<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/20242795?origin\x3dhttp://mugamoodireader.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

இருக்கு -ந.முத்து


அசல் பதிவுக்கு
சுட்டி

இருக்கு -ந.முத்து
(சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)

--> (சில மட்டுமே இங்கு)

3.

ஒவ்வொரு மாதத்தின்
முதல் சனிக்கிழமை
இரவில் துவங்குகிறது
இந்த
திருப்பள்ளி எழுச்சி

வில்ஸ் புகையில்
சுக்கா வாசம் மிதக்கும்

நிறம் மாறி இருக்கும்
குளிர்பானம்
ஊற்றப்பட்ட சரக்கு

வீட்டுக்காரக் கிழவியின்
குறட்டை தாண்டி
உள்ளறைக்குள்
வந்து சேரும்
மெட்டியணிந்த
இருபாதம்

விளக்கணைக்கப்பட்ட
உள் அறைக்குள்
ஒன்றன் பின்


ன்
றா
ய்
உருவங்கள்

அதிகலையில்
கேட்டது அந்தக் குரல்

எம் புள்ள மாதிரி இருக்கீங்க.. ஒரு
பத்து ரூவா சேத்துக்குடுங்க..

6.

குளித்துவிட்டு
கோவிலுக்குள்
வரச் சொல்லியிருக்கிறாய்

சரி

எங்களையும்
விடச் சொல்
எல்லோரும்
குளிக்கிற
குளத்தில்.

7.

தங்கச்சி குளிக்க
தடுக்கு கட்டவக்கில்ல
தாயோளி
செங்கல்ல தூக்கிட்டு
போறான்
கோயில் கட்ட.

8.

குருடன் பார்க்கிறான்
செவுடன் கேட்கிறான்
முடவன் நடக்கிறான்
அரவாணி புள்ளை பெக்கிறான்

பிராத்தனை
கூட்டத்திற்குப்
போக முடியாமல்
மூட்டு வலியால்
படுத்திருக்கிறார்
போப்பாண்டவர்.

10.

மாதவிலக்கின்
மஞ்சள் துணி மேல்
விந்துக்கறை போல்
உந்தன்
கவிதை.
எந்த பயனும்
இல்லாமல்.
(குறிப்பு : உன் அரிப்பு தீர்ந்திருக்கும்)

வாழ்பானுபவ கவிகளுக்கு...

11.

உனக்கு சொரணை
இருக்கிறத?
என்று கேட்டுவிட்டான்.
இருக்கிறது என்று
சொல்ல முடிவதில்லை.
எல்லாவற்றயும் பார்த்து
கவிதை மட்டுமே
எழுதிக்கொண்டிருப்பதால்.

***********

இருக்கு -ந.முத்து
(சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)

வெளியீடு:

63, பொன்னி நகர்.
கோவை-37.

š இப்பதிவை மின்னஞ்சலிட