக வெளியிடுவார்கள். இதற்கான மொழிபெயர்ப்பு வேலையை கோபி கிருஷ்ணனிடம் ஒப்படைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி என்னைப் பார்க்க திருவான்மியூர் வருவார். பேருந்தில் பயணம் செய்து வந்து இறங்கி நடந்து சீனிவாசபுரத்திலிருந்த அம்பலம் அலுவலகத்தில் தன் மொழியாக்கத்தைத் தந்துவிட்டு அதற்கான சொற்ப ஊதியத்தை வாங்கிக்கொண்டு போவார். அப்போது சில மணிநேரங்கள் எங்காவது நடந்து சென்று மனதில் பட்டதைப் பேசிக்கொண்டிருப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியில் உள்ள சேவியர் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்படும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய கோபி கிருஷ்ணன் நெல்லை வந்திருந்தார். அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதனால் அவர் அறையும் என்னுடைய அறையும் அருகாமையில் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் இரவு அவர் தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் சில மருந்துகள் தேவைப்படுகின்றன. தன்னோடு பாளையங்கோட்டை வரை வரமுடியுமா என்று கேட்டார். இருவருமாகக் கிளம்பி பாளையங்கோட்டை வரை சென்றோம். அவர் கேட்ட மருந்தை கடைக்காரர் இல்லை என்று சொன்னதால் வேறு ஒரு மருந்தை கோபி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்துச் சீட்டு இல்லாமல் அதைத் தன்னால் தர இயலாது என்று கடைக்காரர் சொன்னதும் தனக்கு அந்த மருந்து கிடைக்காவிட்டால் நிச்சயம் உறங்க இயலாது எப்படியாவது கொடுக்கும்படியாகக் கெஞ்சும் குரலில் கேட்டார். கடைக்காரர் மறுத்துவிடவே அங்கிருந்த ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார். அது தூக்க மாத்திரை என்றும் அதன் அளவு முன்பு தான் சாப்பிடுவதைவிடவும் தற்போது அதிகமாகி உள்ளதாகவும் அதற்கான மருந்துச் சீட்டை, தான் எடுத்துவரவில்லை என்பதால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகத் தடுமாற்றத்துடன் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நெல்லையில் இருந்த லேனாகுமார் மருத்துவத்துறை தொடர்பானவர் என்பதால் அவரை அழைத்து விபரம் சொன்னதும் அவர் எங்கிருந்தோ அந்த மாத்திரைகளை வாங்கி வந்து தந்து இந்த அளவு தூக்கமாத்திரையா சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டதும், கோபி அது தனக்குப் பழகிப்போய் விட்டது, இதைப் போட்டால் கூட பின்னிரவில் எழுந்துவிடுவேன். பிறகு விடியும் வரை விழித்தபடியே இருக்க வேண்டியதுதான் என்று அதே சிரிப்போடு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அதை மறைக்க அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். பின்னர் அறைக்குத் திரும்பிய சில நிமிசங்களில் அவர் மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உறக்கம் வரவில்லை பாதித் தூக்கமும் விழிப்புமாக அவர் வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். என் அறைக்கு வந்து தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டார். டம்ளரில் தந்தபோது அப்படியே பிளாஸ்டிக் ஜக்கை எடுத்துக் கடகடவெனக் குடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு அவரால் இயல்பாக உறங்கமுடியவில்லை என்றதும் திரும்பவும் குமாரை அழைத்துச் சொன்னதால் மாற்று மருந்து ஒன்றை வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார். விடிகாலை வரை இந்த அவஸ்தையில் இருந்த கோபி உறங்கி, காலை ஒன்பது மணி அளவில் கண்விழித்து குளித்துவிட்டு வழக்கம் போலக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் மொழியாக்க வேலையைச் செய்யத் துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அசதியும் சோர்வும் அவரது முகத்தில் பீடித்திருந்தன. சாப்பாட்டை வெகுவாகக் குறைத்திருந்தார். சிகரெட் மற்றும் தேநீர்தான் அவரது பிரதான உணவாக இருந்தன. அவரது உடல் நலத்திற்கு என்ன பிரச்சினை. ஏன் இப்படி தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அவர் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் என்பதும் அப்படியிருந்தும் நோய்மை கட்டுக்குள் அடங்கவில்லை என்பதும் நேரடியாகப் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு சில மாதங்கள் நான் கோபியைச் சந்திக்கவில்லை. ஒரேயொரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்துப் பேசிக்கொண்டோம்.  கோபி ரொம்பவும் தளர்ந்து போயிருந்தார். பிறகு அவரது புத்தகம் வெளியான சமயத்தில் தற்செயலாக நண்பர் ராஜன்குறையின் வீட்டில் சந்தித்துக்கொண்டு உரையாடினோம். கோபியின் அன்றாட வாழ்வு மிக நெருக்கடியாக உள்ளது என்று பலமுறை நண்பர் வெளிரங்கராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் கோபி இதை எவரிடமும் சொல்லிக்கொண்டது கிடையாது. ஒருமுறை  அவர் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்சரம் இதழுக்காக அவரிடமிருந்து பிராய்டு பற்றிய கட்டுரை ஒன்றைக் கேட்டேன். தன்னால் முடிந்தால் எழுதித் தருவதாகச் சொன்னார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதைத் தன்னால் எழுத முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபியின் கதைகள் மனித வலிகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக சகமனித துவேசங்கள் அவமதிப்புகள் அதிகாரத்தின் பெயரால் நடைபெறும் கீழ்மைகள், பாலியல் வேஷங்கள், சமூக வாழ்வில் காணப்படும் இரட்டைத்தன்மை. வெகுமக்களின் ரசனை சார்ந்த வெளிப்பாடுகள் என்று அவர் நகரவாழ்வின் இருண்ட பகுதியைத் தன் படைப்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இன்னொரு பக்கம் மன நலச்சேவைகள். இன்று எந்த அளவு மனிதாபிமானமற்று நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புக்குரல் கொண்டிருந்தார். இதை வெளிப்படுத்த அவரும் சபியும் இணைந்து சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தூயோன், மானுட வாழ்வு தரும் ஆனந்தம் போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் உள்ளிருந்து சில குரல்கள் என்ற அவரது நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். டேபிள்டென்னிஸ் என்ற அவரது குறுநாவல் பாலியல் சிக்கல் குறித்த பகடியை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மகளின் திருமணத்திற்கு கோபி என்னை அழைத்திருந்தார். ஆனால் கலந்து கொள்ளவில்லை. பிறகு தற்செயலாக ரங்கராஜனுடன் சந்தித்தபோது தன் மருமகனைப் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது குடும்பச் சூழல் மிகவும் நெருக்கடியாகிவிட்டிருப்பதை அவரது பேச்சின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாகத் தான் எழுத விரும்பும் கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதையை நிம்மதியாக அமர்ந்து எழுதுமளவுகூட வீட்டின் சூழல் இல்லை என்று அவர் சொன்னவிதம் வலி தருவதாக  இருந்தது. அன்று லதா ராமகிருஷ்ணனைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லியபடியே நடந்து செல்லத் துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2003ல் கோபி மரணமடைந்த நாளில் நான் விருதுநகரில்  இருந்தேன். செய்தி கேள்விப்பட்டவுடன் மனதில் கோபியின் சிரிப்புதான் முதலில் தோன்றியது. கோபியோடு அதிகம் நட்பு கொண்டிருக்கவில்லை என்றபோதும் நான் அறிந்த தமிழ் எழுத்தாளர்களில் கோபி மிகவும் தனித்துவமானவர். அத்தோடு தமிழ்ச் சிறுகதைகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அவரது கதை உலகிற்கு நிகரான பகடியும் ஆழ்ந்த துக்கமும் கொண்ட கதைகள் இன்று வரை வேறு எவராலும் எழுதப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தஸ்தாயெவ்ஸ்கியைப் போல வாழ்வின் கருணையற்ற நெருக்கடியை எதிர்கொண்டபடியே திரும்பத் திரும்ப வாழ்வு தரும் ஆனந்தத்தைப் பேசியவர் கோபி கிருஷ்ணன். இன்று வாசிக்கையில் அந்த ஆனந்தமும் பரிகாசமும் தீர்க்க முடியாத வலியை உருவாக்குகிறது என்பதே நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;======================&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன் &lt;a href="http://www.vikatan.com/av/2005/mar/13032005/av0702.asp"&gt;கதாவிலாசம் - புகையும் வயிறு!&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;தென் மாவட்டங்களில் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையங்கள் ஊருக்கு வெளியே ஏதோ ஓர் இடத்துக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டன. நள்ளிரவில் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படும்போது எங்கே இறங்கியிருக்கிறோம் என்று அடையாளமே தெரிவதில்லை. காலங்காலமாக சுவர்பல்லிகளைப் போல பழைய பேருந்து நிலையத்தோடு ஒட்டிக்கிடந்த பேருந்து நிலையவாசிகள் எங்கே போயிருப்பார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் அத்தனை நடிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களுடன், அகலமான நெற்றி நிறைய திருநீறும் கையில் ஒரு பெரிய லென்ஸ§மாக உட்கார்ந்திருக்கும் கைரேகை பார்ப்பவரும், ஒரு கை சூம்பிப்போய் பிச்சையெடுக்கும் நடுத்தர வயதுப் பெண்ணும், தனக்குத்தானே பேசியபடி பேருந்து நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வரும் சித்த சுவாதீனமற்றவனும், வாயில் பிளேடு துண்டை ஒளித்துக்கொண்டு மடித்துவிட்ட சட்டையும் பழுப்பான வேஷ்டியுமாக நிற்கும் பிக்பாக்கெட்காரனும், மூத்திரச் சந்துக்குள் நின்றபடி கஞ்சா பொட்டலம் விற்பவனும், அசைய முடியாத பருத்த இடுப்புடன் டீக்கடை வாசலில் கால்களை அகட்டி உட்கார்ந்து வெற்றிலை எச்சில் துப்பியபடி கொச்சையாக திட்டிக்கொண்டு இருக்கும் வட்டிக்கு விடும் பெண்ணும், நள்ளிரவில்கூட வெள்ளரிக்காய் விற்கும் அந்த பூப்போட்ட பாவாடை அணிந்த சிறுமியும் எங்கே போயிருப்பார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;உரித்து எறியப்பட்டுவிட்ட வாழைப்பழத்தின் தோலைப் போல அவர்களும் இனி தேவையற்றவர்களாக வீசி எறியப்பட்டிருப்பார்களா? அவர்களுக்கு வீடு இருக்குமா? எப்போது வீடு திரும்புவார்கள்? குழந்தைகள், குடும்பங்கள் எதுவும் அவர்கள் நினைவிலிருக்காதா? எப்போது முதன் முதலாகப் பேருந்து நிலையத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலிருந்து சென்னைக்கு வருவ தற்காக ஆம்னி பஸ்ஸில் ஏறியிருந்தேன். இரவு பத்து மணியாகியும் ஏழு மணிக்குப் புறப்பட வேண்டிய பஸ்ஸை எடுக்கவே இல்லை. டிரைவரும் இரண்டு ஏஜென்ட்களும் சுற்றிச் சுற்றி வந்து ஆள் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்படியும் பதினைந்து பேருக்கு மேல் ஏறவில்லை. பஸ் புறப்பட்ட நிலையிலே இரண்டு மணி நேர மாக நின்றுகொண்டு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் இருந்த ஒருவர், ஆத்திரத்தில் தான் வேறு பஸ்ஸில் போவதாகச் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தார். அவரை ஒரு ஏஜென்ட் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். பேருந்து நிலையத் தின் இருள் சந்திலிருந்து பைஜாமா ஜிப்பா அணிந்த பருத்த அறுபது வயதைக் கடந்த ஒருவரும், மெலிந்து வெளிறிய ஊதா நிற சல்வார் கமீஸ் உடையணிந்த பெண்மணியும் ஆளுக்கு இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் நடந்து வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது முக ஜாடையிலே தெரிந்தது. ஏஜென்ட்களில் ஒருவன் அவர்களிடம் அரைகுறை இந்தியில் பேசி ஏதோ விசாரித்தான். பிறகு, அவர்களை எங்களது பஸ்ஸில் ஏற்றி ஜன்னலோர மாக உள்ள ஸீட்டில் உட்கார வைத்துவிட்டு, நானூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினான். பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. வயதானவர் சற்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, பக்கத்து ஸீட்டில் இருந்தவரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தார். பேருந்து புறப்பட்டு சில அடி தூரம் நகர்ந்து திரும்பவும் நின்றது. வயதானவர் அருகில் இருந்த வரிடம், ‘ராமேஸ்வரத்துக்கு அதிகாலை போய்ச் சேர்ந்துவிடுமா?’ என்று கேட்டார். ‘இது ராமேஸ்வரம் போகாது. சென்னை செல்லும் பேருந்து’ என்று சொன்னதும் அவருக்குப் புரியவில்லை. ‘ராமேஸ்வரம் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள்’ என்று எழுந்து அவசரமாக டிரைவர் அருகே போய் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார் பெரியவர். டிரைவரோ, ‘அதை ஏஜென்ட்டிடம் கேளுங்கள்!’ என்றார். இதற்குள் பஸ் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து கீழே குதித்து, பஸ்ஸின் முன்னால் சாலையில் உட்கார்ந்து கொண்டு விட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபத்திலும் அவர் ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தார். பேருந்திலிருந்தவர்கள் டிரைவரைத் திட்ட, ‘தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாம் ஏஜென்ட்டின் வேலை!’ என்று அவர் சாதித்துக்கொண்டு இருந்தார். பெரியவரோ ‘ஏஜென்ட் வராமல் இங்கிருந்து எழுந்து வழிவிட மாட்டேன்!’ என்று பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார். இதற்குள் இன்னொரு நபரை சென்னைக்கு ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்னியைத் தேடி வந்து சேர்ந்தான் அதே ஏஜென்ட். பெரியவர் அவனைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார். அவனும் சளைக்காமல் ‘ராமேஸ்வரம் போவதற்கு இந்த நேரம் பஸ் இல்லை பெரியவரே! அதான் திருச்சிக்கு போய் மாறுவதற்காக இதில் அனுப்பி வைத்தேன். பணம் வாபஸ் கிடையாது!’ என்று சொன்னான். பயணிகளின் சத்தம் அதிக மாகவே ஏஜென்ட் பஸ்ஸில் ஏறி வயதான பெண்மணியையும் அவர்களது பொருட் களையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்படி இழுத்தான். அவள் கம்பி யைப் பிடித்துக்கொண்டு வரமறுத்தாள். யாரும் எதிர்பாராதபடி ஏஜென்ட் அவர்கள் வைத்திருந்த ஒரு பையைப் பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே போட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;கைதவறி விழுந்த குழந்தையைப் பிடிக்க முயற்சிப்பவள் போல வயதானவள் பெருங் குரலெடுத்து அழுதபடி பேருந்திலிருந்து இறங்கி பையை எடுக்க ஓடினாள். இதற்குள் வயதானவரும் கலக்கத்துடன் இருட்டில் விழுந்துகிடந்த பையிலிருந்து சிதறிய பொருட்களைத் தேடிக் கொண்டு இருந்தார். ஒரு சிறிய மண் கலயம் ஒன்று உடைந்து சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. வயதானவள் அந்தக் கலயத்தின் துண்டு களையும், தரையில் கொட்டிக் கிடந்த சாம்பலையும் அள்ளிக்கொண்டு, தலையில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். வயதானவரோ கண்ணில் நீர் தளும்ப Ôசெத்துப்போன என் பையன் அஸ்தி சார். கடல்ல கரைக்கறதுக்காக குவாலியர்ல இருந்து ராமேஸ்வரம் கொண்டுபோயிட்டு இருக்கேன்Õ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். பஸ்ஸில் இருந்த யாவரும் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். டிரைவர் தன் ஸீட்டை விட்டு இறங்கி வந்து, இருட்டுக்குள் நின்றிருந்த ஏஜென்ட்டின் முகத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். பிறகு, அவனைத் தரதரவென செத்த எலியை இழுத்துக்கொண்டு செல்வதுபோல அந்த அம்மாவின் காலடியில் இழுத்துப்போட்டு, ‘மன்னிப்புக் கேளுடா!’ என்று இந்தியில் சொன் னார். அவன் தயங்கித் தயங்கி ‘வயித்துப்பாட் டுக்காகச் செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிருங்க அம்மா!’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏஜென்ட் வந்த ஆட்டோ இருளில் நின்றுகொண்டு இருந்தது. பெரியவர் உடைந்துகிடந்த கலயத்தையும் மண்ணில் விழுந்த சாம்பலையும் அள்ளி ஒரு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் போட்டுக்கொண்டு இருந்தார். டிரைவர் ஆத்திரத்துடன் ஏஜென்ட்டிடம் ‘இவர்கள் இருவரையும் ஒரு டாக்ஸியில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு!’ என்று சொல்லிவிட்டு, தன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை அப்படியே எடுத்து பெரியவரிடம் கொடுத்தார். பிறகு பேருந்து புறப் பட்டது. வயதான பெண்ணும் பெரியவரும் ஏஜென்ட்டுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டு ,இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;டிரைவர் பஸ் கிளம்பும் முன்பாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டபடி, ‘என்ன சார் செய்றது? நாய் பிழைப்பாப் போச்சு... எப்படி யாவது உங்களை காலையில எட்டு மணிக்குள்ளே மெட்ராஸிலே கொண்டுபோய் சேர்த்துடறேன்!’ என்றபடி பேருந்தை இயக்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;அடித்தட்டு மக்களின் உலகம் விசித்திரமானது. அதன் போராட்ட மும் இயல்பும் நாம் தீர்மானிக்க முடியாதது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்வதும் சமகால இலக்கியத்தின் முக்கிய போக்காக உருவாகிக்கொண்டு இருக்கிறது. தமிழில் இது போன்ற எழுத்துக்கு முன்னோடி யாக ஜி.நாகராஜனையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். இதன் தொடர்ச்சியாக உருவான நவீன சிறுகதை உலகில் முக்கிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணன். &lt;br /&gt;&lt;br /&gt;பெருநகர வாழ்க்கை எப்படி மனிதர்களைத் தங்களது இயல்பான உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுக்கிவிடுகிறது என்பதைப் பற்றியே கோபி கிருஷ்ணனின் கதைகள் பேசுகின்றன. வாழ்வின் அபத்த நிலைகளை எதிர்கொள்ளும் நெருக்கடிகளே அவரது கதையுலகம். கோபி கிருஷ்ணனின் மனிதர்கள் ஒண்டிக்குடித்தனங்களில் வாழ்பவர்கள். மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்... ஆனால், மனதுக்குள்ளாகத் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக்கொண்டு சமாதானம் அடைகிறவர்கள். இவர்கள் உலகத்தில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. குளிப்பது முதல் புணர்வது வரை யாவும் யாவரும் அறிந்த நிகழ்ச்சிகளே. எருமைமாட்டிலிருந்து கவர்ச்சி நடிகை வரை எல்லாவற்றைப் பற்றியும் இவரது கதை உலகம் ஆதங்கத்துடன் பேசித் தீர்க்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கோபி கிருஷ்ணனின் புயல் என்ற சிறுகதை, மாநகரில் புயல் மழையன்று ஒரு குடும்பத்தின் காட்சியை விவரிக்கிறது. வேலையிலிருந்து கிழிந்துபோன மழைக்கோட்டுடன் வீடு திரும்பும் பொறுப்பான ஒரு குடும்பத் தலைவன், வழியில் குழந்தையின் நினைவு வரவே அதன் காய்ச்சலுக்கு ஒரு மாத்திரையும் சாக்லெட் ஒன்றும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். வீட்டில் குழந்தை சாக்லெட்டைக் கண்டதும், ‘என்னப்பா இன்னிக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கே. எனக்குப் பிறந்த நாளா?’ என்று கேட்கிறது. தனது அக்கறை இன்மையை நினைத்து அவனுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. புதிதாக வேலைக்குப் போகத் துவங்கி இருந்த மனைவி புலம்புகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;தான் வேலை செய்யும் மருத்துவ மனையில் ஆபாசப்படங்களை வைத்துக் கொண்டு ஓர் ஊழியர் செவிலியரோடு கேலி பேசுவதையும், அங்குள்ள கிழட்டு மருத்துவர் ஒரு செவிலியைச் சேர்த்து வைத்துக்கொண்டு சல்லாபம் செய்வதையும் பற்றி சொல்கிறாள். வேலைதான் இப்படியிருக்கிறது என்றால், வேலை விட்டு வரும் வழியில், மழையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவன் ஆபாசமாக ஜாடைகாட்டி அவளை அழைக்கிறான். பயத்துடன் மகளின் பள்ளிக்கு அவசரமாகப் போய் அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலோ சில மாதங்களுக்கு முன்பு அதே வீட்டில் குடியிருந்த ஒருவன் நன்றாகக் குடித்த நிலையில் உள்ளே நுழைந்து, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ‘இளமை சுகம்’ படத்துக்கு டிக்கெட் இருக்கிறது போகலாமா என்று கேட் கிறான். அவள் பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் ஒளிந்துகொள்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு நாள் வாழ்க்கையின் கசடுகளைக் கொட்டுகிறாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்த கணவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை யாருக்கும் எந்த இடையூறும் செய்திராத தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னைத்தானே சலித்துக்கொண்டபடி ‘சாக்கடையில் உழலும் பன்றிகள்!’ என்று அவர்களைத் திட்டுகிறான். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவனால் என்பதோடு கதை முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடிகளுக்குப் பழகிக்கொள் வதைத் தவிர, அதை எதிர்கொள்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை கோபி கிருஷ்ணனின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பரிகாசமும் வலியும் கலந்த இந்தக் கதையை வாசித்து முடிக்கும்போது, நூற்றாண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வரும் நீதி நூல்களும் தர்ம விசாரங்களும் வாழ்க்கையின் மீது எந்த எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதையே உணர முடிகிறது. உடைந்த கண்ணாடியைப் போல வாழ்வு முகம் காணும் யாவரையும் சிதறடித்துதான் காட்டுகிறது. வாழ்வின் கரங்கள் எப்போது உயர்வைத் தருகிறது, எப்போது கீழ்மையை உருவாக்குகிறது என்பதை எவரும் சொல்ல முடியாது. யாராலும் வெல்ல முடியாத வில்லாளியான அர்ச்சுனனும் கூட சில காலம் அரவாணியாகத்தான் வாழ்ந்திருக்கிறான். இப்படித்தானிருக் கிறது வாழ்வின் ருசி! &lt;br /&gt;&lt;br /&gt;நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படும் கோபி கிருஷ்ணன் மதுரையில் பிறந்தவர். உளவியல் &amp; சமூக சேவை இரண்டிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். Ôஆத்மன் ஆலோசனை மையம்Õ என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஒவ்வாத உணர்வுகள், தூயோன், மானிட வாழ்வு தரும் ஆனந்தம், டேபிள் டென்னிஸ் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலஹீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003&amp;ம் ஆண்டு காலமானார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;===========&lt;br /&gt;&lt;br /&gt;அருண்மொழிவர்மன் &lt;a href="http://solvathellamunmai.blogspot.com/2008/12/blog-post.html"&gt;“இடாகினி பேய்களும்”...:ஒரு அறிமுகம்&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி, மற்றவர்கள் ஊடாக எனக்கு கிடைப்பது குறைவு. ஒரு கண்காட்சி ஒன்றில் காலம் சிற்றிதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தத்தின் அறிமுகம் கிடைத்தது, பின்னர் அவர் ஊடாக, அவர் நடத்தும் புத்தக கண்காட்சிகளில் அவர் சிபாரிசு செய்து சில நல்ல புத்தகங்களை வாசித்துள்ளேன். அண்மையில் அப்படியான ஒரு கண்காட்சியில் கோபிகிருஷ்ணன் எழுதிய “இடாகினி பேய்களும்” என்கிற நாவலை அவர் அறிமுகம் செய்ய, பல நாட்களாக வாசிக்க ஆசைப்பட்ட கோபிகிருஷ்ணனின் நடை தரும் அனுபவத்தை முதன் முதலாக அனுபவித்தேன். நகர்ப்புற வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் வாழ்வு மீதான ஆழமான சலிப்பும், மன உளைச்சலும் பற்றி வீர்யமாக, அதே நேரம் காதோரமாய் ஒரு தோழன் கதை சொல்வதுபோல சொல்லும் நடை இவருக்கு கைவந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது புரிதலில், நாவல் self fiction வடிவில் கொண்டு செல்லப்படுகின்றது. அதாவது, சேவை மையம் ஒன்றில் அவர் பணியாற்றிய போது அவர் பெற்ற அனுபவங்களை அவர் வாசகரிடம் சொல்வதாக கதை போகின்றது. அந்த மூலக்கதையில் வரும் சில சம்பவங்களை மையம் கொண்ட 9 சிறுகதைகளும் ஒரு கவிதையும் பிண்ணினைப்பாக தொடர்கின்றது. அதாவது, மூலக்கதையைவிட, கிளைக்கதைகள் அளவில் பெரியனவாக உள்ளது. சாருவின் ராஸலீலாவில் சில அத்தியாயங்கள் இப்படி அமைந்தது. தொடர்ச்சியான மன உளைச்சல்களாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டே அவர் இறந்தார் என்று அறிந்திருக்கிறேன். கதையில், சமூகத்தின் போலியான மனிதர்கள் மீதான அவரது வெறுப்பு தெளிவாக காட்டப்படுகிறது. அவரது அலுவலகத்தில் உயர் நிலை அதிகாரிகள் மட்டும் பாவிக்க என்று ஒரு கழிவறையும், சாதாரண ஊழியர்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் தட்டச்சு பணியாளார்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் பேணாப்படுகிறது. உயர் அதிகாரிகள் ஒவ்வொருமுறை கழிவறை போய்வந்த பின்னரும் அதற்கென இருக்கும் ஒரு தொழிலாளியால் கழிவறை சுத்திகரிக்கப்படும் வழமை கொண்டுவரப்படுகிறது. இதைப்பற்றி சுத்திகரிப்பு தொழிலாளி கோபியிடம் “என்ன சார் மேடம்கள் மூத்திரம் பெய்றது இல்லைபோல, பன்னீர்தான் பெய்றாங்களா?” என்று கேட்கிறான். அதுபோல வாகனத் தரிப்பிடத்திலும் சில வரைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, சாதாரண நிலை ஊழியர்கள் தம் டூ வீலர்களை தாழ்வான இடத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இதனால் இரண்டு படிகளில் டூவீலர்களை ஒவ்வொரு நாளும் ஏற்றி இறக்கவேண்டிய கட்டாயம் வருகின்றது. இதில் உள்ள சிரமங்களை விளக்கி, அந்த படிகளை மறைத்து நீண்ட சாய்வான மரமொன்றை வைக்குமாறு தொழிலாளர் சார்பாக கோபி வைக்கும் வேண்டுகோள் மிக மோசமாக நிராகரிக்கப்படுகின்றது. உன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று தலைமை அதிகாரி கூறுகிறார். இப்படியான சம்பவங்களால், ஆறு மாதங்களின் பின்னர் வேலையை விட்டு விலகுகிறார்.&lt;br /&gt;அதுபோல நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு பகுதி, சமாதானம் என்ற பெண் ஊழியருடன் கோபிக்கு ஏற்பட்ட உறவு பற்றிய பகுதி. ஏற்கனவே கோபிக்கு திருமணமான நிலையில் அது ஒரு வரம்பு மீறிய உறவேயானாலும் மிகுந்த காதல் ரசத்துடன் அந்த உறவு கூறப்படுகின்றது. காதல் மனச மட்டும் தான் பார்க்கும் அது இதென்ற பிதற்றல்கள் இல்லாமல் காதலும் காமமும் கலந்து அந்த உறவை மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதிக்க வைத்துள்ளார். ஒரு முறை காரில் கேளாம்பாக்கம் நோக்கி தொலைதூர பயணம் செல்கையில் சமாதானத்தின் உடல் மீதான ஸ்பரிசிப்பில் இருவரும் காமவசப்படுகிறார்கள். “it’s very soothing” என்கிறாள் சமாதானம், அப்போது “நான் வரம்புகள் அற்றவன், ஆனால் நீங்களாக என்னை நாடும்போது உங்களை நான் பரத்தையாக உணரவைக்க மாட்டேன்” என்கிறார் கோபி. சுதந்திரம் என்பது மற்றவரின் இருப்பையும் அங்கீகரித்தல் என்ற தொனிவரும் இடம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகப்பணிகளுக்கென வரும் பணம் தேவையில்லாமல் விரயம் செய்யப்படுகின்றது. வெளிநாடொன்றில் இருந்து ஒருவர் செய்யும் நன்கொடை பற்றிய விபரங்களை பார்க்க மூவர் பணியாற்றுகிறார்கள். இப்படியான நிகழ்வுகள் கதை ஓட்டத்தில் சொல்லப்படுகின்றன. இவற்றின் மீதான அவரது வெறுப்பும் அது சார்ந்து அவருக்கு அதிகாரிகள் மீதெழும் கோபமும் பல இடங்களில் தெளிவாக தெரிகின்றது. (கனடாவில் சேகரிக்கப்படும் charitable trust நிதிகள் எவ்வாறெல்லாம் வீண் விரயம் செய்யப்படுகின்றது என்று சில ஆண்டுகளின் முன்னர் தொடர்ச்சியாக சில நாட்கள் புள்ளிவிபரங்களுடன் Toronto star பத்திரிகை நிறுவியது ஞாபகம் வருகின்றது) அவருக்கு மேலதிகாரியாக பணியாற்றிய ஒரு பெண் response என்பதை responce என்று எழுதுகிறாள். இப்படியான தவறுகளை சுட்டிக்காட்டும்போது இன்னொரு அதிகாரியால் “Gopikrishnan is not an authority in English” என்று திட்டப்படுகிறார். ஆற்றலும், அறிவும், சரியான உழைப்பும் இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வலி சுட்டிக்காட்டப்படுகின்றது. இது அப்பட்டமாக அவரது சொந்த வாழ்வின் நிலையே தான். அவர் இறந்தபோது இறுதி சடங்குகள் செய்யக்கூட காசு இருக்கவில்லை என்று வாசித்திருக்கிறேன். இது பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியவர்களைவிட பெருமளவு பாதிப்பை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தின. எந்த இலக்கிய அரசியலிலும் ஈடுபடாது தன் எழுத்து நடை போல அமைதியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் இவர். இவரது பிற படைப்புகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூக்களில் இவர் பற்றிய இரண்டு பதிவுகள்&lt;br /&gt;லேகாவின் பதிவு&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணனின் உயிர்மை பதிவு&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்&lt;br /&gt;&lt;br /&gt;=====================&lt;br /&gt;&lt;br /&gt;யாழிசை &lt;a href="http://yalisai.blogspot.com/2008/10/blog-post_17.html"&gt;கோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்'&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் மரணத்திற்கு பிறகு குமுதம் இதழ் ஒரு பக்க அளவில் அஞ்சலி கட்டுரை வெளியிட்டு இருந்தது,அதற்கு முன்பு வரை கோபியை பற்றிய எந்த அறிமுகமும் இருந்ததில்லை.வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறிய படாத எழுத்தாளர்கள் வரிசையில் பா.சிங்காரத்தை போல கோபியும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் மூலமாகவும்,வலைத்தளங்களிலும் இவரின் "உள்ளே இருந்து சில குரல்கள்" நாவல் குறித்த விமர்சனங்கள் இந்நாவலை படிக்கும் ஆவலை தூண்டியது.நாவலை படித்து கொண்டிருந்த கணங்களில் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வழியின்று பல சமயம் பாதியில் புத்தகத்தை மூடி வைத்தேன்..கனத்த வலி தரும் மனித நிலைகளின்(பிறழ்வு) தொகுப்பு வெகுவான ஏற்ற இறக்கம் இன்றி சீராக பயணிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருக்கும் மனநிலை பாதிக்கபட்டோர் அல்லது அவர்களின் உறவினரின் நேரடி கூற்றாக ஒவ்வொரு நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.ஐம்பதிற்கும் மேலான மனநிலை வெளிப்பாடுகளில் பெரும்பாலான பிறழ்வுகளுக்கு காரணமாய் அமைவது அதீத கடவுள் பக்தி,திருமண/காதல் தோல்வி,உறவுகள்,வேலை,அர்த்தம் அற்ற பயம்,சந்தேகம் என பொதுவாய் கொள்ளலாம்.இவ்வாறு சிறு சிறு அதிர்வுகளை உள்வாங்கி ஒவ்வொரு நிலையும் கடக்க வேண்டியுள்ளது.மன பிறழ்வை நோய் என கூறுவதை காட்டிலும் ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை.சிந்தனையையும்,மனவோட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நமது நிலை குழப்பம் இன்றி தொடர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர்த்து நாவலின் இறுதியில் மன நல பாதிப்பிற்க்கு வைத்தியம் (?!) செய்யும் சில சாமியார்கள், மற்றும் மாந்த்ரீகர்களின் சந்திப்புகள்,மன நலம் குறித்து விவாதிக்கும் பல நூல்களின் மேற்கோள்கள் என இறுதி பகுதி முழுவதும் மன பிறழ்வு குறித்து முழுதுமாய் உணர்ந்து கொள்ள உதவுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித மனங்களின் வலிகளை,இருண்ட வாழ்வின் அவலங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல். &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=64"&gt;கோபி குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை&lt;/a&gt; இந்த எழுத்தாளனுக்கு சிறந்ததோர் அஞ்சலி.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீட்டார் - வம்சி புக்ஸ்&lt;br /&gt;விலை - 80 ரூபாய் &lt;br /&gt;&lt;br /&gt;=====================&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-1362671006916233503?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/1362671006916233503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/1362671006916233503'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2009/04/blog-post.html' title='கோபிகிருஷ்ணன்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-212144594688942245</id><published>2009-03-13T12:55:00.001-07:00</published><updated>2009-03-13T13:00:34.878-07:00</updated><title type='text'>சனிமூலை - ராகவன் தம்பி</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.vadakkuvaasal.com/article.php?id=232&amp;issue=54&amp;category=10"&gt;சனிமூலை - ராகவன் தம்பி&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவரிடம் இறைநம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது தான் கடவுள் நம்பிக்கையற்றுப் போனது குறித்து சில சமயம் வருத்தப் படுவதாகவும் பிரச்னைகள் தன்னை அழுத்தும்போது ஏதாவது கடவுளை நம்பி இருந்தால் தேவலையாக இருந்திருக்குமே என்கிற எண்ணம் தனக்குள் எப்போதாவது எட்டிப் பார்ப்பதையும் தான் உணர்வதாகச் சொல்வார். தன்னை ஒரிடத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டு சற்று எட்டி நின்று தன்னையே பார்த்து எதையும் அவதானிக்கும் அந்தப் போக்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். அது ஒரு சித்தரின் மனப்பாங்கு. இது எனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் வாய்க்காது.&lt;br /&gt;            &lt;br /&gt;பொதுவாக சொல்வார்கள். ஒரு மனிதன் நாத்திகனாக மாறவும் சடங்குகளில் நம்பிக்கையற்றுப் போகவும் இங்கர்சால், பகத்சிங், தந்தை பெரியார், போன்றோரின் நூல்களைப் படிக்கத் தேவை இல்லை.   ஹரித்வார், கயா, காசி போன்ற புனிதத் தலங்களுக்கு ஒருமுறைசென்று வந்தால் போதும். அதே போல மற்ற மதங்களிலும் அந்தந்த மதங்கள் உயர்வாகப் போற்றும்   முக்கியமான ஸ்தலங்களுக்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தானாகவே இறைநம்பிக்கை சற்று தடுமாற்றம் காணும். சடங்குகள் மீதான நம்பிக்கை வலுவாக ஆட்டம் காணும்.&lt;br /&gt;            &lt;br /&gt;இப்படிக் கடவுள் நம்பிக்கை மற்றும் சடங்குகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் மனதில் நிழலாடியது.&lt;br /&gt;            &lt;br /&gt;கிருஷ்ணகிரியில் அப்பா இறந்து போனார். பதின்மூன்று நாட்கள் காரியங்கள் நடந்தன. இறப்பு தொடர்பான மாத்வ பிராமணர்களின் சடங்குகள் மிகவும் கடுமையானவை. குளிரும் மழைச் சாரலும் நடுக்கித் துன்புறுத்தும் டிசம்பர் மாதத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் பத்து நாட்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துமுறை கிணற்று நீரில் முங்கிக் குளித்து ஈரத் துணி உடுத்திக் கொண்டு கடும் பட்டினியுடன் மாலை நான்கு மணி வரை தொடர்ந்த சடங்குகள்.   இப்படிப் பதின்மூன்று நாட்கள் காரியங்கள் முடித்து இரண்டாம் நாள் பால் ஊற்றும் போது ஒரு கலசத்தில் சேகரித்த அப்பாவின் அஸ்தியில் கொஞ்சம் தனியாக வைத்து இருந்ததை ஆச்சார் (புரோகிதர்) என்னிடம் கொடுத்தார். அஸ்திக்கு வேண்டிய மந்திரங்கள் சடங்குகளை செய்து முடித்து விட்டதாகவும் தில்லிக்கு அந்தக் கலசத்தை எடுத்துச்சென்று யமுனையிலும் கங்கையிலும் கரைக்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படிக் கரைக்கும் போதும் புரோகிதர் யாரும் தேவையில்லை என்றும் வெறுமனே எடுத்துச்சென்று ஆற்றில் கரைத்து விட்டு குளித்து விட்டு முடிந்தால் பிராமணர்கள் யாருக்காவது அன்னதானம் செய்து விட்டு வருமாறும் கூறியிருந்தார்கள்.&lt;br /&gt;            &lt;br /&gt;ஊரில் காரியங்கள் முடித்து தில்லி திரும்பி வந்ததும் முதலில் யமுனையில் அஸ்தியைக் கரைப்பதற்குக் கிளம்பினேன். இங்கே சாக்கடை கலக்காத யமுனையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிகக் கஷ்டமான காரியம். ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பல இடங்களில் அலைந்து திரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புறச் சூழல் அத்தனை கெட்டுப் போகத் துவங்காத தில்லியில்   இந்த கதி என்றால் யமுனை இப்போது எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்க்கலாம். எங்கெங்கோ தேடித் தடவி அலைந்து திரிந்து ஒரிடத்தை நானும் யதார்த்தா நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த குணசேகரனும் தேடிக் கண்டுபிடித்தோம். அது தில்லி நகரிலிருந்து பலகிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஒரு சிறு கிராமம். அங்கு ஓடும் யமுனையும் ஊருக்குள் ஓடும் யமுனையை விடப் பெரிய அளவில் ஒன்றும் சுத்தமாக இல்லை. எல்லா ஓடைப் பிரிவுகளிலும் சாக்கடை கலக்காமல் ஓரிரண்டு பிரிவுகளில் சற்றுத் தெளிவான நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரேயடியாக சுத்தமான நீர் என்றும் சொல்ல முடியாது. அஸ்தியைக் கரைக்கலாம் என்னும் அளவில் தெளிவு. ஆனால் குளிக்கும் அளவுக்கு சுத்தமாக இல்லை. எனவே ஏகப்பட்ட ஆராய்ச்சி, பயணம் மற்றும் தேடல்களுக்குப் பிறகு கிட்டிய அந்த யமுனைத் தண்ணீரில் ஒரு பகுதி அஸ்தியைக் கரைத்து விட்டு பெயருக்குத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து குளித்தேன். யமுனை முடிந்தது. இப்போது இன்னும் ஒரு கலசத்தில் இருக்கும்   அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும்.&lt;br /&gt;            &lt;br /&gt;மிச்சமிருந்த அஸ்தியைக் கரைக்க ஹரித்வார் தனியாகப் பயணப்பட்டேன். ஹரித்வார் அடைந்ததும் பேருந்து நிலையத்திலேயே ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தேன். அஸ்தியைக் கரைக்க வைத்து குளிக்க வைத்து மீண்டும் பேருந்து நிலையத்தில் விடுவதற்கு இருபது ரூபாய் என்றான். ஒப்புக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன். ஹரித்வார் அநியாயத்துக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஊர்.   ரிக்க்ஷா ஓட்டி என்னை உட்கார வைத்து அநேக தூரம் ரிக்க்ஷாவை நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான். அப்படி உட்கார்ந்து வருவதற்கு மிகவும் கூச்சமாக இருந்தது.   சுமார் இருபது நிமிட நெட்டித் தள்ளலுக்குப் பிறகு கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்றது ரிக்க்ஷா.&lt;br /&gt;            &lt;br /&gt;ரிக்க்ஷாவில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே குறைந்தது ஒரு நூறு பண்டாக்களாவது ஏறக்குறைய என்னைத் தாக்குவது போன்ற பாவனையில் சூழ்ந்து கொண்டார்கள். அஸ்திக்கலசம் வைத்திருந்த கிருஷ்ணகிரி ராணி சில்க் ஹவுஸ் மஞ்சள் துணிப்பையை ஆளுக்கொரு பக்கம் வலுவாக இழுக்கத் துவங்கினார்கள்.    'யாரும் எனக்குத் தேவையில்லை' என்று உரக்க நான் போட்ட கூச்சலைக் கேட்க யாருக்கும் பொறுமை இல்லை. என்னை ஆக்ரோஷமான போட்டியின் ஒரு பொருளாக மாற்றி ஆளுக்கு ஆள் தங்கள் வலிமையைக் காட்டிக் கொள்ள யுத்தம் செய்வதைப் போன்ற ஒரு இரைச்சலில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டார்கள். நான் சளைக்காமல்   அந்த மஞ்சள் பையை வலுவாக இழுத்து என்னிடம் வைத்துக் கொண்டு ஆற்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். மஞ்சள் பையை என்னிடம் பறி கொடுத்த பண்டாக்கள் வேறு வகையான தாக்குதலில் இறங்கினார்கள்.&lt;br /&gt;            &lt;br /&gt;"அந்த ஆத்மா நேரா நரகத்துக்குத்தான் போகும்.''&lt;br /&gt;"அநாதையா போகப்போகுது''&lt;br /&gt;"வாரிசு இல்லாத ஆத்மாவா''     &lt;br /&gt;      &lt;br /&gt;இப்படி காதுக்கு வெகு அருகாமையிலேயே கூச்சல் போட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். தாங்க முடியவில்லை. இனி வேறு வழியில்லை. யாருக்காவது எதாவது கொடுத்தால்தான் அடுத்து நகர விடுவார்கள் என்கிற நிலையும் உருவானது. இருப்பவர்களில் சற்று பலசாலியாகத் தோற்றமளித்த ஒருவனைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் பண்டா சற்று அருகாமையில் நெருங்கிப்பேசிய போது மட்டமான சாராயத்தின் வாடையும் பீடிப்புகையின் சருகு வாடையும் லேசாக அடித்தது.&lt;br /&gt;            &lt;br /&gt;அவனிடம் சொன்னேன்- உனக்குக் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன். மற்ற எல்லோரையும் நிறுத்து. "எவ்வளவு வேண்டும் என்று சொல்.''&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயிரம் ரூபாய் கொடு''&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஒரு வேலையும் கிடையாது. எல்லா மந்திரங்களும் சொல்லி இந்த அஸ்திக்கான சடங்குகளை ஊரிலேயே முடித்து விட்டோம். எனக்கு அஸ்தியை வெறுமனே கரைக்க வேண்டும்.   என்னைத் துரத்தி வரும் மற்றவர்களை நீ நிறுத்தினால் போதும். சும்மா கரையில் வந்து உட்கார்ந்து கொள். அதுபோதும். நூறு ரூபாய் வாங்கிக் கொள்'' என்றேன்.&lt;br /&gt;            &lt;br /&gt;சிறு தயக்கத்துக்குப் பிறகு சரி என்றவன் கூட்டத்தில் மற்றவர்களைப் பார்த்துக் கத்தினான்-"விலை படிந்து விட்டது. நீங்கள் போகலாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடியில் அந்தக் கூட்டம் சுத்தமாகக் கரைந்து போனது. அத்தனை கூட்டமும் எங்கே போனது என்று தெரியவில்லை. கரையில் அந்தப் பண்டாவும் நானும் தனித்து விடப்பட்டோம். கரையில் ஒருவன் இலைத் தொன்னையில் துலுக்க சாமந்திப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு தொன்னை பூ வாங்கச் சொன்னான் பண்டா. அவனிடம் நான் மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டேன். "நீ மந்திரங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;நீ கொடுக்கும் வெறும் நூறு ரூபாய்க்கு நான் எதற்கு மந்திரங்கள் சொல்ல வேண்டும்?' என்று நிஷ்டூரியத்துடன் பதில் சொல்லிக் கரையில் அமர்ந்தான் பண்டா. துண்டு சுற்றிக்கொண்டு கங்கையில் கால் நனைத்தேன். கங்கை நீரின் முதல் ஸ்பரிசத்தில் ஒரு ஆயிரம் தேள்களின் கொட்டுக்கள். வலியக் காலைப் பின்னிழுத்து மீண்டும் தயக்கத்துடன் பின்னர் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் கால் நனைத்து நின்றேன். அஸ்திக் கலசத்தைக் கையில் எடுத்து கரையில் வாங்கிய பூக்களுடன் சேர்த்துக் கரைக்க ஆயத்தமானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டாவின் அவசரக் குரல் என்னை நிறுத்தியது. ஒரு நிமிஷம். நான் வேதப் பிராமணன். ஓரிரண்டு மந்திரங்களாவது சொல்லாமல் உன்கிட்டே காசு வாங்கினால் அது அதர்மமான காரியம். கலசத்தைக் கையிலே வைத்து சூரியனைப் பார்த்து நின்னு நான் சொல்ற ஒரு சின்ன மந்திரத்தை சொல்லு போதும் என்றான் அந்தப் பண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரம் எல்லாம் வேண்டாம்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன். பேசிய காசைத் தந்து விடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி வெறுமனே காசு வாங்க மாட்டேன். நான் சொல்ற மந்திரத்தை திரும்பச் சொல்லு போதும்'' கொஞ்சம் தயங்கி விட்டு 'சொல்லு' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹே கங்கா மாதா''&lt;br /&gt;"ஹே கங்கா மாதா''&lt;br /&gt;&lt;br /&gt;யாருடையது என்று கேட்டான். அப்பாவின் அஸ்தி என்று சொன்னேன். அப்பா பெயர் மற்றும் கோத்திரம் கேட்டான். சமஸ்கிருதம் அல்லாத   உள்ளூர் இந்தியில் மந்திரத்தைத் தொடர்ந்தான். "விஸ்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்த என் தகப்பனார் கிருஷ்ண ராவ் சர்மாவின் அஸ்தியை உன்னுடைய பாத கமலங்களில் சேர்ப்பிக்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;நான் திருப்பிச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இந்த நாளில் பிராமணர்களுக்கு ஸ்வர்ணதானம் செய்வேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிரேக் போட்டேன் - "நஹி''&lt;br /&gt;&lt;br /&gt;'பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வேன்'&lt;br /&gt;&lt;br /&gt;"பில்குல் நஹி''&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு''&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்ல மாட்டேன்''&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லை. பிராமணர்களுக்கு போஜனத்துக்கு ஐந்நூறு ரூபாய்தான் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. மாட்டேன்''&lt;br /&gt;&lt;br /&gt;அடிச்சி கங்கையிலே தூக்கி எறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்பார்வை படும் தூரத்தில் ரிக்க்ஷாக்காரன் சாய்ந்து உட்கார்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;"தைரியம் இருந்தா கிட்டே வந்து பாரு. உன்னையும் இழுத்துக் கொண்டுதான் இந்த கங்கையிலே உயிர் விடுவேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;"நீ அப்பா மேலே பாசம் இல்லாத பாவி. அந்த ஆளு நரகத்துக்குத்தான் போவான்.''&lt;br /&gt;&lt;br /&gt;"அதைப்பத்தி நீ கவலைப்படாதே.''&lt;br /&gt;            &lt;br /&gt;ஒரு மாதிரி கைநடுக்கத்துடன் சற்று ஒதுங்கி நின்று பீடி புகைக்கத் துவங்கினான் அந்தப் பண்டா. அந்த நேரத்தைப் பயன்படுத்தி கங்கை பிரவாகத்தில் அஸ்தியைக் கரைத்துவிட்டு மூன்று முழுங்குப் போட்டுக் கரையேறினேன். அவன் முணுமுணுப்பான குரலில் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். துணி மாற்றிக் கொள்ளும்போது என்னருகில் வந்தான் பண்டா. நூறு ரூபாய் பத்தாது. முன்னூறாவது வேணும் என்றான்.&lt;br /&gt;            &lt;br /&gt;குடுக்கறதை வாங்கி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிக் கொண்டே பண்டா கையில் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரிக்ஷாவில் ஏறினேன். அவன் ஆக்ரோஷத்துடன் என் சட்டையைப் பிடித்தான். நான் வலுவுடன் உதறிக் கொள்வதற்கு முன்பு ரிக்ஷாக்காரன் சடாரென்று இறங்கி வந்து அந்தப் பண்டாவைப் பிடித்து அவன் முகத்தில் மிகவும் வலுவாக ஓங்கிக் குத்தினான். அதை எதிர்பார்க்காத பண்டா ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்த அவன் ஒரு நொடி சமாளித்துக் கொண்டு ரிக்ஷாக்காரனைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினான் "மாதர்சோத்''&lt;br /&gt;&lt;br /&gt;ரிக்க்ஷாக்காரன் அவனை மீண்டும் ஆக்ரோஷத்துடன் இடுப்புக்குக் கீழே ஓங்கி எட்டி உதைத்தான். பண்டா வலியில் நெளிந்து கொண்டே தரையில் புரண்டான். அவன் முகத்தில் அதீதமான பீதி தெரிந்தது. ரிக்க்ஷாக்காரன் ஒன்றும் நடக்காதது போல என்னை ஏறி உட்காரச் சொல்லி விட்டு நெட்டித் தள்ளிச் செல்ல ஆரம்பித்தான். ரிக்க்ஷாவில் உட்கார்ந்து கொண்டு சற்று பயத்துடன் பண்டாவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சுதாரித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு சிரமத்துடன் பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு திருப்பத்தில் கண் பார்வையில் இருந்து மறைந்தான்.&lt;br /&gt;            &lt;br /&gt;காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் அசுரப்பசி எடுத்தது. பேருந்து நிலையத்துக்கு வந்ததும் ரிக்க்ஷாக்காரனை ஏதாவது சத்த சைவ உணவு விடுதிக்குப் போகச் சொன்னேன். காலையில் இருந்து என்னுடன் இருக்கிறான். அவனையும் என்னோடு சேர்ந்து சாப்பிடச் சொன்னேன். மிகவும் தயங்கினான். ஒன்றும் பிரச்னையில்லை. வந்து சாப்பிடு. சவாரிக்கான பணத்தைத் தனியாகக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். அழுக்கான துண்டினால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு என் எதிரே உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நேரமாக அவனுடன் ரிக்க்ஷாவில் சவாரியாக உட்கார்ந்தும் அவன் பெயர் கேட்காதது ஞாபகம் வந்தது.&lt;br /&gt;            &lt;br /&gt;"முஹமது அனீஸ்'' என்றான்.&lt;br /&gt;            &lt;br /&gt;வீட்டில் இருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொள்வாயா என்று கேட்டேன்.&lt;br /&gt;            &lt;br /&gt;நீண்ட தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொண்டான். வீட்டில் ஏழு பேர்கள் என்றான். ஓட்டல் காரரிடம் அவனுக்கு வேண்டிய அளவு ரொட்டி மற்றும் சப்ஜியைக் கட்டிக்கொடுக்கச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டு அவனுக்கும் சவாரிக்குப் பணம் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு பஸ் பிடிக்க விரைந்தேன்.&lt;br /&gt;            &lt;br /&gt;இரவு தில்லி சேர்ந்ததும் ஊரில் இருக்கும் அண்ணாவை தொலைபேசியில் கூப்பிட்டு சொன்னேன்.&lt;br /&gt;            &lt;br /&gt;"அப்பாவோட அஸ்தியை கங்கையில் கரைச்சுட்டேன்.''&lt;br /&gt;            &lt;br /&gt;அக்கா குறுக்கிட்டுக் கேட்டாள் பிராமண போஜனம் ஏதாவது ஏற்பாடு பண்ணியா?&lt;br /&gt;            &lt;br /&gt;'ஆமாம். ஏழு பேர் சாப்பிட்டு இருப்பாங்க'.&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-212144594688942245?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/212144594688942245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/212144594688942245'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2009/03/blog-post.html' title='சனிமூலை - ராகவன் தம்பி'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-8513082737949997359</id><published>2009-01-22T00:01:00.000-08:00</published><updated>2009-01-22T19:25:16.797-08:00</updated><title type='text'>Movie endings with a twist</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;12 Monkeys (1995)&lt;br /&gt;Angel Heart (1987)&lt;br /&gt;Chaos (2005)&lt;br /&gt;Derailed (2005)&lt;br /&gt;Diabolique (1996)&lt;br /&gt;Donnie Darko (2001)&lt;br /&gt;Eastern Promises (2007)&lt;br /&gt;Fight Club (1999)&lt;br /&gt;Frailty (2002)&lt;br /&gt;Identity (2003)&lt;br /&gt;Jacob's Ladder (1990)&lt;br /&gt;Kill Bill (2003)&lt;br /&gt;Les Diaboliques (1955)&lt;br /&gt;Memento (2000)&lt;br /&gt;Mullholand Drive (2001)&lt;br /&gt;Oldboy (2003)&lt;br /&gt;Phone Booth (2002)&lt;br /&gt;Planet of the Apes (1968)&lt;br /&gt;Primal Fear (1996)&lt;br /&gt;Psycho (1960)&lt;br /&gt;Reindeer Games (Deception) (2000)&lt;br /&gt;Revolver (2007)&lt;br /&gt;Saw (2004)&lt;br /&gt;Seven (1995)&lt;br /&gt;Sixth Sense (1999)&lt;br /&gt;Soylent Green (1973)&lt;br /&gt;Starwars 5 - The Empire strikes back (1980)&lt;br /&gt;Suicide Kings (1997)&lt;br /&gt;The Forgotten (2004)&lt;br /&gt;The Game (1997)&lt;br /&gt;The Others (2001)&lt;br /&gt;The Prestige (2006)&lt;br /&gt;The Prestige (2006)&lt;br /&gt;The Shawshank Redemption (1994)&lt;br /&gt;The Usual Suspects (1995)&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-8513082737949997359?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/8513082737949997359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/8513082737949997359'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2009/01/movie-endings-with-twist.html' title='Movie endings with a twist'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-7259922669897027128</id><published>2009-01-15T00:00:00.000-08:00</published><updated>2009-01-16T11:42:43.634-08:00</updated><title type='text'>கருணா அம்மான் சிறப்பு பேட்டி</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2767&amp;cls=row3"&gt;புலிகளுடன் தமிழக தலைவர்கள் ஆயுத வியாபாரம்: தினமலர் இதழுக்கு கருணா அம்மான் சிறப்பு பேட்டி- 01&lt;/a&gt;&lt;br /&gt;ஜனவரி 15,2009,00:00  IST&lt;br /&gt;&lt;br /&gt;"புலிகளுக்குத் தேவையான பயங்கர ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து கடல் வழியாகக் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தலின் பின்னணியில் தமிழகத்தில் புலி ஆதரவு பேசும் தலைவர்கள் இருக்கின்றனர். கடத்தலை முறியடிக்க இலங்கை ராணுவம் முயலும் போது தான், தமிழகத்தின் அப்பாவி மீனவர்களும் பாதிக் கப்படுகின்றனர்,'' என்று புலிகள் இயக் கத்தில் ராணுவப் பொறுப்பில் இருந்த கருணா அம்மான் தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான். இலங்கை மட்டக் களப்பு மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில், விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் பிறந்த இவர், '83ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, கருணா அம்மானாக மாறினார். படிப்படியாக உயர்ந்து புலிகளின் ராணுவப்பிரிவு தலைமை தளபதியாக இருந்து, இலங்கை அரசுப் படைக்கு எதிராக போர்க்களங்களில் நின்றவர். இலங்கையின் வடக்குப்பகுதி முழுவதையும், போர் நடவடிக்கையால் புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர். தற்போது, இலங்கை ராணுவ வசமாகியுள்ள கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளில் இருந்த ராணுவ முகாம்களை தாக்கி அழித்து அவற்றை புலிகள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். பிரபாகரனோடு ஏற்பட்ட மோதலால், 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய இவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(டி.எம்.வி.பி.,) என்ற அமைப்பைத் துவக்கினார். இலங்கை கிழக்கு மாகாணத்தில் இவரது கட்சி தான் தற்போது ஆட்சியில் உள்ளது. இலங்கை அரசில் நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ளார். இவர், புலிகளின் ராணுவத் தளபதியாக இருந்த போது பிடித்த பகுதிகள் முழுவதும் இப்போது மீண்டும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இலங்கையில் புலிகளின் நிலைக்களங்களை ராணுவம் முழுவதுமாக அழித்து, உள்நாட்டுப் போர் முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைமையில் கடுமையான பாதுகாப்பு கெடுபிடி களுக்கு இடையே, "தினமலர்' இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குடும்ப பின்னணி பற்றி...&lt;br /&gt;இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல்களின் ஊடாக இருக்கிறது எனது சொந்த கிராமம்; அருகில் கடலும் உண்டு. அப்பா விவசாயி. சொந்தமாக நிலம் இருந்தது. அம்மாவின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். நாங்கள் ஐந்து பேர். நான் கடைசியாக பிறந்தவன். எங்கள் அனைவரையும் அப்பா நன்கு படிக்க வைத்தார். படித்து பட்டம் பெற்று அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். குடும்பத்தில் எதற்கும் குறைவில்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் உங்களுக்கு இருந்ததா?&lt;br /&gt;இது பற்றி விரிவாக சொல்ல வேண்டும். '83ம் ஆண்டு குடாநாட்டில் அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமாகியிருந்தன. ஆதே ஆண்டு ஜூலை 23ம் தேதி நடந்த போராட் டத்தின் போது, 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராக துவேஷங்கள் விதைக்கப்பட்டன. அப்போதைய சிங்கள அரசியல்வாதிகள் இப்பிரச்னையை மிகவும் மோசமாக கை யாண்டு, இனமோதலை உருவாக்கினர்; இலங்கையில் கலவரம் வெடித்தது. கிட்டத் தட்ட ஐந்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்; உடைமைகள் நாசமாக்கப்பட்டன. கொழும்பில் கலவரம் தீவிரமாக இருந்தது. கலவரத்தில் சிதைந்து போன பல குடும்பங்கள், எங்கள் பகுதிக்கு அகதிகளாய் தஞ்சம் வந்தனர். அவர்கள் சொன்ன விஷயங்கள் கடுமையான அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின. இலங்கை முழுவதும் கொந்தளிப்பான நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இது தொடர்பான துண்டு பிரசுரங்களை கிராமங்கள் தோறும் வெளியிட்டு பிரசாரம் செய்தது. அதில் இருந்த விஷயங்கள் எங்களை ஈர்த்தன. இதைத் தொடர்ந்து எங்கள் பகுதியில் இருந்து 20 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தோம். உடனடியாக பயிற்சிக்காக வல்வெட்டித்துறையில் இருந்து, தமிழகத்தின் கோடியக்கரைக்கு படகில் அனுப்பினர். அங்கிருந்து மதுரை சென்றோம். அங்கு தான் பிரபாகரனை சந்தித்தோம். சேலம், கொளத்தூரில் இருந்த மையத்தில் தான் நான் பயிற்சி எடுத்தேன். இந்திய அரசு எங்கள் போராட்டத்தை ஆதரித்து, எல்லாவகை உதவியையும் செய்ததை இப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் புலிகளுடன் சேர்ந்த காலத்தில் இலங்கையில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோன்றியிருந்ததே...&lt;br /&gt;பிளாட், ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., என்று பல அமைப்புகள் இருந்தன. இவை எல்லாமே இந்தியாவில் உதவி பெற்றன. ஆனால், இவைகளில் இல்லாத அமைப்பு ரீதியான ஒழுக்கம் புலிகள் இயக்கத்தில் இருந்தது. குடிப்பது, பெண்கள் மீதான தவறான கண்ணோட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் தீவிரமான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தது. எங்கள் குடும்பம் ஏற்கனவே கட்டுப்பாடு ஒழுக்கத்தை அதிகமாக வலியுறுத்தியது. இந்த பின்னணியால் தான் புலிகள் இயக்கத்தை தேர்ந்தெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கமான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் தங்கியிருந்த போது, பல நேரங்களில் தங்களுக்குள் மோதிக் கொள்வதும், பொதுமக்களுடன் மோதிக்கொள்வதையும் நடைமுறையில் கடைபிடித்தார்களே. 1986ம் ஆண்டு தீபாவளியன்று சென்னை சூளைமேட்டில் சாலையில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்களே. பாண்டி பஜாரில் துப்பாக்கியால் மோதிக்கொண்டார் களே...&lt;br /&gt;உண்மை தான். விடுதலை இயக்கம் என்று இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டு, சகல உதவிகளையும் பெற்ற நாங்கள், அதன் பின் தான் உலக நாடுகள் பலவற்றாலும் விடுதலைப் போராளிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட நாங்கள், எப்படி பயங்கரவாதிகளாக மாற்றம் பெற்றோம் என்பதை சொல்ல வேண்டும்.விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டதை, அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் முறையாகப் பயன்படுத்தவில்லை. அவரது எதேச்சதிகாரமான போக் கும், ஆணவமும், வரட்டு கவுரவமும் இதை பயங்கரவாத இயக்கமாக மாற்றியது.இந்திய அமைதிப்படையை அனுப்பி சமாதான முயற்சி நடந்தபோது, பல்வேறு பிரச்னைகள் நடந்தன. அவற்றை அத்துடன் விட்டிருக்க வேண்டும். ஆனால், நன்றி மறந்து, இந்தியாவுக்குள் புகுந்து, அங்கு ராஜிவ் காந்தியை கொலை செய்துவிட்டார். இப்படித்தான், இயக்கத்தை எதேச்சதிகாரமாக பயங்கரவாத இயக்கமாக மாற்றிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ்காந்தியை கொலை செய்வது பற்றிய முடிவு எடுத்த போது நீங்கள் உடன் இருந்தீர்களா? அப்போது இயக்க ரீதியாக விமர்சனங்கள் சொல்லப்படவில்லையா?&lt;br /&gt;தெரியவே தெரியாது. ஆண்டன் பாலசிங்கத்துக்குக் கூட தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை நடந்து முடிந்த உடனேயாவது தெரியுமா?&lt;br /&gt;அப்போதும் தெரியாது. பின்னர், சிவராசன் ஆட்கள் பெங்களூரில் பிடிபட்டார்களே, அதுக்குப்பிறகு தான் இயக்கத்தில் அனைவருக்கும் தெரிந்தது. சிவராசனை அனைவருக்கும் தெரியும் என்பதால், இதை இயக்கம் தான் செய்தது என்று தெரிந்தது. தொடர்ந்து இயக்கத்தில் அது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தன. நானும் எனது கருத்தை தெரிவித்தேன். விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாம், இது போன்ற செயல்களை செய்வது தேவையற்றது. இது இயக்கத்தை பாதிக்கும் என்று சொன்னேன். பிரபாகரன் அதை நியாயப்படுத்தினார். அமைதிப்படை செய்த காரியம் சரியல்ல... "தமிழ்ப் பெண்களை அவர்கள் கற்பழித்தனர்' என்று, பல விஷயங்களைச் சொல்லி நியாயப்படுத்தினார். மற்றொரு நாட்டில் சென்று ஒரு தலைவரை கொல்வது நியாயமான செயல் அல்ல; இதை எந்த நாட்டுக்காரனும் ஏற்கமாட்டான் என்று சொன்னேன். அதை அவர் ஏற்காமல் மழுப்பி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரணத்தை முன்வைத்து இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் உண்டா?&lt;br /&gt;அப்படி யாரும் இல்லை. ஆனால் இனி இந்தியாவின் உதவி கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்தது. அதன்பின் தான், ஐரோப்பிய நாடுகளில் உதவி தேடப்பட்டது. தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கத்தை நடத்துவதற்கும், ஆயுதங்கள் வாங்குவதற்கும் பணம் வேண்டுமே. எந்த உற்பத்தியையும் சாராமல் இருந்த அமைப்புக்கு பணம் எப்படி வந்தது?&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் அறிவாளிகள். பொருளீட்டுவதற்காக அவர்கள் பல நாடுகளுக்கும் சென்றனர். 40ம் ஆண்டு வாக்கிலே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஏராளம். '83ம் ஆண்டு கலவரத்துக்குப்பின், வெளியேறி, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஏராளம். இவர்கள் மத்தியில் பிரசாரம் செய்து புலிகள் பணம் திரட்டினர். கண்டிப்பாக பணம் தரவேண்டும். அவர்கள் பற்றிய பட்டியல் இயக்கத்தில் இருந்தது. கண்டிப்பாக அவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்துக்கான ஆயுதங்களை வாங்குவதற்கு பேரங்கள் நடத்தியது யார்?&lt;br /&gt;கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் முதலில் ஆயுதங்கள் வாங்கப்பட்டன. கே.பி.என்., என்ற கே.பத்மநாபன் தான் ஆயுத பேரம் நடத்தியவர். கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளில் தான் வியாபாரிகளுடன் பேசி ஆயுதங்களை வாங்கி அனுப்புவார். அதன்பின், உக்ரேன் நாட்டில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. சீன தயாரிப்புகளும், உக்ரேன் கம்பெனிகள் மூலம் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்களை சிக்கலின்றி எப்படி கொண்டு வந்தீர்கள்?&lt;br /&gt;வெளிநாடுகளில் உள்ள வர்த்தக கம்பெனிகள் பெயரில் உள்ள கப்பல்களில் அனுப்புவர். அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெயரில் இருந்த கப்பல்களில் தான் ஆயுதங்கள் வந்தன. பல நேரங்களில் உபயோகத்துக்கு இனி உதவாது என்ற நிலையில் உள்ள கப்பல்களில் தான் ஆயுதங்கள் கொண்டுவரப்படும். அத்துடன் அந்த கப்பல் அங்கேயே கிடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள தமிழர் கள் யாராவது ஆயுத ரீதியாக உதவி செய்திருக்கிறார்களா?&lt;br /&gt;தமிழகத்தில் இருந்து ஆயுத ரீதியாக பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. வெடி பொருட்கள், கண்ணிவெடி செய்வதற்கான மூலப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து பலர் கடத்தி தந்துள்ளனர். அலுமினியம் பவுடர், பைபர் பிளாஸ்டிக் மெட்டரீயல் போன்றவையும் தமிழகத்தில் இருந்து கொண்டு வருவார்கள். அது இப்போது வரை கடத்தப்பட்டது. மன்னார்வளைகுடா வழியாத்தான் அதைக் கொண்டு வருவார்கள். இதை, இலங்கை ராணுவம் தற்போது தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எனவே இனி கடத்தல் நடத்துவது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில், புலி ஆதரவு பேசும் தலைவர்களுக்கு இந்த ஆயுதக் கடத்தல் பேரத்தில் தொடர்பு இருந்ததா?&lt;br /&gt;இருந்தது. இந்த கடத்தலின் ஊடாகத்தான், நெடுமாறன் வந்திருக்கிறார். வைகோ வந்திருக்கிறார். எல்லாரும் இல்லீகலாகத்தான் வந்தனர்; கள்ளத்தோணியில் தான் வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத கடத்தல் ரீதியான நேரடி தொடர்பு தமிழக தலைவர்களுக்கு இருக்கிறதா?&lt;br /&gt;இருக்கிறது; பணம் விடுதலைப் புலிகளால் வழங்கப்படுகிறது. இதுதான் உண்மையான விஷயம். தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் பலத் தலைவர்களுக்கும் அந்த சப்போர்ட் தான், ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கடத்துவதற்கு உதவியாக உள்ளது. இதில் கிடைக்கும் பணம் தான் இவர்களை, புலிகளுக்கு ஆதரவாக பேச வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் நேரடியாக தமிழகத் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா?&lt;br /&gt;இல்லை. மீனவர்கள் போர்வையில் ஆயுத தயாரிப்புக்கான மூலப்பொருள் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல ஏஜென்டுகள், மீனவர்கள் போர்வையில் இதைச் செய்கின்றனர். இந்த ஏஜென்டுகளுக்கு பின்னணியில் புலி ஆதரவு பேசும் தமிழகத் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக பணம் தாராளமாக போய் சேர்கிறது. இப்படி வரும் மூலப் பொருட்களை இலங்கை கடற்படை மடக்கிப் பிடிக்கிறது. இந்த கடத்தலை தடுக்கும் பொருட்டுத்தான், அடிக்கடி துப்பாக்கிச் சூடுகள் நடக் கின்றன. இலங்கை கடற்படை அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதால் தமிழகத்தில் பல அப்பாவி மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழ்க்கை இவ்வளவு நெருக்கடிகளை சந்திக்க யார் காரணம்? இன்றைக்கு இலங்கையில் இந்த அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடக்கிறது? அது பிரபாகரனால் தானே நடக்கிறது. இதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவருடன் நான் 22 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். ராணுவத்துடனான அனைத்து சண்டைகளையும் நான் தான் நடத்தினேன். அவர் ஒரு முறை கூட போர்க்களத்துக்கு வந்தது கிடையாது. பிரபாகரன் என்றால் ஒரு டம்மி ஆள் போலத்தான். அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த நபராக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். குறிப்பாக நானே அவரிடம் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன். நான் ஒருவன் தான் அப்போது அவரிடம் பேச முடியும். இயக்கத்தின் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். தனிநபர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்; பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்று சொன்னேன். சிங்கள மக்களை கொலை செய்வதை நிறுத்த வேண்டும்; முஸ்லிம் மக்களுடன் இணக்கம் வேண்டும் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்களே...&lt;br /&gt;இது பிரபாகரனின் பாசிச மனநிலை. தான் என்ற அகங்காரத்தில் எடுத்த முடிவு. கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது நான் கடுமையாக எதிர்த்தேன். அங்கே தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை வலியுறுத்தி சொன்னேன். எதையும் கேட்கவில்லை. யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த முஸ்லிம்களை விரட்டியடித்தனர். வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். வர்த்தக மையங்களை கொள்ளையடித்து பொருட் களை தெருவில் போட்டு விற்றனர். நூறு கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பொருட்கள் விற்கப்பட்டது. ஒரு பொருளை கூட எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது போர்க்களத்தில் நிற்கிற பானு என்பவர் தான் சூறையாடுவதற்கு தலைமை ஏற்றவர்.  இவையெல்லாம் மறையாத வடுக்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பிரச்னையை தீர்க்க பல வாய்ப்புகள் இருந்தன. பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. இவை எதையும் பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இவைதான் காரணமா...&lt;br /&gt;நான் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. 22 ஆண்டுகள் நான் போர்க்களத்தில் இருந்துள் ளேன். சண்டைகளுக்கு தலைமை ஏற்றிருந்தேன். ராணுவப் பொறுப்பாளராக நான்தான் இருந்தேன். அமைப்பில் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொறுப்பாளர் இருந்தனர். அயல்நாட்டு உறவுக்கு என்று கூட பிரிவு இருக்கிறது. ராணுவத்துக்கு நான் தான் தலைமை பொறுப்பாளன். ஒரு நாட்டின் ராணுவ அமைப்பு போல் தான் செயல்பட்டோம். 30 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இதில், ஆறாயிரம் பேர் பெண்கள். ஒரு கட்டத்தில், அரசியல் தீர்வுக்கு வாய்ப்பு இருக்கும் போது ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு பின், நடந்த பேச்சுவார்த்தைகளை கணக்கில் எடுக்க வேண்டும். 2001ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தை முக்கியமானது. சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புடன் பேச்சு நடந்தது. பேச்சு வார்த்தைக் குழுவில் நானும் ஒருவனாக நியமிக்கப்பட்டிருந்தேன். உலக நாடுகளில் நாங்கள் பேசினோம். சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை எடுப்பதற்கு முயற்சி செய்தோம். கடைசியில் நார்வேயில் நடந்த பேச்சு வார்த்தையில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்பதாக ஒரு அறிக்கையை தயாரித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கான இறுதி வடிவம் தயாரித்து முடிவு எடுக்கப்பட்ட போது, நாங்கள் பிரபாகரனிடம் இது பற்றி கேட்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. பேச்சு வார்த்தைக்கு எங்களை அழைத்த போதே, "பேச்சு பேச்சு என்று சொல்லி ஐந்து ஆண்டுகளை கடத்துங் கள். அதற்குள் ஆயுதங்களை வாங்கி குவித்து மீண்டும் தாக்குதல் நடத்தலாம்' என்று, பிரபாகரன் எங்களிடம் சொல்லி அனுப்பியிருந்தார். நாட்களைக் கடத்துவது என்றால் விஷயம் இல்லாமல் முடியாது. ஐந்து வருடம் என்பது இயலாது. சர்வதேச சமூகமே இதை பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய முடியும். மீண்டும் காலம் கடத்த முடியாது. ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாகத்தான ஒப்பந்தத்தில்தானே கையெழுத்துப் போடுகிறோம். நீங்கள் போடுங்கள் என்று பாலசிங்கத்திடம் நான் சொன்னேன். அவரும் சம்மதித்து கையெழுத்தைப் போட்டார். அதன்பின்தான் சொன்னார், "இதை நான் அங்கு கொண்டு வந்தால், பிரபாகரன் என்னை சுட்டுப்போடுவான். நான் என்ன செய்ய' என்றார். "நார்வேயிலிருந்து நீங்கள் நேராக லண்டனுக்கு போய்விடுங்கள். ஒப்பந்த பத்திரத்தை நான் கொண்டு போகிறேன்' என்று சொன்னேன். நானும், தமிழ்ச்செல்வனும் ஒப்பந்தத்துடன் இலங்கைக்கு கொண்டு வந்து மொழிப் பெயர்ந்து பிரபாகரனிடம் கொடுத்தோம். இதைப் பார்த்ததும் மிகுந்த கோபப்பட்டார். அதைத் தூக்கி வீசி எறிந்தார் பிரபாகரன்.  (தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=2767&amp;ncat=&amp;archive=1&amp;showfrom=1/15/2009"&gt;அப்பாவித் தமிழரைக் காப்பாற்ற, புலித் தலைவர் சரணடைய வேண்டும்': தினமலர் இதழுக்கு கருணா அம்மான் அளித்த சிறப்பு பேட்டி - 02&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில், ஓர் அமைதி ஒப்பந் தத்தை, "பரிசீலிக்கிறோம்' என, கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைக் கொண்டு வந்து 2003ம் ஆண்டு மார்ச் மாதம் பிரபாகரனிடம் கொடுத் தோம். உடனே அதைத் தூக்கி வீசி எறிந்தார். "போராட்டத்தை விற்றுவிட்டு வந்து நிற்கிறீர்கள்' என்று, கத்தினார். "ஆச்சடா போச்சடா' என்று சத்தம் போட்டார். நான் சொன்னேன், நீங்கள் சொல்வது போல் இல்லை. போர்க்களத்தில் நான் தான் நிற்கிறேன். ஆயிரக்கணக்கில் ராணுவத்தைக் கொன்று குவித்துள்ளோம். போராளிகளும் மடிந்து போகின்றனர். ஆனால் மாற்றம் வந்துள்ளதா; வராது. போராளிகள் நம்பிக்கை இழந்து போகின்றனர். நாங்கள் எத்தனை பேரைக் கொன்றாலும், ராணுவமும் கொன்றுகொண்டுதான் இருக்கும். ஏனென்றால் அது ஒரு நாடு; நாட்டை எதிர்த்து போராடுகிறோம். உலகில் ஒரு நாடும் நம்மை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவின் ஆதரவும் இல்லை. அப்படியே ஆதரித்தாலும், பிரிவினை செய்து தனிநாடாக, இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது என, பிரபாகரனிடம் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் தான், பெடரல் மாதிரி ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதற்காக, சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்து அந்த நாட்டின் அரசின் மாதிரியை படித்தோம். அதே போல் ஓர் அமைப்பை இலங்கையில் கொண்டு வரவேண்டும் என்று தான் விரும்பினோம். அதன் அடிப்படையில் தான், ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட துணிந்தோம். அது இந்த மனிதருக்கு விளங்கவில்லை. உடனே, பிரிவின் பொறுப்பாளர்களைக் கூப்பிட்டார் பிரபாகரன். "இவன் போராட்டத்தை விற்று வந்திருக்கிறான். எனக்கு துரோகம் செய்துவிட்டான்' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் போர்ச்சூழலை விளக்கினேன்; போராளிகளின் மனநிலையைச் சொன்னேன். அதுவரை 14 ஆயிரத்து 500 போராளிகள் மடிந்திருந்ததைச் சொன்னேன். இனி இவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் தந்திரமாக நடந்து கொண்டேன். நான் நேராக மட்டக்களப்பு படைப் பிரிவுக்கு சென்று விட்டேன். அங்கு 6,000 போராளிகள் இருந்தனர். மறுநாள் கிளிநொச்சிப் பகுதிக்கு, 2,000 போராளிகளை அனுப்பச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். நான் சண்டையை விரும் பவில்லை; போராளிகளை அனுப்ப மாட்டேன் என்று கூறிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, கிழக்கு மாகாணத்தில் இருந்த போராளிகள் மனநிலை எப்படி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். இரண்டு மாகாணங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. மட்டக்களப்பு பகுதியில் படை பலம் அதிகம். யாழ்ப்பாணம் பகுதியில் பணபலம் அதிகம். மட்டக்களப்பு பகுதி தான் படையில் பலமாக இருந்தது. வடக்குப் பகுதியில் இருந்த தமிழர்களிடம் ஒரு ஆளை போராளியாக்க வேண்டும் என்று கேட்டால், 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து சமாளித்து விடுவார்கள். அந்த வீட்டில் உள்ளவரை உடனே ரகசியமாக புறவாசல் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருந்தது. அதுவரை போரில் மடிந்த போராளிகளில் 8,000 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை அதிகம்; கிழக்கு மாகாணத்தில் குறைவு. ஆனால், படைப்பிரிவில் கிழக்கு மாகாண போராளிகள் தான் அதிகம் இருந்தனர். முஸ்லிம்கள் இதில் அடக்கமில்லை. படைப்பிரிவில் இருந்த இந்த முரண்கள் போராளிகளிடமும், பொதுமக்களிடம் அவ்வப்போது முணுமுணுப்பாக வெளிப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, 2,000 போராளிகளை கிளிநொச்சிக்கு அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது தான், பிரபாகரன் உத்தரவை முதன்முறையாக, நான் மீறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதை சூழ்நிலை எப்படி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;உடனே என்னை தலைமையகத்துக்கு அழைத்தனர். உடனடியாக வரவேண்டும் என்றனர்; நான் மறுத்துவிட்டேன். அங்கு போனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். சுட்டுத்தான் போடுவார்கள். எனவே, சண்டையில் விருப்பமில்லை என்று கூறிவிட்டேன். அப்போது நான் மிகவும் நிதானமாக செயல்பட்டேன். ஏற்கனவே இது போன்ற அனுபவம் ஒன்று இருந்தது. இந்தியப் படை வெளியேறிய போது, தமிழர்களுக்கான படை (டி.என்.ஏ.,) ஒன்று அமைக்கப்பட்டது. அந்த படையில் இருந்த தமிழ் இளைஞர்கள் 1,200 பேரை 18 நாளில் நாங்கள் கொன்று குவித்தோம். அது வீரமான செயல் அல்ல என்று எனக்குத் தெரியும். அவசரப்பட்டால் அதேப்போன்று ஓர் நிலை ஏற்படும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் நிதானமாக செயல்பட்டேன். மீண்டும் நாகரிகமற்ற முறையில் எங்களுக்கு நாங்களே மோதிக் கொண்டு, எங்கள் ரத்தத்தையே ஆறாக ஓடவிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. போராளிகளுடன் கலந்து பேசினேன். கிழக்கு மாகாணத்தில் போராளிப் படைப் பிரிவைக் கலைத்து விடுவது என்று முடிவு செய்து பிரபாகரனுக்கு தெரிவித்தோம். உடனடியாக 6,000 போராளிகளையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டேன். அவர்கள் அனைவரும் புலிகளின் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டனர். படைப் பிரிவு கலைக்கப்பட்டுவிட்டது. கடைசியாக பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். படைப்பிரிவு கலைக்கப்பட்டுவிட்டது. கலைத்தது நான்தான். எனவே போராளிகள் யாருடனும் மோதலில் ஈடுபடவேண்டாம். அப்படி மோதுவதானால் என்னுடன் மோதுங்கள். நான் இதற்கு காரணமான ஆள். இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்தேன். 2003ம் ஆண்டு சித்திரை மாதம் இது நடந்தது. அதன்பின் நாங்களும் படைப்பிரிவின் முக்கியஸ்தர்களும் வெளிநாடு சென்றுவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் பிரச்னை முடிந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;முடியவில்லை. வடக்கு மாகாண போராளிகளைக் கொண்டு, கிழக்கு மாகாணத்தில் போர் தொடுக்க வைத்தார் பிரபாகரன். சொந்த நாட்டு மக்களையே, அன்னியர்கள் போல் பாவித்து கொலை செய்ய உத்தரவிட்டார். இந்த வெறியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 520 பேர், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளால் கொல்லப்பட்டனர். அப்போது மிகவும் வேதனை அடைந்தேன். மக்களை விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாதோ என்று நினைத் தேன். அந்த சூழ்நிலையில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று யோசித்தோம். புலிகளிடம் இருந்து எங்கள் பகுதி மக்களை காக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் தான் இலங்கை அரசுடன் சேர்ந்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு எங்களை அழைத்தது. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது புலிகளிடம் இருந்து எங்கள் பகுதி மக்களை காப்பது பற்றி கேட்டோம். ஆயுதங்களை கீழேப் போடுவது பற்றி பேசினோம். கிழக்கு மாகாணத்தில் இலங்கை-இந்திய ஒப்பந்த அடைப்படையில் தீர்வு காண விரும்பித்தான் பேசினோம். ஆயுதப் போராட்டத்தை கைவிட விரும்பினோம். அதன்பின் தேர்தல் நடத்தப்பட் டது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். முதல்வர் பதவியை பிடித்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப் பட்டுள்ளன. அதிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான், உங்கள் கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. இப்படித் தவறான தகவல் பரப்பப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழர், சிங்களர், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலைமையை விரும்பாத சிலர், இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தில் நிலைமை எப்படி இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வளர்ச்சிப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் சுபிட்சமாக வாழ தேவையான வளர்ச்சிக்கான திட்டங்களை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அரசு தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் லண்டனில் இருந்த போது சில சம்பவங்கள் நடந்தன. நான் இங்கு வந்தவுடனே, அது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். தமிழர் - முஸ்லிம் நட்புறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிராம ரீதியாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ள கவுன்சிலிங் செய்து வருகிறோம். வன்முறைகளை தடுக்க எந்தெந்த வழிகளில் முடியுமோ அத்தனை வழிகளையும் கையாண்டு வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் - சிங்களர்களிடையே குரோதம் குறைந்துள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;குரோதத்தை வளர்த்ததே அரசியல் தலைவர்கள்தானே. வெறுப்புணர்வுகளை களையும் வகையில் பல செயல்பாடுகள் நடக்கின்றன. கிழக்கு மாகாண மக்களுக்கு பிரபாகரன் என்ற ஆளைத் தெரியாது. அவர் கிழக்கு பகுதிக்கு வந்ததும் இல்லை. அந்த ஆளை, கிழக்கு பகுதி தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தவன் நான்தானே. இப்போது, எங்களுடைய மக்களிடம், "பிரபாகரன் என்ற ஆளை தூக்கி எறியுங்கள். நாம் இலங்கை என்ற நாட்டில் வாழ்கிறோம். இது நமது நாடு. இது நமது ராணுவம். தேசிய அளவில் நாம் விட்டுக்கொடுத்து, இணக்கமாக வாழ வேண்டும்' என்று வலியுறுத்தி வருகிறேன். "பிரச்னைகளை நமக்குள் பேசித் தீர்க்க வேண்டும்' என்றும் கூறி வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுடனான இலங்கை ராணுவத்தின் போர் உச்சக்கட்ட நிலையில் உள்ளதே?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ராணுவம் புலிகள் பரப்பளவை சுருக்கி வருகிறது. புலிகள் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். நான் படைப்பிரிவில் இருந்து வெளியேறிய பின் போர்முனையில் புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட அவர்கள், இப்போது வடக்கு மாகாணத்திலும் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியை ராணுவம் நெருங்கிவிட்டது. இந்த நிலை ஏற்படும் என்று எங்களுக்கு அப்போதே தெரியும். நாங்கள் சொன்னபோதே சமாதான ஒப்பந்தத்துக்கு பிரபாகரன் சம்மதித்திருந்தால் இப்போதைய நிலை ஏற்பட்டிருக்காது. தோல்வியடையாமல், பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம். பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்போதைய போரில் மடிந்திருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் பிரபாகரன் தான். பிரபாகரனின் பிடிவாதத்தால், புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்ற பெயரை மட்டும்தான் பெற முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் பிரபாகரனின் வியூகம் எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் கடைசி நகரம் கிளிநொச்சி தான். அங்கு 80 ஆயிரம் பேர் வசித்தனர். அதை ராணுவம் பிடித்து விட்டது. இந்த நகரை விடமாட்டோம் என்று பிரபாகரன் வெளிநாட்டில் பிரசாரம் செய்து வந்தார். அவரது வாய்ச்சவடால் தகர்க்கப்பட்டுள்ளது. புலிகளின் இயக்கம் 40 சதுர கி.மீ., பரப்பளவுக்குள் சுருக்கப்பட்டுவிட்டது. முல்லைத்தீவு தான் ராணுவத்தின் அடுத்த குறி. கடற்படை வீரர்கள் இப்போது வடக்கு கடல் பகுதியில் இருந்து நெருக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபாகரன், அந்த பகுதியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறார். அவர்களை பிடித்து வைத்துள்ளார். தப்ப முயன்றால் சுட்டு விடுவோம் என மிரட்டி வைத்திருக்கிறார். பொதுமக்கள் தப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பு உண்டு. ஆனால் கிழக்கு மாகாணமும் இதேப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கும் பொதுமக்களை கேடயமாக புலிகள் பயன்படுத்தினர். ஆனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, புலிகளை அடக்கியது ராணுவம். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் செய்தது. அதே போல்தான் இங்கும் நடக்கும். ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்த போதும், இலங்கையில் அந்த இயக்கம் தடை செய்யப்படவில்லை. சில நாட்களுக்கு முன்தான் தடை செய்யப்பட்டது. அப்படியானால், இலங்கை அரசு எவ்வளவு நிதானமாக நடந்து கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரன் பிடியில் மனிதக் கேடயங்களாக உள்ள பொதுமக்கள் துணிந்து அங்கிருந்து வெளியேற வேண்டும். மட்டக் களப்பு மாவட்டத்தில் ராணுவ நடவடிக்கையின் போது, இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது 60 ஆயிரம் பொதுமக்கள் இதேப் போன்று வெளியேறினர். அவர்களை ராணுவம் பாதுகாத்தது. அனைவரும் புலிகள் என்று கூறி சுட்டு வீழ்த்திவிட வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவு பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் வெற்றியடையும் போது பிரபாகரன் நிலை என்னவாக இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவம் இன்னும் சில நாட்களில் வெற்றியடையும் என்று அங்கிருந்து வரும் தகவலை வைத்து உறுதி செய்கிறேன். ராணுவம் வெற்றி யடையும் போது பிரபாகரனின் நிலை என்னவாகும் என்று சொல்ல முடியாது. உலக வரலாற்றில் பலரும் பிடிபட்டுள்ளனர். இவர் பிடிபடுவாரா அல்லது சயனைட் சாப்பிடுவாரா என்பதை உறுதி செய்ய முடியாது.பிரபாகரன் என்ற ஆள் வெளி உலகுக்கு தெரிவது போல் மனஉறுதி மிக்கவர் அல்ல. அவரை உறுதி மிக்க ஆளாக காட்டியது, போராளிகளின் தியாகம்தான். அவர் தஞ்சம் தேடி வெளிநாடுகளுக்கு போகவும் வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இயக்க போராளிகள், சுற்றி வளைக்கப்படும் போது, தற்கொலை செய்யும் முடிவை எடுக்கிறார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;இது பயிற்சி பெற்ற போராளிகள் எடுக்கும் முடிவு. ஆரம்ப காலத்தில் இருந்த பிரபாகரனும் சூழ்நிலைகளின் அடிப்படையில் இப்படிப்பட்ட முடிவை எடுக்கும் துணிச்சல் உள்ளவர்தான். பின்னர் அவரது வாழ்க்கை போக்கு மாறிவிட்டது. சொகுசு வாழ்க்கைக்கு வந்துவிட்டார். பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து வெளிநாடுகளில் தஞ்சம் தேடத்தான் முயற்சிப்பாரே தவிர, வேறுவகையான முடிவை அவர் எடுப்பார் என்று எனக்கு தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ தலைவர்கள் சிலர் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனரே...&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தம் அவசியம்தான். பொதுமக்களை பாதுகாக்கத்தான் போர்நிறுத்தம் செய்ய வேண்டும்; பிரபாகரனைக் காப்பாற்ற அல்ல. போர் நிறுத்தம் அவசியம் என்றால், இந்த சூழ்நிலையில் பிரபாகரன் சரணடைய வேண்டியதுதானே. போர் நடவடிக்கைக்கு நான்தான் காரணம். அப்பாவி பொதுமக்கள் பாதிக் கப்படக் கூடாது என்றால் அவர் ராணுவத்திடம் சரணடைந்துவிடவேண்டியதுதானே. அவர் சரணடைந்தால், போர்நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். இதை தமிழகத் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும். பிரபாகரனை ஒரு கதாநாயகனாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2783&amp;cls=row3"&gt;புலித் தலைவர் பதுங்கியுள்ள இடம் எது? : தினமலர் இதழுக்கு கருணா அம்மான் அளித்த சிறப்பு பேட்டி - 03&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பிரச்னை தொடர்பாக, நார்வே சமாதானக் கூட்டத்தில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போட்ட புலிகளின் அப்போதைய போர்ப் படைத் தளபதி கருணா அம்மானுக்கும் பிரபாகரனுக்கு மோதல் ஏற்பட்டது. புலிகளை உதறி வெளியேறிய கருணா அம்மான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை துவக்கி, எம்.பி.,யாக இலங்கையில் பதவி வகிக்கிறார். அவர் தினமலர் இதழுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் சிலர் சித்தரிப்பது போல் பிரபாகரன் இல்லை. தமிழர் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டே, தமிழ் மக்களையே வெட்டிச் சாய்ப்பவர். அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை கொடூரமாக கொன்றவர். நீலம் திருச்செல்வம் போன்ற அறிவு மிக்க தலைவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தவர். மாற்று இயக்கத்தில், போராடிய பத்மநாபா போன்றவர்களை இரக்கமின்றி கொன்றார். இலங்கை ராணுவ வீரர்களை விட, சொந்த மக்களை அதிகமாகக் கொன்று குவித்தது தான் இவரது சாதனை. அனைவரையும் கொன்று விட்டு யாரை வைத்து விடுதலையைக் கொண்டாட நினைக்கிறார். இதுபோன்ற பயங்கரவாதியை கதாநாயகனாக பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இந்த ஆளை ஹீரோவாக சித்தரிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல. மாற்றுக் கருத்து சொல்வோரை துரோகி என்று முத்திரை குத்திவிடுவார். இப்போது என்னையும் துரோகி என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். நல்ல நோக்கத்துக்காகத்தான் நான் வெளியேறினேன். அவரது பார்வையில் நான் துரோகியானதால் தான் எங்கள் மக்கள், இன்று நிம்மதியாக இருக்கின்றனர். ஓட்டளித்து எங்களை வெற்றி பெற செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்களை கொல்லும் முடிவை எடுப்பது யார்?&lt;br /&gt;வேறு யார். சர்வாதிகாரமாக முடிவுகளை எடுப்பது பிரபாகரன் தான். முடிவை எடுத்து அதை செயல்படுத்த உரியவரை தேர்ந்தெடுத்து, அந்த பணிக்கான பொறுப்பாளர்களிடமும் மட்டும் தான் அது பற்றி பேசுவார். வேறு யாருக்கும் தெரியாது. மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். சம்பவம் நடந்த பின்னர் தான், இயக்கத்துக்கு தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிக் கட்டுப்பாட்டு பகுதியில் நிர்வாக நடைமுறை எப்படி இருந்தது?&lt;br /&gt;நிலம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்கு இலங்கை அரசு நிர்வாக நடைமுறைதான் செயல்பட்டது. பள்ளிகளை அரசு தான் நடத்தியது. அரசு நாணயமுறைதான் புழக்கத்தில் இருந்தது. நில பத்திரப்பதிவும் அரசு நிர்வாகம் தான். நிலம் வாங்குவோரும், விற்பவரும் புலிகளுக்கு கப்பம் கட்ட வேண்டும். இது கட்டப்பஞ்சாயத்து மாதிரி நடக்கும். தனி நாணய புழக்கமோ, தனி நிர்வாகமோ அங்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ், நீதி பரிபாலனம் போன்றவை?&lt;br /&gt;நீதி நடைமுறை முதலில் கட்டப் பஞ்சாயத்தாகத்தான் நடந்தது. புலிகள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்களின் ஆதரவாளர்களுக்கு சாதகமான நடைமுறை. மிகவும் சீரழிந்து கிடந்தது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்தனர். அதன்பின் கொஞ் சம் கொஞ்சமாக புனரமைக்கப்பட்டது. உள்ளூர் போலீஸ் நடைமுறை உருவாக்கப்பட்டது. நீதிபரிபாலனமும் புலிகள் கட்டுப்பாட்டில் தான் நடந்தது. அதுவும் கேலிக்குரிய வகையில் தான் நடக்கும். குற்ற நடைமுறை விசாரணையில் வக்கீல் கள் 8, 9ம் வகுப்பு படித்தவர்களாக இருந்தனர். அவர்கள் என்ன சொல்கின்றனரோ அதைத்தான் இயக்கம் எடுத்துக் கொள் ளும். ஒரு பிரச்னையை அணுகி, அதன் சாதக பாதகங்களை உணர்ந்து செயல்படத் தகுத்த படித்த இளைஞர்கள் இல்லை. சிந்திக்கத் தெரிந்தவர்களை பிரபாகரனுக்குப் பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதா?&lt;br /&gt;அங்கு புனரமைப்புப் பணி நடந்து வருகிறது. கல்வியிலும் தீவிர கவனம் செலுத்துகிறோம். மீன்பிடித் தொழிலை அபிவிருத்திச் செய்ய, இந்தியா மிகவும் உதவி வருகிறது. வளர்ச்சிப் பணிகள் நடந்தாலும், உடனடியாக நிலைமை மாறிவிடும் என்று சொல்லிவிடமுடியாது. 30 ஆண்டு இடைவெளி என்பது சாதாரணமானது அல்ல. மாற்றியமைக்க கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கான உடனடி தேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். வளர்ச்சியை மேற்கொள்வதிலும் கடும் சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பணத்துக்காக, போதைப் பொருள் கடத்தலில் புலிகளுக்கு தொடர்பு உண்டா?&lt;br /&gt;உண்டு. இது உலக அளவில் வியாபித்து இருக்கிறது. தமிழகமும் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆப்கானிஸ் தான், கொலம்பியா போன்ற நாடுகளில் இருந்து போதைப் பொருட்களைக் கடத்துகின்றனர். இதில், தமிழகமும் மன்னார்வளைகுடாவும் முக்கிய கேந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா?&lt;br /&gt;இருக்கலாம். புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று அனைவருக்கும் தெரிந்த பின்னும், அந்த இயக்கத்தை ஆதரித்து பேசுவதற்கு, இதன் மூலம் புழங்கும் பணம் காரணமாக இருக்கலாம். ஆனால் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழகத் தலைவர் ஒருவர் கூறியுள்ளாரே?&lt;br /&gt;இது வேடிக்கையான கோரிக்கை. இலங்கை ஒரு நாடு. தனித்தன்மை பெற்றது. உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்தபிறகும், அந்த இயக்கம் பயங்கரங்களை அரங்கேற்றுவது தெரிந்தும், இலங்கை அரசு தடை செய்யவில்லை. இப்போது தான் தடை செய்துள்ளது. சமாதான தீர்வு ஏற்பட்டு, அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்பு கொடுத்திருந்தது. பிரபாகரன் அதை பயன்படுத்தவில்லை. தமிழகத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கும் தெரியும், ராஜிவ் காந்தியை கொன்ற பயங்கரவாதி பிரபாகரன் தான் என்று. இப்படிப்பட்ட நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியது ஒரு நாட்டின் அதிபரையா? பிரபாகரன் என்ற பயங்கரவாதியையா? தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் போர்ப்படையில் சிறுவர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறதே?&lt;br /&gt;ஆரம்ப காலத்தில் இது நடைமுறையில் இல்லை. போர்க்களங்களில் சேதம் அதிகரித்த போது, படைக்கு ஆட்கள் அதிகம் தேவைப்பட்டனர். போரில் மக்களும் அதிகமாக மடிந்து போயினர். படையில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. தயாராகவும் இல்லை. போர் தீவிரமான போது, அதை சந்திக்க ஆட்கள் தேவைப்பட்டனர். சிறுவர் -சிறுமியரை கட்டாயமாக படையில் சேர்க்க வேண்டியிருந்தது. 16, 17 வயது சிறுவர்- சிறுமியர் சேர்க்கப்பட்டனர். சர்வதேச அளவில் போராளிக் குழுவில் சேர வயது வரம்பு 19 ஆகவும், ராணுவத்தில் சேர 18 ஆகவும் சட்டம் உள்ளது. இந்த நடைமுறையை, புலிகள் ஒரு காலகட்டத்துக்குப் பின் கடைபிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சேர்க்கப்பட்ட, சிறுவர் -சிறுமியர் கிழக்கு மாகாணப் படையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், இப்போது அவர்கள் நிலை என்ன?&lt;br /&gt;இப்போது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர். வாழ்க்கையை எதிர்கொள் வதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. பெண்களுக்குத்தான் அதிக சிக்கல். அவர் கள் பல பிரச்னையை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. முற்றாக வேறு வாழ்க்கை தளத் தில் அவர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சிக்கல்களை சமாளிக்க உளவியல் ரீதியான கவுன்சிலிங்கிற்கு யுனிசெப் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய் துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறப்படுகிறதே?&lt;br /&gt;பயங்கரவாத பிரச்னை உலக அளவிலானது. இலங்கையில் மட்டும் இது இல்லை. புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு. இதற்கு தமிழகத்தில் இருந்து சிலர் ஆதரவு தெரிவித்து, குரல் கொடுத்துக் கொண்டிருந்த போதே, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்கினர். ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாலேயே, மற்ற பயங்கரவாதிகள் ஊக்கம் பெறுகின்றனர். பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியைத்தான் இலங்கை அரசு எடுத்து வருகிறது. இதை மனித உரிமை மீறல் என்று சொல்ல முடியாது. புலிகள் இயக்கத்தை தங்கள் பிரதிநிதியாக தமிழ் மக்கள் சொல்லவும் இல்லை. ராணுவ நடவடிக்கையின் போது, சேதத்தை தவிர்க்க இயலாது. மீறல்களை தடுக்கவும் முடியாது. முடிந்த அளவு குறைக்க அரசை வலியுறுத்தி வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டுப் போர் எப்போது முடிவுக்கு வரும்?&lt;br /&gt;காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. அது ராணுவத்தின் தந்திரத்தைப் பொறுத்து அமையும். புலிகள் தோற்கடிக்கப்படுவது நிச்சயம். புலிகளிடம் முறையான தலைமை இல்லை; ஆள்பலம் இல்லை; ஆயுதம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் எங்கு இருப்பார்?&lt;br /&gt;முல்லைத் தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தான் இருப்பார். அவரது பாதுகாப் புக்கு 1,000 போராளிகள் இருப்பார்கள். நிலப்பரப்பு சுருங்கும் போது, ராணுவ தாக்குதல் வலிமை பெறும். பிரபாகரன் தப்பமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளாரே?&lt;br /&gt;தேர்தலில் நாங்கள் பங்கேற்போம். நாங்கள் தேசிய அளவில் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறோம். தமிழர் சிங்களர், முஸ்லிம் மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை இடத்தை பிடிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் புலிகள் தவிர வேறு குழுக்கள் இயங்குகிறதா?&lt;br /&gt;அரசியல் கட்சிகள் உள்ளன. கூட்டமைப்பு புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக கத்திக் கொண்டிருக்கிறது. கத்தாவிட்டால் புலிகள் அவர்களைச் சுட்டுவிடுவார்கள். அங்கு நல்லத் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில் தங்கள் செயல்திட்டத்தை மாற்றிக் கொண்டு சுதந்திரமாக இயங்க துவங்குவார்கள் என்று நம்புகிறேன். வடக்கில் ஆனந்தசங்கரி, டக்ளஸ்தேவானந்தா போன்றோர் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. காலப்போக் கில் நாங்களும் அந்தக் கூட்டமைப்பில் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழர்களின் வாழ்வில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக மக்களிடம் நீங்கள் வைக்கும் வேண்டுகோள்?&lt;br /&gt;புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் முன்னேற்றம் என்ற பெயரில் கோடி கோடியாக பணத்தை தமிழர்களிடம் பிரபாகரன் வாங்குகிறார். அந்த பணம் தமிழ் மக்கள் முன்னேற்றத்துக்கு செலவிடப்படவில்லை. அது பிரபாகரனின் வங்கிக் கணக்கிற்கும், ஆயுதம் வாங்கவும் தான் செல்கிறது. எனவே புலிகள் இயக்கத்துக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். போரில் சிதைந்து போன பகுதி புனரமைப்புக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களின் ஜாதியமைப்பு, போர்ச் சூழலால் சிதைந்துள்ளதா?&lt;br /&gt;இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஜாதி தொடர்பான நெருக்கடி மிகவும் குறைவு. அதாவது வடக்குப்பகுதியில் 90 சதம் என்றால், இங்கு 5 சதவீதம் தான். யுத்தம், இடப்பெயர்வுகளால் பழைய அளவில் ஜாதிய அடக்கு முறை இல்லை. போர் முனையில் இருந்து தப்பி ஓடி முகாம்களில் தஞ்சம் அடையும் போது, அங்கு ஜாதி பார்த்துக் கொண்டிருக்கவா முடியும். ஆனாலும், முற்றாக ஒழிந்து விட்டதாகக் கூற முடியாது; யாழ்ப்பாணத்தில் உயர்ஜாதி என்று கூறிக் கொள்பவர்கள், பிரபாகரனைக் கூட ஜாதி ரீதியாக ஏற்றுக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் உண்டா?&lt;br /&gt;கிழக்கில் மருத்துவ உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் எண்ணிக்கை குறைவு. சிங்கள டாக்டர்களை அழைத்து வருகிறோம். அப்படி வந்த டாக்டர் ஒருவரை புலிகள் சுட்டுக் கொன்றனர். அதேப் போன்று கிழக்கு மாகாண பல்கலையில் படித்த சிங்கள மாணவர் ஒருவரை புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர். இது போன்ற அட்டூழியங்களால் திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். '83ம் ஆண்டு ராணுவ வீரர்கள் 13 பேரைக் கொன்றதால் தான் கலவரம் பரவியது. இன்று பல சம்பவங்கள் நடந்த போதும், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் தான் இந்த அரசை நம்புகிறோம். இதை புரிந்து கொண்டு, இணக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிட வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் திருமண வாழ்வு பற்றி...&lt;br /&gt;எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மனைவி படித்தவர். இயக்கத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். வெளிநாட்டில் வசிக்கின்றனர். திருமணம் முடிந்ததில் இருந்தே பிரிவு என்பது இயல்பாகத்தான் இருக்கிறது. முதல் இரண்டு குழந்தை பிறந்த போதும் போர் முனையில் தான் இருந்தேன். பிறந்து ஆறு மாதம் கழித்துதான் அவர்களை பார்க் கும் வாய்ப்பு கிடைத்தது. பிரிந்து இருப்பது சாதாரணமானதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளிடம் காதல் இருந்ததா?&lt;br /&gt;நான் இயக்கத்தில் சேர்ந்த துவக்க காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. சட்டத்திட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருந்தன. அண்ணன் பிரபாகரன் காதல் வயப்பட்டு திருமணம் முடித்த போது, அந்த சட்டத் திட்டங்கள் மாற்றப்பட்டு, இயக்கத்துக்குள் காதல் மலர்ந்தது. ஆனாலும் இயக்கம் மிகவும் கட்டுப்பாடானது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இயக்கத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர்?&lt;br /&gt;பால் வேற்றுமைகள் இல்லை. படைப்பிரிவிலும் சமமாக நடத்தப்பட்டனர். போர்முனையில் உயிரிழப்புகள் கூட சமமான அளவு இருந்தது. அந்த அளவு, பெண்கள் வலிமையாக சண்டைப் போட்டனர். நிகராக என்று சொல்லக் கூடாது; எல்லாவகை பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். படைப்பிரிவுகளை வழி நடத்தவும் செய்தனர். பல போர்முனைகளில் ஒரு வேளை சாப்பிட்டு விட்டு, ராணுவத்தை சந்தித்துள்ளோம். மருத்துவ வசதியில்லாமல் கொடுமைகளை அனுபவித்துள் ளோம். இதனால் பலரை இழந்துள்ளோம். எங்கள் தியாகத்தை ஒரு உபயோகமும் இல்லாமல், பயங்கரவாதமாக மாற்றிவிட்டார் பிரபாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ வசமாகியுள்ள ஆனையிறவு எப்போது புலிகளிடம் வந்தது?&lt;br /&gt;ஆனையிறவு ராணுவ முகாமை என் தலைமையிலான படை 2000ம் ஆண்டு கைப்பற்றியது. வன்னியையும் குடா நாட்டையும் இணைக்கும் முக்கிய பகுதி என்பதால் இதை பிடித்து வைத்திருந்தோம். இப்போது ராணுவ வசமாகியிருப்பதால் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளிடம் எத்தனை விமானங்கள் உள்ளன?&lt;br /&gt;நான் இருந்த போது மைக்ரோ விமானங்கள் ஆறு இருந்தன. அவற்றை இயக்குவதற்கு பெரிய ஓடுதளம் தேவையில்லை. சாதாரணமாக ரோட்டில் கூட ஓட்டி பறக்கலாம். கடைசி கட்டமாக விமானங்களில் பறந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. மூன்று சிறிய டேங்குகளும் இருந்தன. அவற்றை பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கியும் குண்டும் ஓயாமல் முழங்கிய போர்முனையில் இருந்த நீங்கள், இப்போது எப்படி உணர்கிறீர்கள்?&lt;br /&gt;மாற்றம் ஒன்றும் பெரிதாக இல்லை. அப்போது ராணுவத்தை எதிர்த்து போரிட்டோம். இப்போது அதே ராணுவ வீரர்களின் அதிநவீன துப்பாக்கிகளுக்கு நடுவில் பாதுகாக்கப்படுகிறேன். இரண்டும் இருவேறு அனுபவங்கள். போர்க்களத்தில் எல்லா ரக துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் கையாண்டவன் நான். மிகவும் ஒல்லியாகத்தான் இருப்பேன். எங்களிடம் இருந்தது வலிமை குறைந்த படை. அந்த படையை பயன்படுத்தி வெல்ல வேண்டும். இதற்கு தந்திரங்களை கையாண்டேன். அறிவியல் பூர்வமாக சிந்தித்து, படைகளை எதிர்கொண்டு வென்றோம். வீரர்களிடம் எளிமையாக பழகுவேன். என்னை அம்மான் என்று அழைப்பார்கள். அம்மான் என்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பயன்படுத்தும் கவுரவமிக்க வார்த் தை. பிரபாகரனை அண்ணன் என்போம். அவரது பெயரை ரகசிய குறியீடாக எச்.ஏ., என்று அழைப்பார்கள். அந்த பெயரில் தான் ரகசிய தகவல்கள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இருந்து என்னவிதமான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?&lt;br /&gt;தமிழகத்தில் சிலர் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தமிழ் இனம் பூண்டோடு அழிந்துவிடும் என்று சொல்கின்றனர். இப்படியெல்லாம் பேசுவோர், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, பல்லாயிரம் தமிழர்கள் தமிழகத்தில் அகதியாக தஞ்சம் புகுந்திருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை; கல்வி இல்லை; சுகாதாரம் இல்லை. உங்களைத் தேடி ஓடிவந்திருக்கும் எங்கள் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துங்கள். அவர்களின் கல்விக்கு உதவுங்கள். எந்த தலைவராவது அவர்களின் நிலைமை யோசித்துப் பார்த்திருப்பீர்களா? அவர்களின் வாழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து அதற்காக அரசிடம் குரல் கொடுத்திருக்கிறீர்களா? அவர்களும் இலங்கைத் தமிழர் தானே. அவர்களின் வாழ்க்கைக்காக நிதி திரட்டுங்கள். உயர்வு படுத்துங்கள். நன்றியுடன் உங்களை நினைவு கூர்வோம். தமிழகத்தில் இருந்து பலர் கள்ளத்தோணியில் இலங்கையில் தமிழர் பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். இந்திய அமைதிப்படையுடன் புலிகள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், அந்த நாட்டில் இருந்து கொண்டே, அந்த நாட்டுக்கு எதிராக கள்ளத்தனமாக வந்து சென்றீர்கள். அதை விடுவோம். எந்த சூழ்நிலையிலாவது, இந்திய அரசின் அனுமதி பெற்று அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழகத் தலைவர்கள் யாராவது வந்து பார்த்தது உண்டா? பிரபாகரன் செய்யும் பொய் பிரசாரத்தை நம்புகிறீர்கள். இங்கு என்ன நடக்கிறது என்பதை கண்திறந்து பாருங்கள். புலி ஆதரவு கோஷத்தை விடுத்து, உண்மை நிலையை புரிந்து கொண்டு அமைதிக்கு குரல் கொடுங்கள். போரால் சிதைந்து போன பகுதிகளை கட்டி எழுப்ப உதவுங்கள். பின் தங்கிய பகுதிகளில் தொழில் துவங்கி, வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிவுக்கு வந்தால் அமைதி திரும்புமா? அதை அனைவரும் ஆதரிப்பார்களா?&lt;br /&gt;அமைதி திரும்பும். அதை அனைவரும் ஆதரிப்பார்களா என்று சொல்ல முடியாது. தனி அதிகாரம், தனி நாடு என்று வறட்டு கவுரவம் பிடித்து வெளிநாடுகளில் வாழும் பல தமிழர்கள் பேசக்கூடும். இங்கே இருப்பவர்களில் சில தலைவர்கள் கூட கவுரவம் பார்க்கலாம். அவர்களுக்கு இங்குள்ள நிலைமை தெரியாது. அவர்கள் இங்கு வரப் போவதும் இல்லை. அவர்கள் வசதியான வாழ்க்கை அமைத்துக் கொண்டு மேற்கத்திய கலாசாரத்துடன் இணைந்து கொண்டவர்கள். இங்கு வாழும் ஏழை, எளிய மக்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். அதனால் அவர்களின் பேச்சு எடுபடாது. இலங்கையில் அமைதி திரும்பி தமிழர் வாழ்வு மலரும். இவ்வாறு கருணா அம்மான் பேட்டியளித்தார்.&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-7259922669897027128?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugamoodireader.blogspot.com/feeds/7259922669897027128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=20242795&amp;postID=7259922669897027128' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/7259922669897027128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/7259922669897027128'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2009/01/blog-post.html' title='கருணா அம்மான் சிறப்பு பேட்டி'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-3274026500692426689</id><published>2009-01-03T12:01:00.000-08:00</published><updated>2009-01-22T19:38:32.444-08:00</updated><title type='text'>மார்கழி சாத்துமுறை - பத்ரி</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/blog-post.html"&gt;மார்கழி சாத்துமுறை - பத்ரி&lt;/a&gt; ::&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில், மார்கழி மாதம், ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் விடாமல், காலையில் கோயிலுக்குப் போயிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவைச் சுற்றி வந்து பஜனை செய்வோம். அந்தக் குளிரில் வக்கீல் சந்தானத்தின் மனைவி, எங்களைப் போன்ற சிறுவர்களை நான்கு மாட வளாகங்களையும் சுற்றி அழைத்து வருவார். நாங்கள் எல்லோரும் ‘குள்ளக் குளிரக் குடைந்து’ நீராடியிருப்போம் என்று சொல்வதற்கில்லை. ஸ்வெட்டர், மஃப்ளர் ஆகியவற்றுடன்தான் சுற்றல். பஜனை முடிவது சௌந்தர்யராஜப் பெருமாள் கோவிலில். அடுத்து பொங்கல். கொஞ்ச நேரம் வெட்டி அரட்டை முடித்து, வீட்டுக்கு வந்து குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்கூடம் போக அவ்வளவு நேரம் கையில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாமியின் வழிகாட்டுதலில், வைகுண்ட ஏகாதசி அன்று இரவு, பெருமாள் கோவிலில் நாடகம் போடுவோம். நாகை பொது நூலகத்தில் எடுத்துவந்த அபத்தமான சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் - இப்படி எது கிடைத்தாலும். மாமியே நாடகங்களை எழுதியதும் உண்டு. நாடகம்தான் ஹை பாயிண்ட். அதற்குமுன், சிறு குழந்தைகள் சினிமாப் பாட்டு நடனம் என்று இல்லாமல் ஏதோ ஆடுவார்கள்; சிலர் பாடுவார்கள். பல வருடங்களுக்குப் பின், அறுசுவை பாபு, தானே எழுதி, சிறுவர்களை வைத்து நாடகம் போட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் இப்படி தெரு பஜனை செய்வதற்கு நான் போவது நின்றுபோனது. ஏன் என்று காரணம் தெரியவில்லை. வயதும், தெருப்பெண்கள் பார்ப்பார்களே என்ற வெட்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் தொடர்ச்சியாக தேசிகர் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வடகலை, தென்கலை சம்பிரதாயத்தினருக்கு இடையே அழுத்தமாகவும், ஆழமாகவும் பதிந்துகிடந்திருந்த பிரிவு இது. சௌந்தர்யராஜன் தென்கலை கட்டுப்பாட்டில் இருந்த கோவில். மாட வளாகச் சுற்றில் இருந்த சற்றே சிறிய கிருஷ்ணன் கோவிலும் தென்கலை. இவற்றுக்குப் போட்டியாக, தென்மேற்கு மாட வளாக மூலையில் உதித்ததே தேசிகர் கோவில். பெயர் தேசிகர் கோவில் என்றாலும், லக்ஷ்மி நரசிம்மன்தான் முதன்மைத் தெய்வம். காலையில் இங்குதான் வடகலையினர் ஆஜராவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சகச்சம் கட்டி, பனிரெண்டு திருமண் சார்த்தி, மேலுடம்பில் வஸ்திரம் அணியாமல், டாக்டர் விஜயராகவன் வந்து நிற்பார். அவர் இருந்தால்தான் சாத்துமுறையே ஆரம்பிக்கும். ஆடிட்டர் வரதராஜன் மற்றும் வரதாச்சாரி. ஊர்ப் பெரிய மனிதர்கள் இவர்கள்தான். (அதாவது ஊர்ப் பெரிய வடகலையினர். ஊர்ப்பெரிய தென்கலையினர் சௌந்தர்யராஜன் கோவிலிலும், ஊர்ப்பெரிய ஐயர்கள் அவரவர்க்குரிய கோவிலிலும் நிற்பார்கள். ஊர்ப்பெரிய அ-பிராமணர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது.) வேறு சில வடகலையினரும் ஊர்ப்பெரிய மனிதர்கள்தாம். ஆனால் அவர்கள் இரவு மூக்கு முட்டக் குடித்த காரணத்தால், காலையில் மார்கழி சாத்துமுறைக்கு வரமாட்டார்கள். வந்தாலும் வாயைத் திறந்து எதையும் சொல்லத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுத்தனியனில் ஆரம்பிக்கும். பிறகு தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி. பிறகு ஆண்டாள் தனியன்களும் திருப்பாவையும். ஆண்கள் இரண்டு பக்கமாகப் பிரிந்து நிற்பார்கள். ஆசாரமானவர்கள் கோஷ்டியின் தலையில் - அதாவது பஞ்சகச்சம், 12 திருமண். அடுத்து பஞ்சகச்சம் அல்லாத வெறும் கச்ச வேஷ்டியினர். அடுத்து மேலே சட்டை போட்டவர்கள். அடுத்து என்னைமாதிரி அரை டிராயர் சிறுவர்கள். பெண்கள் எல்லாம் தாங்களாகவே விலகி, தள்ளி உட்கார்ந்துகொள்வார்கள். அதில் ஆசார எட்டு கெஜ மடிசார் மாமியும் உண்டு, சாதா புடைவைக் கட்டும் உண்டு. அப்போதெல்லாம் சல்வார் கமீஸ் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கோஷ்டியில் வலப்பக்கம் (அதாவது கர்ப்பகிருகத்தை நோக்கி நீங்கள் நிற்கும்போது உங்கள் வலது பக்கம் இருப்பவர்கள்) தொடங்குவார்கள். எட்டடிப் பாடலில் முதல் நான்கு அடி அவர்களது:&lt;br /&gt;&lt;br /&gt;அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்&lt;br /&gt;எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்&lt;br /&gt;கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே&lt;br /&gt;எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்&lt;br /&gt;&lt;br /&gt;“அறிவுராய்” என்று வல கோஷ்டி முடிக்கும் முன்னரே, இட கோஷ்டி ஆரம்பிக்கவேண்டும். அம்பரம் ஊடறுத்து...&lt;br /&gt;&lt;br /&gt;அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த&lt;br /&gt;உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்&lt;br /&gt;செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா&lt;br /&gt;உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;“எம்பாவாய்” என்று இட கோஷ்டி முடிக்கும்போது, அடுத்த திருப்பாவைக்குத் தாவிச் செல்ல வல கோஷ்டி தயாராக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர், இரண்டு கோஷ்டியிலும் சேர்ந்து சேர்ந்து அனைத்து வரிகளையும் பாடுவார்கள். எந்த இடத்தில் நிறுத்துவது, எந்தப் பாடலை இரண்டுமுறை சேவிப்பது - இதெல்லாம் மிக முக்கியமான விஷயங்கள். மாற்றிப் பாடினால், மூத்தோர் முறைப்பர். எனவே சின்னதுகள், அடங்கி, குரலை உயர்த்தாமல் கூடப் பாடி, அப்படியே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவை முடியும். இல்லை, முடியாது. சிற்றஞ்ச்சிறுகாலே, வங்கக்கடல் இரண்டையும் பாடமாட்டார்கள். அது கடைசியாக.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வியாழன் அன்று போயிருந்த ராயப்பேட்டை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வடகலை என்பது மனைவியோடு உள்ளே நுழைந்ததும்தான் தெரிந்தது. அதற்குமுன் அங்கே ஒரு முறை போயிருந்தாலும் மனத்தில் நிற்கவில்லை. காலை 5.30-க்கு சாத்துமுறை ஆரம்பிக்க, பல ஆண்டுகளாக தேசிகர் கோவில் சாத்துமுறையில் ஊறிய என்னால் உடனடியாக அவர்களுடன் சேரமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பஞ்சகச்சம் கட்டியிருக்கவில்லை. 12 என்ன, ஒரு திருமண்கூட நெற்றியில் இல்லை. சிறிய சந்நதி. எனவே இரண்டாம் வரிசையில் உட்கார்ந்தேன். மனைவி defiant-ஆக, பெண்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குப் போய் உட்காராமல், என் அருகில் உட்கார்ந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பள்ளியெழுச்சி தாண்டி, திருப்பாவை முடிந்து, தேசிகரின் அடைக்கலப்பத்துக்குள் புகுந்தார்கள். அது நான் மனப்பாடம் செய்யாதது. அடுத்து வரிசையாக பாஞ்சராத்ர ஆகமப்படியான சில உபசாரங்களை சிலைகளுக்குச் செய்யவேண்டும். அந்தக் கட்டத்தில் கோஷ்டியினர், ஆங்காங்கே சிறு குழுக்களாகப் பிரிந்து, வம்பளக்கலாம். அன்று ஆங்கிலப் புதுவருடப் பிறப்பு என்பதால் பெண்கள் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டனர். நல்ல கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சிற்றஞ்சிறுகாலே, வங்கக்கடல், அடுத்து அன்றைய நாள் பாட்டான அம்பரமே தண்ணீரே. அடுத்து தீபாராதனை. ஸ்ரீவைஷ்ணவக் கோவில்களில் தீபாராதனை என்பது பக்தர்கள் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்வதற்காக அல்ல. தீப ஒளியில் அர்ச்சாவதார ரூபத்தைப் பார்த்து தரிசிப்பதற்கு மட்டுமே. அடுத்து தீர்த்தம். திருத்துழாய். தலைக்குப் பாதுகை. அதற்கு ஏற்றார்போல கூட்டம் இரு சாரியாகப் பிரிந்து இருக்கும் இடத்தையெல்லாம் ஆக்ரமித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒவ்வொரு சந்நிதியிலும் - அலர்மேல் மங்கை, ஆண்டாள் - நடந்தது. ஒவ்வொரு சந்நிதியிலும் அம்பரமே தண்ணீரே சேவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பிரசாதம். எல்லோரும் வரிசையாக உட்கார்ந்துகொள்ள, பாக்குமட்டை தட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சுக்குவெல்லம், வெண்பொங்கல், புளி அவல். கூட ஆங்கிலப் புத்தாண்டுக்காக யாரோ செய்யச் சொல்லியிருந்த ஒரு ஸ்வீட் மைதாமாவு கேக்!&lt;br /&gt;&lt;br /&gt;நாகை தேசிகர் கோவில்போலன்றி - அங்கே நாங்கள் சாப்பிடத் தொடங்கிவிடுவோம் - கோதாஸ்துதி சொல்ல ஆரம்பித்தார்கள். புதுமையாக இருந்தது. எனக்கு கோதாஸ்துதி தெரியாது. நான் சாப்பிட ஆரம்பித்தேன். நான் மட்டும்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை என்பதால் நான் பார்த்த ஒரு பெரும் வித்தியாசம், கோஷ்டியில் சிவப்பழங்கள் இருவர், பஞ்சகச்சம், ஆனால் 12 திருமண் அல்ல, உடலெங்கும் திருநீறு, முதலில் நின்று திருப்பாவையை மட்டுமல்ல, தேசிகர் ஸ்தோத்திரங்களையும் சொன்னது.&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-3274026500692426689?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/3274026500692426689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/3274026500692426689'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2008/01/blog-post.html' title='மார்கழி சாத்துமுறை - பத்ரி'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-4521246631951957285</id><published>2008-05-23T21:26:00.000-07:00</published><updated>2008-05-23T21:41:27.306-07:00</updated><title type='text'>Apocalypto</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.austin360.com/movies/content/shared/movies/stories/2006/12/history.html"&gt;&lt;strong&gt;'Apocalypto' is an insult to Maya culture, one expert says&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;A history professor explains where Mel Gibson got it very, very wrong&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;By Chris Garcia&lt;br /&gt;American-Statesman Film Writer&lt;br /&gt;Wednesday, December 06, 2006&lt;br /&gt; &lt;br /&gt;As we stagger out of a sneak peek of Mel Gibson's Maya historical thriller "Apocalypto," Julia Guernsey is visibly shaken. She's upset and not a little angry. She barely can contain her disgust, but she also can barely speak. I'm a little worried.&lt;br /&gt;&lt;br /&gt;Guernsey is an assistant professor in the Department of Art and Art History at the University of Texas. Given her emphasis on pre-Columbian Mesoamerican art and culture, we invited Guernsey along to the preview last week so she could illuminate where Gibson got his history right and where he got it wrong.&lt;br /&gt;&lt;br /&gt;The upshot: Boy, did he ever get it wrong.&lt;br /&gt;&lt;br /&gt;Caution: The following interview with Guernsey contains spoilers.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Austin American-Statesman: You looked truly disturbed after the movie.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Julia Guernsey: My first reaction was to the extraordinary, gratuitous violence. And the ending with the arrival of the Spanish (conquistadors) underscored the film's message that this culture is doomed because of its own brutality. The implied message is that it's Christianity that saves these brutal savages. I think that's part of Gibson's agenda, sort of, "We got the Jews last time (in 'The Passion of the Christ'), now we'll get the Maya." And to highlight that point there's a lot of really offensive racial stereotyping. They're shown as these extremely barbaric people, when in fact, the Maya were a very sophisticated culture.&lt;br /&gt;&lt;br /&gt;Yet he goes out of his way in the first third of the movie to depict how peaceful and human at least some of them are.&lt;br /&gt;&lt;br /&gt;Yes, they're shown as wonderful, but ignorant. They're wonderful and they get along great and they've got this rip-roaring humor, but they don't know what's going on a day and a half's walk away, where this massive city, this metropolis, is being constructed. They haven't gotten wind of that because they are in their forest, the forest of their fathers, the forest of their sons. I can feel my heart beating faster talking about this. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;You just hate this movie.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I hate it. I despise it. I think it's despicable. It's offensive to Maya people. It's offensive to those of us who try to teach cultural sensitivity and alternative world views that might not match our own 21st-century Western ones but are nonetheless valid.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;What were you hoping for going into the movie?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I thought it would highlight some of the achievements of the Maya, but none of them is presented. They show some buildings but they don't talk about them. You get glimpses of some art, but it's overwhelmed by the non-stop violence. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;What are inaccuracies you noticed?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;For one thing, the characters walk through a tunnel-like space and it's covered in wall murals. I'm nitpicking and it would mean nothing to most people, but it's a reconstruction of some murals that were just discovered in the past few years. They're from the site of San Bartolo in the Maya region (of Guatemala). Some pieces of it are copied exactly from the mural, but part of it is this gory scene of an individual holding a severed human head with blood flowing out of it. That's not in the mural! That's just Gibson on his violence kick. Plus, the murals are Late Pre-Classic, dating to about 100 B.C., making it very problematic that these people were walking through murals dating from 100 B.C. and then we have the arrival of the Spanish, which was in the 16th century. That's like 1,700 years apart. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Couldn't they just be walking through an ancient area?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;You could argue that, except that the film presents an inaccurate hodge-podge of architecture. Some of it looked like Tikal Classic Maya, 800 A.D. Some looked Puuc, which is closer to 1000 or 1100 A.D. These are very different regions. It's like the difference between Texas and Delaware. It also looked like they were borrowing from El Mirador, this Pre-Classic metropolis that flourished around the year 0 A.D. It would be as though somebody did a movie on our American culture and they had Madonna and Marilyn Monroe riding in a car together, or they had a meeting of George Bush, Teddy Roosevelt and George Washington because why not condense a couple hundred or a couple thousand years? We would be appalled. We take our culture seriously. We demand historical specificity, something completely lacking here. Gibson had a responsibility to know better. He was consulting experts who should have told him.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Were the sacrificial pyramid/temples really like they are in the movie?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;We have accounts from the Aztecs of such things; it shows up in their mythology. And we have some images from the Maya that suggest that that kind of sacrifice did take place and that they probably did roll the bodies down (the pyramid). Now, the guys in the movie at the bottom catching the bodies with nets? That is crazy. We have no evidence for that. Another thing that was so funny was all that crazy, wild dancing with women's breasts flapping. I was just reading hours before I saw the movie with you a 400-page textbook dedicated to Maya dance, and it talked about how women played no major public role in these ceremonies but much more subtle roles.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Was the depiction of sacrifice â€” lining victims up as if they're in a ticket queue in front of a hysterical public crowd â€” accurate? That was startling.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;We have evidence to suggest that there were group sacrifices. But it would probably have been done as a pious act with solemnity. Some of it was probably public spectacle. But I'm suspect of the women gyrating and going into some kind of trance state, as, let's not forget, the world's fastest ever solar eclipse is taking place.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Did it bother you that the movie completely ignores the ancient Maya inventions and achievements, such as urban planning, writing, mathematics, astronomy and art?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I did hope they would dwell on their achievements. There's this noble savage, 19th-century idea of barbaric savages, and it was like Gibson was rooted in that. All of these advances we've made in understanding their culture were completely forgotten. I think Mel Gibson is the worst thing that's happened to indigenous populations since the arrival of the Spanish. I say that in jest, but what is scary is that people will leave the movie thinking that because the characters were speaking Mayan there is an air of authenticity. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;What about the garb and elaborate ornamentation they wear in the movie, including bones in their noses?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Some of that is based on images we have that are probably more or less accurate. But again, they played it up in a way to make them seem somehow subhuman. So the costuming just played into the idea of them as real savages, rather than what it was for the Maya, which was an aesthetic display of beauty, just as we take care of our clothing and appearance. The whole thing was wrong. I was looking at the film's trailer, which says, "&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-4521246631951957285?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/4521246631951957285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/4521246631951957285'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2008/05/apocalypto.html' title='Apocalypto'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-1807931905582882411</id><published>2008-05-07T23:10:00.001-07:00</published><updated>2008-05-23T21:43:52.570-07:00</updated><title type='text'>உத்தபுரம்</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://athirai.blogspot.com/2008/05/blog-post_06.html"&gt;இடிக்கப்பட்ட உத்தபுரம் சுவரும், இடிக்கப்பட வேண்டிய உத்தபுரங்களின் சுவர்களும் - டி.அருள் எழிலன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1994 ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன்.நாகர்கோவிலில் இருந்து எங்களது மீனவ கிராமமான புத்தன்துறைக்கு செல்லும் 38பி பேருந்தில் அமர்ந்திருந்தேன்.வண்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி பீச் ரோடு ஜங்சனில் நின்றிருந்தது.அந்த நிறுத்தத்தின் எதிரில் பீச் ஒயின்ஸ் என்ற மதுக்கடை இருந்தது.இப்போது அது டாஸ்மார்க் ஆகியிருக்கும்.போதை உச்சிக்கு ஏறியிருந்தது அவருடைய பேச்சு வழக்கிலிருந்து அவரை ஒரு நாடாராக நான் புரிந்திருந்தேன்.&lt;br /&gt;எங்களுடைய பேருந்து வந்து நிறுத்தத்தில் நின்றதும் அந்த பேருந்தில் இருந்த பெண்களை பார்த்து கெட்ட வார்த்தை போட்டு திட்டினார்.அதை கேட்ட பெண்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர் அவர் திட்டியது பெண்களைத்தான்.‘‘இந்த மினுக்கு மினுக்கிக் கிட்டு எங்க போயிட்டு வாராளுவொ தேவுடியாமாருக்கு வீட்டுல கெடப்புவராதா?’’என்கிற ரீதியில் அவர் திட்டிக்கொண்டிருந்தார்.வண்டியில் இருந்த சில இளைஞர்களால் அந்த குடிகாரரின் வசவுகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.வண்டியிலிருந்தபடியே அந்த குடிகாரரை அடிக்க பாய்கிற வேகத்தில் திட்டினார்கள் அந்த இளைஞர்கள்.போதையில் இருந்தவர் உண்மையில் பயந்து விட்டார்...அவர் உட்னே, "ஐய்யே புள்ளே நாஞ் நம்ம நாடாக்கமார சொல்லல்ல கடப்புறத்துகாரியளயில்லா சொன்னேன்"என்ற உடன் பேருந்து கிளம்பியது.ஒரு வேளை நின்றிருந்தாலும் என்னால் அவனை ஒன்றும் செய்திருக்க இயலாது..அவனல்ல அந்த வண்டிக்குள் நிலவிய ஒரு விதமான திருப்தியும் ‘‘அவன் நம்ம பொம்பளையள சொல்லவில்லை கடற்கரை பெண்களைத்தான் சொல்லியிருக்கிறான்’’என்கிற ரீதியில் அமைதியும் நிலவியது.அந்த குடிகாரர் சார்ந்த சாதி எழுப்பியிருந்த சுவர் ஒழுக்கப்பட்ட மீனவ மக்களுக்கு எதிரானதோடு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதிகாலை மதுரை உத்தபுரத்தில் தலித் மக்களின் முகத்தில் முழிக்கக் கூடாது என்கிற நினைப்பில் வெள்ளாளர் இன மக்களால் தொண்ணூருகளில் கட்டப்பட்ட உத்தபுரம் சுவரின் பொதுப்பாதைகள் மூன்றை காவல்துறையினர் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் இரண்டு பக்கமும் தலா இருபது பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை நிர்வாகம்.என்ன வழக்கு எந்த செக்ஷனில் போடப்பட்டது என்கிற எந்த விபரமும் தெரியவில்லை.ஒரு வேளை வெள்ளாளர்கள் மீது வன்கொடுமை வழக்கும்.தலித்துக்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது என பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற பாணியை பின்பற்றி விட்டார்களோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட உத்தபுரம் தீண்டாமைச் சுவர் மட்டும் இனி தொடரக்கூடும்.சட்டம் பட்டா ரூபத்தில் அந்த பாதுகாப்பை வெள்ளாள இன மக்களுக்கு வழங்கியிருக்கிறது.சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட உத்தபுரம் சுவரின் பொதுப்பாதையை ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் இனி பயன் படுத்தக் கூடும்.அல்லது திறந்து விடப்பட்ட வழி வழியே அவர்களின் சுவாசமும் கவிச்சி வாசனையும் மட்டுமே சென்று வரக்கூடும்.&lt;br /&gt;மதிற்சுவரை இடித்து சாதித் திமிரை தகர்த்தாலும் இடியாத மனச்சுவர் நம் ஒவ்வொருவருக்குள் பல்லாயிரம் அடி உயரமாய் எழுந்து நிற்கிறதே அதை எப்போது இடிக்கப்போகிறோம்.&lt;br /&gt;கண்ணுக்குத் தெரியாத அபப்டி ஒரு சுவர் எங்களின் மீனவ கிரமங்களை மொத்தமாக மூடி எழுப்பப் பட்டுள்ளது.இந்திய வரைபடத்தில் கொண்டை ஊசியை ஒத்த வடிவம் கொண்ட குமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில்தான் நாங்கள் நீண்டு வாழ்கிறோம்.அரபிக்கடலோரத்தின் அலைவாய்க்கரையில் பரதவர்களான நாங்களும்,எங்களைப் போலவே ஒரே மதத்தையும் தொழிலையும் கொண்டிருக்கும் முக்குவ மக்களும் கரைகளில் வாழ்கிறார்கள்.&lt;br /&gt;இரட்டை டமளர் முறையோ,தடுப்புச் சுவர்களோ,கோவிலில் நுழையும் உரிமை என சாதி இந்துக்களாலோ கிறிஸ்தவ நாடார்களாலோ அல்லது வெள்ளாளர்களாலோ எங்களுக்கு எந்த தொல்லையும் கிடையாது...ஏனென்றல் நாங்கள் தனித்து வாழ்கிறோம்.எங்கள் கிராமங்களில் ஒரு சாதி இந்துவை பார்க்க முடியாது.கன்னியாகுமரியில் தொடங்கி கேரளத்தின் எல்லையான நீரோடி வரை நீளாமாய் நீட்டிப் படுத்திருக்கும் இந்த மீனம மக்கள் பல நூறூ ஆண்டுகளாய் புறம் போக்கு நிலங்களில் வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் வேட்டையாடுவதும் கரைகளில் கூடிக்கழிப்பதும் மீதி நேரத்தில் தேவாலயங்களுக்கு மண் சுமப்பதும்தான் இவர்களின் வாழ்க்கை.சுனாமி அனர்த்தனம் தாண்டவமாடிய போது உள்ளூர் பணணைகள் எங்களுக்கு அவர்களது வீட்டின் பழைய துணிகளையும் கெட்டுப் போன சாதங்களையும் கொண்டு வந்து கொட்டி உதவினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு கொஞ்சம் மீன குழம்பு கிடைக்குமா?என கேட்டபோது....‘‘கொழுப்பப் பாத்தியாலே அய்யோ பாவம்ணு நாம சோறு கொண்டு கொடுத்தா மீன் குழம்பு கேக்குறத?போய் பிடிச்சி குளம்பாக்கி தின்ன வேண்ணியதுதானே’’ &lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமல்ல சுனாமியின் போது சடலங்களிலிருந்து நகைகளை திருடியவர்கள்.கிடைக்கும் பொருட்களை திருடிச் சென்றவர்கள் என்கிற மாதிரி குத்தப்பட்ட பொதுப்புத்திகள்.&lt;br /&gt;தமிழகம் முழுக்க கண்ணுக்குத் தெரியாத உத்தபுரம் சுவர் எழுப்பட்டிருக்கிறது அந்தச் சுவர் எங்கள் கிராமங்களையும் மூடியிருக்கிறது என்பதை எண்பதுகளில் இந்து முன்னணியால் நிகழ்த்தப்பட்ட மண்டைக்காடு தாக்குதல் மூலம் தெரிந்து கொண்டோம்.கிறீஸ்தவ மீனவர்களுக்கும் இந்து நாடார் விவசாயிகளுக்குமான மோதலாக மட்டுமே அதை பார்க்க முடியாது கிறிஸ்தவம் மீனவ மக்களிடம் கொண்டு வந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட சகிக்க முடியாத கொடூர மனதில் வெளிப்பாடுதான் அந்த மாண்டைக்காடு தாக்குதல் அப்போது நாங்கள் மொத்தமாக இந்தியாவின் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு கண்ணுக்குத் தெரிந்த சுவர் இன்று கொஞ்சம் வளர்ந்த சுவராக மாறியிருக்கிறது. இடிக்க முடியாத மனச்சுவராக வளர்ந்திருக்கிறது.சுனாமிக்கு பிறகு மீனவ மக்களை கடற்கரையிலிருந்து வெளியேறச் சொல்கிறது அரசு அங்கிருந்து வெளியேறி நாங்கள் சாதி இந்துக்களின் குடியிருப்புகளுக்குள் வாழச் செல்லும் போது அங்கும் ஒரு உத்தபுரம் சுவர் வெளிப்படையாக எழுப்பப் படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று விதமான சுவர்கள் எங்கள் கிராமங்களின் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று...சாதி இந்துக்கள் மீனவ மக்களுக்கு எதிரான எழுப்பியிருக்கும் மனச் சுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு...கிறிஸ்த மீனவ மக்களுக்கு எதிராக கிறிஸ்தவ நாடார்களும் கிறிஸ்தவ பாதிரிமார்களும் எழுப்பியிருக்கும் சுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று...எங்கள் இன மக்களான பரதவர்கள் அவர்களைப் போலவே ஒடுக்கப்படுகிற முக்குவ இன மக்களுக்கு எதிராக எழுப்பியிருக்கும் சுவர்.&lt;br /&gt;வெளியில் தெரியாத இம்மாதிரி சாதிச் சுவர்களைத்தான் இன்றைய தலைமுறை தன் மூளைக்குள் ஏற்றி வைத்திருக்கிறது.படித்த ஆங்கிலம் தெரிந்த தலைமுறை கட்டப்பட்ட இந்த சுவர்களில் மின்சாரக் கம்பிகளை விஞ்ஞான அணுகுமுறையோடு நட்டு வைக்க நினைக்கிறது.கலகத்தை கொண்டு வர வேண்டிய காலமிது.&lt;/span&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-1807931905582882411?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/1807931905582882411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/1807931905582882411'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2008/05/blog-post.html' title='உத்தபுரம்'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-5205260458335777458</id><published>2008-05-06T05:29:00.000-07:00</published><updated>2008-05-23T21:42:17.635-07:00</updated><title type='text'>How to Win Friends and Influence People</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.westegg.com/unmaintained/carnegie/win-friends.html"&gt;Dale Carnegie’s summary of his own book, from 1936 - How to Win Friends and Influence People&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;No matter what you do other people are the key to your success:&lt;br /&gt;&lt;br /&gt;Part One&lt;br /&gt;&lt;br /&gt;Fundamental Techniques in Handling People&lt;br /&gt;&lt;br /&gt;Don’t criticize, condemn or complain. &lt;br /&gt;Give honest and sincere appreciation. &lt;br /&gt;Arouse in the other person an eager want. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;Part Two&lt;br /&gt;&lt;br /&gt;Six ways to make people like you&lt;br /&gt;&lt;br /&gt;Become genuinely interested in other people. &lt;br /&gt;Smile. &lt;br /&gt;Remember that a person’s name is to that person the sweetest and most important sound in any language. &lt;br /&gt;Be a good listener. Encourage others to talk about themselves. &lt;br /&gt;Talk in terms of the other person’s interests. &lt;br /&gt;Make the other person feel important - and do it sincerely. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;Part Three&lt;br /&gt;&lt;br /&gt;Win people to your way of thinking&lt;br /&gt;&lt;br /&gt;The only way to get the best of an argument is to avoid it. &lt;br /&gt;Show respect for the other person’s opinions. Never say, “You’re wrong.” &lt;br /&gt;If you are wrong, admit it quickly and emphatically. &lt;br /&gt;Begin in a friendly way. &lt;br /&gt;Get the other person saying “yes, yes” immediately. &lt;br /&gt;Let the other person do a great deal of the talking. &lt;br /&gt;Let the other person feel that the idea is his or hers. &lt;br /&gt;Try honestly to see things from the other person’s point of view. &lt;br /&gt;Be sympathetic with the other person’s ideas and desires. &lt;br /&gt;Appeal to the nobler motives. &lt;br /&gt;Dramatize your ideas. &lt;br /&gt;Throw down a challenge. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;Part Four&lt;br /&gt;&lt;br /&gt;Be a Leader: How to Change People Without Giving Offense or Arousing Resentment&lt;br /&gt;A leader’s job often includes changing your people’s attitudes and behavior. Some suggestions to accomplish this: &lt;br /&gt;&lt;br /&gt;Begin with praise and honest appreciation. &lt;br /&gt;Call attention to people’s mistakes indirectly. &lt;br /&gt;Talk about your own mistakes before criticizing the other person. &lt;br /&gt;Ask questions instead of giving direct orders. &lt;br /&gt;Let the other person save face. &lt;br /&gt;Praise the slightest improvement and praise every improvement. Be “hearty in your approbation and lavish in your praise.” &lt;br /&gt;Give the other person a fine reputation to live up to. &lt;br /&gt;Use encouragement. Make the fault seem easy to correct. &lt;br /&gt;Make the other person happy about doing the thing you suggest.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20242795-5205260458335777458?l=mugamoodireader.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/5205260458335777458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20242795/posts/default/5205260458335777458'/><link rel='alternate' type='text/html' href='http://mugamoodireader.blogspot.com/2008/05/dale-carnegies-summary-of-his-own-book.html' title='How to Win Friends and Influence People'/><author><name>முகமூடி</name><uri>http://www.blogger.com/profile/14099130968192144674</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://bp3.blogger.com/_X0ZOmoarvTw/RzyxLtyrLWI/AAAAAAAAACc/JrPJ7dBe9R8/s320/mugamoodi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20242795.post-2259227983045272730</id><published>2008-05-05T01:15:00.000-07:00</published><updated>2008-12-13T04:55:17.046-08:00</updated><title type='text'>THE SEX TRADE</title><content type='html'>&lt;br&gt;&lt;span style="font-size:85%;"&gt;Sean Flynn explores the labyrinth of Philippine sex clubs—a paradise for adventurers where the girls are plentiful, cheap, and have no other choice. The first installment of a three-part investigation into the global sex trade - GQ, August 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://men.style.com/gq/features/full?id=content_5509"&gt;PART I: PLEASURE, AT ANY PRICE&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_X0ZOmoarvTw/SB7CkjfTlYI/AAAAAAAAACo/q94AosDrmTs/s1600-h/GQfeature8h.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_X0ZOmoarvTw/SB7CkjfTlYI/AAAAAAAAACo/q94AosDrmTs/s320/GQfeature8h.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5196804953289758082" /&gt;&lt;/a&gt;The fat guy smoking Pall Malls, he says he almost married one of those girls. Honest. He met her in a bar one of the last times he was in the Philippines and fell in love, almost bought her a ring and took her home. It didn’t work out, though, and he doesn’t say why because it doesn’t really matter. He shrugs.&lt;br /&gt;&lt;br /&gt;The skinny kid with the knobby head understands. Same thing happened to him, sort of. She was 19, beautiful, didn’t wear makeup or anything. She was so…what’s the word? Simple. You know? “Just give her the American necessities and those are, like, her luxuries,” he tells the fat guy. “Let her live like a queen.”&lt;br /&gt;&lt;br /&gt;The fat guy grins. His front teeth are missing, and he’s got hair like an oil slick, long and black and greasy. Oh yeah, lots of those girls want an American husband, and they’re not picky, either. “As long as you’re not married and you’ve got an income,” the guy says, “you’re good to go.”&lt;br /&gt;&lt;br /&gt;It’s four o’clock in the morning in a Japanese airport, thirteen hours out of Detroit Metro, on a layover in Nagoya before the last 1,700 miles to Manila. The fat guy and the skinny kid found each other in the smoking lounge as if they had picked up a shared scent, a couple of misfit white guys dragging halfway around the planet.&lt;br /&gt;&lt;br /&gt;Then another, a fellow traveler in a red running suit, walks over. He’s fiftyish and pudgy with gray hair and enough of a beard to cover a weak chin. He’s never been to the Philippines before, he tells them, just heard the stories about the bars and the girls, and now that he’s divorced, what the hell, treat himself. Still, he’s a little nervous about the whole thing.&lt;br /&gt;&lt;br /&gt;The skinny kid knows that feeling, too. He was nervous his first time. It’s kind of weird, the way you can buy a girl for a couple of bucks, a different one every night, every hour if you want, walk around town with her and not even pretend it’s anything more than a cash transaction. “I walk into this place with my arm around this local girl, you know, and there’s all these guys sitting around looking at me,” he says. “And I’m thinking, I’m gonna get my ass kicked, you know?”&lt;br /&gt;&lt;br /&gt;The fat guy’s grinning again. He knows where this is going.&lt;br /&gt;&lt;br /&gt;“But then they’re all like, ‘Hey, American, come and drink with us!’ ”&lt;br /&gt;&lt;br /&gt;“Oh yeah,” the fat guy says. “And after ten minutes, you’re not talking to them. You’re talking with them.”&lt;br /&gt;&lt;br /&gt;They all nod, even the guy in red.&lt;br /&gt;“Seriously,” the skinny kid says. “They love Americans.”&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;There’s a girl on a small stage in a bar called the G-Spot Lounge in Angeles City, a sprawl of cinder block and tin about an hour northwest of Manila. She’s wearing a sky blue bikini that matches the powder Mamasan swabbed on her eyelids, along with enough blush and mascara to make her whole face itch. She hasn’t worn makeup since her first Communion, and then not so much.&lt;br /&gt;&lt;br /&gt;She has a birth certificate that says she’s 19. It’s false, and obviously so, because she’s only 13, but nobody cares, because in the dark, under all that rouge and shadow, she looks old enough. All the girls—the other ones onstage, the ones waiting tables, the ones cuddling up to customers, sweet-talking foreign men into buying them drinks—look old enough, which isn’t very old at all.&lt;br /&gt;&lt;br /&gt;An American man is yelling at her. “Hey, you!” he says. “Yeah, you. Dance! You’re getting paid to dance.”&lt;br /&gt;&lt;br /&gt;She doesn’t really know how to dance, and the high-heeled boots she’s wearing make it even harder to fake it. Her arms are in close, holding her own bare torso in a loose hug, and she shifts her weight from foot to foot, gently twists her shoulders from one side to the other. Is that dancing? Is it close enough? Do they even care, the men watching, the Koreans and the Japanese, the Americans and the Aussies, the fat guys and the skinny kids sucking on stubby bottles of San Miguel?&lt;br /&gt;&lt;br /&gt;Mamasan, the bar manager, will pay the girl 120 pesos to wear her bikini from six o’clock in the evening until three o’clock in the morning. She is supposed to dance for half an hour, then go work the room for a while and wait for her next shift onstage. If one of the men in the club buys her a drink, Mamasan will cut her in for fifty pesos, put it toward her debts: 1,300 for the boots, thirty-five more for a week’s laundry. Or maybe one of the customers will buy her for the night, give Mamasan 1,000 pesos—“bar fine,” they call it here, a term that’s both a noun and a verb—to take her out of the G-Spot, maybe to another club or a restaurant first but probably just to his hotel room. The girl would get half of that, about $9 American.&lt;br /&gt;&lt;br /&gt;It’s her first night at the G-Spot. She’d gone looking for work a few days ago—up Fields Avenue, past Club Fantastic and Camelot and Stinger, past the sidewalk shops selling shirts that say I FUCK ON THE FIRST DATE and I’LL BUY DRINKS FOR SEX, past the shoeshine boys and the peddlers with their bootleg Cialis, past all the other bars looking to hire dancers and waitresses and GROs, which is short for guest-relations officers, which is long and awkward for prostitute. “Must have happy personality,” the signs say, because no horny tourist is going to bar-fine a girl who isn’t any fun.&lt;br /&gt;&lt;br /&gt;The mamasan at the G-Spot asked the girl how old she was, and she said 19 and showed her the birth certificate that couldn’t possibly be legit, and Mamasan hired her, gave her the boots and the bikini and rubbed makeup on her face and put her on a stage. That’s how it happened, just like that: A little girl walks into a bar and gets a job.&lt;br /&gt;“Hey.” Big Daddy again, out there beyond the strobe of the stage lights. Papasan, the guy who runs the G-Spot. His name is Thomas Glenn Jarrell, an Ohio native who did a tour in the army before settling in a dirty little city that is moderately famous simply because it has bars, dozens of them, and girls, thousands of them, and only eighteen bucks a night. “You’re getting paid to dance!”&lt;br /&gt;&lt;br /&gt;Seriously, fat guys and skinny kids tell each other in Japanese airports, they love Americans.&lt;br /&gt;&lt;br /&gt;The girl blinks the itch from her eyes and lets her arms fall to her sides and wiggles her hips. Is that dancing? Is it close enough?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;Change her name. It doesn’t matter. Make her a little younger or a little older, but never too old. Dress her in a red bikini or a slip or a pleated plaid skirt. Wrap her naked around a pole or put her in a room with a big glass window and a flock of other girls, bored and trying not to look it, waiting to be picked like lobsters from a tank. Move her down to Manila and pay her more, or move her up the coast to a shack on the National Highway and pay her less. Put her thousands of miles away, in Tokyo or Moscow, or put her on the other side of the globe, in Costa Rica or Mexico. It doesn’t matter. The story will be the same, the beginning sounding like the setup to an old and dirty joke: A girl walks into a bar…&lt;br /&gt;&lt;br /&gt;So many girls walk into so many bars today that no one even tries to count them all. Cataloging every prostitute on the planet with any accuracy is no more feasible than counting leaves in a forest: The business is by definition largely underground and extremely fluid, the workforce mostly unregistered, untraceable, and ever changing. Instead, there are only guesses, estimates, and extrapolations, worst cases and best cases depending on who’s counting and where and why. Statistics for individual countries, individual cities, even specific red-light districts, vary wildly from lowball official figures to almost incredible numbers conjured by aid groups and activists. Thailand, for instance, a notorious and well-studied sexual playground for foreign men, has either 75,000 prostitutes, as the government claims, or depending on which aid group is tossing out numbers, nearly 2 million who generate up to 14 percent of the country’s gross domestic product—parameters calibrated so widely as to be virtually useless as an accounting tool. The sex-trade data are so imprecise that researchers and government agencies shorthand the global total to a generic tens of millions of women and girls generating tens of billions in cash.&lt;br /&gt;&lt;br /&gt;The actual numbers are irrelevant, anyway. A Filipino bar girl doesn’t care whether she is one of 50,000 (the low end) or 800,000 (the high end), and a john in a Russian brothel doesn’t concern himself with the millions of women he could theoretically be renting, because the ten or twenty at hand are more than enough. The global sex trade, as pure a commodities market as pork bellies or soybean futures, need only be measured in broad sweeps of demand, which is apparently insatiable, and supply, which is seemingly endless.&lt;br /&gt;Within those uncountable numbers are stories of horrific brutality, of women smuggled into foreign lands, beaten into submission, forced to work off infinite, impossible debts. There are stories, too, of breathtaking naïveté, of young Moldovans giddy because they’ve got contracts to work as cocktail waitresses in Kabul, of peasants in Mindanao who believe a low-rent gangster when he promises to make them cabaret stars in Manila or Tokyo, of foolish girls who actually want to be prostitutes because they’ve seen a bootleg tape of Pretty Woman.&lt;br /&gt;&lt;br /&gt;The great bulk of the business, though, is far more prosaic, a function of simple economics, the ageless enterprise of women willingly selling their most easily marketed assets. It can be condemned by feminist theory and religious mores, and the key adverb—willingly—is terribly relative, especially considering that there is almost always a middleman, a mamasan or a pimp, taking a cut. Yet oppression is also a relative term: For people with limited options, the few that remain don’t seem so unreasonable. And in any case, business is booming. In an age of easy international travel, when borders are not much sturdier than lines drawn on a map, both sides of the trade—supply and demand—have become industrialized.&lt;br /&gt;&lt;br /&gt;If viewed from above, from high in the stratosphere with the whole blue earth rolling and spinning below, the currents of the sex trade would be as obvious as the clouds, swirls of people moving from country to country, continent to continent. There are two dominant streams, intertwining, twirling around each other but moving in opposite directions. The women and the girls are swept out of poor places, from parts of South America and Asia and the former Soviet Union, into wealthier nations and cities, Moscow and Tokyo, Turkey and Dubai, Germany and the United States. The men—“ ’mongers” or “hobbyists,” in the fraternal jargon of the hardcore sex traveler—generally drift in the other direction, from rich to poor, from the United States and Australia and Britain and Japan and the rest of the First World into the Second and Third Worlds. There are small and curious eddies, like the Brits—“whorists,” the tabloids call them—who’ve discovered “tottie tours” through Tallinn, the capital of Estonia, or the drip of Arabs who fly to Chisinau, in desperately impoverished Moldova, to patronize the brothels. But the strongest currents flow to the most entrenched bazaars: to the resort cities of Brazil, Cuba, and a few Caribbean islands; to Central America; and, of course, to Southeast Asia—historically, Thailand and Cambodia and, rising fast over the past twenty years, the Philippines. Many of those countries, particularly in Asia, became destinations in part because they have long cultural histories of prostitution. According to several studies, more than half of Thai men paid to lose their virginity, and more than 400,000 visit brothels each day, estimates that no one seriously disputes. The Philippines, a nation that is at once matriarchal and rotten with machismo, has a similar tradition, an indigenous demand that drives a local market. “It’s simply the norm that you have two kinds of women—those you respect and those you can buy and play around with,” says Aurora Javate-de Dios, the executive director of the Asia-Pacific chapter of the Coalition Against Trafficking in Women, based in Quezon City.&lt;br /&gt;&lt;br /&gt;And that norm has grown into a massive service industry for foreigners. In Balibago, a few dusty blocks of Angeles City on the south side of what used to be Clark Air Force Base, there are 117 bars and a handful of massage parlors, one gaudy facade next to another next to another. “It’s all here: alcohol and sexy young women,” the neighborhood’s semiofficial Web site (www.balibago.com) promises. “Recreational sex is the sport of choice. You can enjoy full privileges with one or more attractive young females regardless of your age, weight, physical appearance, interpersonal skills, wealth, or social class.” On Burgos Street in Makati, the high-rent district of Manila, the girls upstairs at Jools wait by the door until men walk in and the lights snap on, and then they all pop up and pose, and the girls at High Heels squeeze onto a melon-wedge stage and sway roughly in sync while others work the high-top tables with red velveteen trim—you bar-fine me?—and all the girls at all the other clubs on that strip do the exact same thing. A few congested miles away, in Quezon City, is Air Force One, an enormous neon box the size of a midwest convention center, with inlaid floors and a red-curtained stage and narrow hallways lined with small rooms named for every American president (the George W. Bush cubicle is particularly popular) and girls stocked in two glass-walled displays—first and business classes for the younger and prettier, economy for the older and uglier. And along the northern coast of Subic Bay, in a speck of a town called Calapandayan, underage girls wave from a balcony in striped tube tops while across the street, in a place called Muff Divers, a dozen more girls do a limp waggle for five surly Australians.&lt;br /&gt;The bars are everywhere, and there are girls in every bar. Yet none of the girls are technically prostitutes, because prostitution is illegal in the Philippines. A bar fine, in the national patois, is merely proper compensation for a club to let a girl out the door for a few hours, after which consenting adults can have at it—a ridiculous semantic wink that allows the industry to thrive with official deference if not outright sanction. (“I’ve had [aid workers] tell me you can’t stop it because to do so you’d have to arrest half the senate,” says one Western diplomat in Manila.) Indeed, much of the rest of the tourist sector is in on the gag. A guard with a machine gun at Ninoy Aquino International Airport sees a man in a suit with an American passport, grins, nods. “You have a good time, yes? You get some girls, yes?” A driver for the Makati Shangri-La, a five-star hotel, volunteers that he can procure an authentic virgin out in the provinces. Her parents will want 100,000 pesos, but she’ll be a real cherry girl, guaranteed, not some university coed faking it for a night because she’s short on tuition.&lt;br /&gt;&lt;br /&gt;At this point, there is no financial incentive to enforce the laws, anyway. No one knows exactly how much the bars and the girls contribute to the $2 billion tourist trade—immigration does not ask men if they’re entering the country to get laid—but it is substantial. An estimated 300,000 Japanese sex tourists visit the Philippines each year; and in 1997, a boom year for tourism, 13,000 Australians traveled to Angeles City alone, a figure reportedly second only to Americans. (And there really is no other appreciable reason to go to Angeles City, other than the bars.) Factor in the businessmen with a few hours to kill, multiply by hotel rooms and restaurant tabs and bar bills… It adds up.&lt;br /&gt;Moreover, the bars and the brothels provide jobs in a country that doesn’t have nearly enough to go around. Almost a million Filipinos leave the country each year to find employment, and more than 10 percent of the gross domestic product is cash sent home by overseas workers. Most go off to be domestics and laborers, a few are skilled professionals, and some—again, no one knows exactly how many—are imported to be prostitutes in wealthier countries. Until earlier this year, Japan alone granted more than 70,000 visas annually to Filipinos to work as “cultural entertainers,” a euphemism so transparent that international pressure finally forced the number to be cut to 8,000. For those who remain on the archipelago, where nearly half the population lives on less than $2 a day, there are menial jobs in the city and field work in the provinces, neither of which is abundant or pays more than a subsistence wage.&lt;br /&gt;&lt;br /&gt;Or there are the bars. There are thousands in the big cities and little villages, and dozens that sprouted next to the American naval base at Subic Bay and alongside Clark Air Force Base in Angeles City. Soldiers and sailors and airmen used to come by the thousands, flush with American dollars to spend on cheap beer and pretty girls, and the pretty girls came by the thousands, too, because the money was so much better than anything else they could do, and sometimes—not often, but with the same frequency that sells lottery tickets—a soldier or a sailor fell in love with a girl he met in a bar and married her and took her away. It went on like that for decades, so durable and so vast that it became famous, so famous that even after the bases closed, men kept coming, Americans and Australians and Koreans and Japanese, with their dollars and yen, traveling all the way into the middle of the Pacific just to hump the local women. There are so many tourists bringing so much money that a silly term is invented to make it all legal, and eventually the whole country—the hotel clerks and taxi drivers and airport guards—is winking and nodding, because in a way they’re getting a little taste of the action, too.&lt;br /&gt;&lt;br /&gt;And then it’s simply the norm.&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;There is another girl, a woman, actually, because she’s 23, who works at another club, a different kind of club in Manila, more subdued, classier, the sort that features girls with business cards. The cards are a mottled gold and pink, and they have her cell-phone number in the bottom corner and her name—Wine, that’s all, just Wine—above her awkwardly translated and slightly misspelled title, CLIENT’S LIASON ENTERTAINMENT OFFICER.&lt;br /&gt;&lt;br /&gt;Wine wears a cocktail dress, size zero because she is tiny, not quite five feet tall. At the start of each shift, she sits with all the other girls in the showroom behind a wide pane of one-way glass in one of the upholstered chairs that are set in long rows, like the littlest theater at the cineplex, and there is a small screen, set low into the front wall, playing videos to keep her from going mad with boredom while she waits. When customers come in, Mamasan draws open the curtains on the other side, and dim light filters in so Wine knows to look up, but she can’t see anything on the other side, only shadows. She can count how many men are looking in and sometimes, if one of the silhouettes is especially large, she’ll get up and slip out the back.&lt;br /&gt;&lt;br /&gt;Most times, though, Wine smiles and tries to look pretty, which she is, and tries to be charming, which is difficult through a sheet of soundproof glass. If a man selects her, Mamasan will push a button on an intercom and call her name, and then Wine will come into the hallway and try even harder to be charming. She will kiss him on the cheek and slip her arm through his, like a new girlfriend on a third date. Mamasan will lead them—Wine and a client, maybe two other girls and their clients, maybe two girls and one client—through a warren of hallways, which are darker and narrower away from the lobster tank, to one of the fifty private rooms. There are banquettes along two or three of the walls, short cocktail tables, a television set, and a karaoke machine.&lt;br /&gt;&lt;br /&gt;The club is not a brothel. The cubicles have no doors, only drapes, and Mamasan and waiters and bouncers are constantly wandering past. Some men, especially the Asian men who make up most of Wine’s clients, will pay good money to have strange women sing karaoke with them, 800 pesos an hour, of which Wine collects 250. Her client will buy drinks, of course (Wine is a scotch gal), and if he’s feeling frisky, he’ll drop an additional 400 pesos to have Wine change into a loose and low-cut slip so he can lick salt off her body for a tequila shooter. “Not the naughty parts,” Wine says. Only here—she points to her neck—or here—a spot above her left breast—or here—the curve of her hip. She always offers the body-shot option, the same way used-car salesmen offer rustproofing, because she gets paid an extra 150 when she lets a man lick her. A lot of clients paw and grope her anyway, so she may as well collect some pesos for her trouble.&lt;br /&gt;&lt;br /&gt;If a man is particularly taken by her, he can pay Mamasan the bar fine, 10,000 pesos—$180, give or take, ten times the price of an Angeles City girl—half of which goes to Wine. But Wine says she does not leave the club with clients. Okay, maybe she does once in a while, but only for dinner in a nice restaurant or a few hours in a casino. She says she is not a prostitute. Her English gets noticeably worse. She changes the subject.&lt;br /&gt;Wine has worked at that club for almost three years, which is unusual only because she admits it. (Dorothy says she has been there for two weeks. Maki says she has been there for two weeks. An astonishing number of girls say they are 19 years old and have worked at their particular bar or club for exactly two weeks, like a default code that says I’m legal and experienced, but barely.) She comes in four or five nights a week at seven o’clock and stays until three or four the next morning. On a good night—actually, her best night ever—she will spend five hours with clients. If they all spring for body shots, she will gross 2,000 pesos. Of that, Wine will owe 100 pesos for laundry, 200 for makeup, and an additional 300 or so for food. So if she’s very charming and very lucky, Wine will walk out just before dawn, sticky with salt licks, with 1,400 pesos. Thirty bucks, give or take.&lt;br /&gt;&lt;br /&gt;It is the best job she has ever had.&lt;br /&gt;&lt;br /&gt;She has a 7-year-old son to support. Wine got pregnant when she was 15, gave birth at 16, started working soon after. Odd jobs, menial jobs. She peddled cosmetics, sold bananas from a cart, worked the cashbox at a cockpit. None of them paid well. When she was 19 she told her boyfriend, her baby’s father, that she wanted to be an entertainer in Japan. He said no. But she knew someone who had a friend who knew a guy—it’s always that complicated—who managed girls who wanted to go get one of those 70,000 cultural- entertainment visas. Wine needed the money more than she needed her boyfriend, so she signed up.&lt;br /&gt;&lt;br /&gt;Her manager put her through six months of training, schooling her in rudimentary Japanese culture and etiquette, teaching her the basics of the language, explaining the mysteries of the wider world, like how to behave on an airplane. That all cost money, naturally—“credits,” Wine says, when she actually means debts. So did coaching her to pass the Artist Record Book test, which required her to sing three songs—one fast and two slow—ably enough to qualify as a “cultural entertainer,” a threshold Wine concedes is not set particularly high because she cannot, in fact, sing very well. Then there was paperwork to arrange, and plane tickets and housing—thousands and thousands of amorphous expenses, all on credit.&lt;br /&gt;&lt;br /&gt;She says she spent six months in Kyoto working at a club controlled by local gangsters. That was a good job, too. The mamasan looked out for her, she says, kept her away from the yakuza heavies, never forced her to do anything she didn’t want to, like go out on dates with any of the clients. A lot of the other girls did, though. The Russians and the Romanians? Total whores. When Wine talks about that part of the job, she only screws up her pronouns a couple of times, says I before she stops and says she and changes the subject. Mostly, she says, she hustled drinks from lonely businessmen and rasped Britney Spears songs onstage.&lt;br /&gt;After six months, after paying her living expenses and all of her debts, subtracting everything she owed, she cleared 40,000 pesos, or about $700.&lt;br /&gt;&lt;br /&gt;Wine got the job at her current club not long after she came back from Japan. She never meant to stay here so long, but the money’s good, better than she’d get anywhere else. She could make even more, work six nights a week, if it weren’t for the hangovers. She’s trying to cut back on the booze, trying to switch over to fruit shakes like the other girls, which is why she’s only having one magnificent tumbler of scotch tonight, not counting the two she had with the guy who was in a couple of hours ago.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;Two years pass. The girl from the G-Spot is still only a girl, 15 now, almost 16, which is how old she looks in the twilight on a bluff above Subic Bay, thirty miles southwest of the bars in Angeles City where she used to work. She’s wearing a red T-shirt and a thin silver chain that reflects gold in the sunset, and she has dark eyes and dark hair, but her skin is a faint shade lighter than most Filipinos’ because her father was a white man, an Australian.&lt;br /&gt;&lt;br /&gt;He was a businessman in the north of the country, and he bought fabrics, bolts of silk, from a pretty lady in a market. He kept buying her silks, and soon, maybe even in the first week, he fell in love, crazy in love, that’s how the girl says it because that’s how her father said it. After three years, when they were living as husband and wife, they had a baby daughter—the girl—and later two sons.&lt;br /&gt;&lt;br /&gt;When the girl was 4, the family moved to Quezon City, in metro Manila, to be closer to her mother’s relatives. The girl had her own room in a two-story house next to a garment shop her father owned, which, along with an ice plant he also owned, paid the bills. She was happy. Her father told her she would grow up to be a doctor.&lt;br /&gt;&lt;br /&gt;Then her mother met another man. He was a bad guy, compared with her father anyway, in trouble with the police, in and out of jail, always smoking shabu, the Filipino version of crystal meth. Not long after, the girl’s parents split up.&lt;br /&gt;They still saw each other, though. According to the girl, her mother would go to her father and ask him for money, say it was to buy food and to raise the girl and her brothers, but she’d use it to post bail for the thief or buy him more shabu. The girl’s father knew, but he gave her the pesos anyway. “My father,” she says, “he is so crazy in love with her.”&lt;br /&gt;&lt;br /&gt;Until it hurt too much to be crazy in love. On December 15, 2000, the girl’s father hanged himself in his apartment.&lt;br /&gt;&lt;br /&gt;She ran back north for a while, lived with one of her father’s friends, but seven months later she went back to her mother and the man, who by then was her stepfather—a junkie and a criminal sleeping in her father’s bed in her father’s house. He was strict, wouldn’t let her out of the house, and he would hit her, hit her little brothers. “My stepfather, I think he has something wrong with me,” she says. “Why does he do these things to me? Why doesn’t he let me be a child?”&lt;br /&gt;&lt;br /&gt;Her mother took the worst of the beatings. In the summer of 2002, the stepfather threw his wife to the floor, grabbed her by the hair, dragged her into the bathroom, and tried to drown her in the tub. He pulled a knife, held it to her throat, and swore he would kill her. Then the police came, swarming into the house, waving their guns. Days later, when the police said they couldn’t hold her stepfather any longer, she packed a bag and headed north again.&lt;br /&gt;&lt;br /&gt;She bounced from relative to relative for a few months before going to Angeles City. She had family there, an “uncle” who’s actually her mother’s cousin. She asked if she could live with his family, and he said no, he couldn’t afford another mouth, but she asked again and then a third time, and he finally said yes, okay, she could stay. But she felt guilty because she knew she was a burden. And she worried about her little brothers, left behind in Manila to fend for themselves. “So after so many days,” she says, “I decide to work in a bar.”&lt;br /&gt;&lt;br /&gt;That’s how it happens. That’s how a girl 13 years old walks into a bar and gets a job.&lt;br /&gt;&lt;br /&gt;She worked nine-hour shifts, trying to dance in her bikini, blue one day, maroon the next, eye shadow always matching and always too thick, then coming off the stage, talking to customers, coaxing drinks out of them, fifty pesos a shot for her own pocket. She did not like her job. Some of the men who drank at the G-Spot seemed nice enough, but mainly they were old (everyone seems old to a girl of 13) and fat and horny, the sort of schlubs who read the Web site and believed it because it happens to be true: You can enjoy full privileges with one or more attractive young females regardless of your age, weight, physical appearance, interpersonal skills, wealth, or social class.&lt;br /&gt;&lt;br /&gt;“Do you know the word blow job?” she asks. “And…I don’t know the word, when you lick the pussy?” The girl blushes, looks away. “I saw some very bad, disgusting…yuck,” she says. “I saw it because I have eyes.”&lt;br /&gt;On her third night at the G-Spot, she says, a Japanese businessman and his Filipina assistant bar-fined her, paid a thousand pesos to take her out into Angeles City. Mamasan told the Japanese guy that his date was a cherry girl, which normally would tack a premium onto the price—“cherry popping” is popular among certain connoisseurs of degeneracy—but her tone was firm, a cautionary instruction—don’t fuck her—instead of a promise. And he did not try. He asked her how old she was, and she said 18, and he didn’t believe her, so she said 16, and he did not ask again. Then he took her around the corner to a casino, and the girl just watched while he gambled. She was relieved when he told her to go.&lt;br /&gt;&lt;br /&gt;Fifteen years ago, and for decades before that, most of the men in the bars were Americans, the soldiers and sailors on leave or stationed at Clark and Subic Bay. In the ’80s, Aurora Javate
