<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

என் பிள்ளை பிறக்கிறபோதே அகதி!


விர்ர்ர்ரென விரைந்து வருகிறது ஒரு படகு. கடலின் நடுவே சின்னச் சின்னதாக மணல் திட்டுக்கள். பொட்டலங்களைத் தூக்கியெறிவது போல, சிலரை அவசரகதியில் தள்ளிவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்-தில் காணாமல் போகிறது படகு.

கரை மணலைப் பார்த்த புன்னகையும், சொந்த மண்ணைத் தொலைத்த கண்ணீருமாக இப்படி தினம்-தினம் கூட்டம் கூட்டமாக இந்தியக் கடலோரம் வந்து இறங்குகிறார்கள் ஈழத் தமிழர்கள்.

‘‘பிழைச்சு வந்துட்டம். இனி பயம் இல்லை. அழக் கூடாது. அம்மா இருக்கேன். அழாதேடா செல்லம்’’ என்று தேற்றுகிற தன் தாயின் மடியில் முகம் புதைத்து உடல் நடுங்கக் கதறுகிறாள் ஜனனி. ‘அப்பா... அப்பா...’ என்ற ஒரே வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப. மனைவியும் மகளும் மட்டும் பிழைத்-தால் போதுமென்று இருந்த பணத்தையெல்லாம் படகுக்காரனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறார் அந்தப் பாசமிகு தந்தை.

பத்து மணி நேரத்துக்கும் மேலாக, மூச்சுத் திணறலோடு உயிரின் விளிம்பில் தத்தளிக்கிறது எட்டு மாதப் பிஞ்சு லச்சு. ‘உக்கிரமான கடல் காத்து வீசு அலை எங்களது போட்டில் விழுந்துடுச்சு. கடவுளே... சால கடல் நீர் இந்தப் பிள்ளையின் முகத்தில் அறைஞ்சிடுச்சு. என் பிள்ளைக்கு மருத்துவம் பார்க்க இயலுமா?’’ என்று கதறுகிறயோகேஸ்-வரியுடன் கடற்படை-யினரிடம் மன்-றாடிக்-கொண்டு இருக்-கிறார் கணவர் யோகராசா.

‘‘படகு கவிழ்ந்து எல்லோ-ரும் ஆளுக்கு ஒரு திசையில் நீந்திப் போனோம். என்-னோட மூன்று மகள்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல், என் சின்ன மகனை மட்டும் முதுகில் சுமந்து நீந்திக்கொண்டே வந்தேன். இரவு நேரம். இருட்டைத் தவிர, எதுவும் தென்பட-வில்லை. மூர்ச்சையாகி மயங்-கிய பிள்ளையைச் சுமக்க மாட்டாமல் தண்ணீரிலேயே விட்டுவிட்டு இருபதடி தூரம் நீந்தி வந்தால், காலில் கரை தட்டுப்பட்டது. ஐயோ... என் பிள்-ளையை நானே கொன்றுவிட்டேன். என்னை எந்தக் கடவுளும் மன்னிக்க மாட்டார்’’ என்று கதறு-கிறார், அகதி-கள் முகாமில் இருக்கும் கந்தசாமி.

இலங்கைப் போரில் தூக்கி எறியப்பட்டுக் கூட்டம் கூட்டமாக, அகதிகளாக ராமேஸ்-வரம் தீவில் அடைக்கல-மாகிறார்கள் இலங்கைத் தமிழர்கள். மன்னார், பேசாலை பகுதிகளி-லிருந்து புறப்படும்படகு-கள் ஏக்கமும் துயரமும் சுமந்தபடி வந்து-கொண்டே இருக்-கின்றன.

18 கி.மீ. கடல் பய-ணத்தில், மரணத்தின் வாசல்வரை சென்று பிழைக்கிறார்கள் அகதிகள். ‘‘எங்கள் படகில் மொத்தம் 12 பெரியவர்கள், 5 குழந்தைகள். தலைக்-குப் 10 ஆயிரமும், சிறுசுகளுக்கு 8 ஆயிரமும் தந்து படகு ஏறினோம். நடுக் கடலில் வந்தபோது, படகின் ஓரத்தில் விரிசல் விழுந்ததாகச் சொல்லி படகை நிறுத்திவிட்டார்கள். ‘உயிர் பிழைக்கத்தானே படகு ஏறினோம். இப்படி நடுக் கடலில் அநாதைப் பிணமாக வேண்டியாதாகிப்-போச்சே!’ என்று அழுதோம். எங்களது உடைமை-களையெல்லாம் தூக்கிக் கடலில் எறிந்தார்கள். பாரம் குறைஞ்சாதான் படகு பிழைக்குமாம். எங்களுக்கு மாற்று உடுப்புக்கூட எதுவும் இல்லை. பையில் வைத்திருந்த கொஞ்சநஞ்ச பணமும் கடலோடு போய்விட்டது. அகதியாக இறங்கியதுமே, மானம் மறைக்க உடுப்பு கேட்க வேண்டியாதாகிப்-போச்சு. இப்படிப் பிழைக்க வேண்டு-மா என்று மனசுக்குள் ஒரு வலி உறுத்திக்கொண்டே இருக்கிறது’’ என்று மரண வாசலைக் கடந்து வந்த தன் துயர அனுபவத்தைச் சொல்கிறார் கோமஸ்.

தொண்டு நிறுவனம் தந்த ரொட்டித் துண்டை அமிர்த-மாக எண்ணிச் சாப்பிடுகிறாள் நிஷாந்தினி. ஒரு நாள் பசியை ஈடுகட்டுகிற அவசரம் அவள் கண்களில்!

‘‘நல்ல இசை கேட்டால், குழந்தை நன்றாகப் பிறக்கும் என்றார் திரிகோணமலை டாக்டர். என் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ‘ஷெல்’ அடிக்கும் சத்தம்தான் பரிச்-சயம். நாங்கள் பிறந்து அகதி-யானோம். என் பிள்ளை பிறக்கிறபோதே அகதி. ஐயோ, ஏன் பிள்ளை பெற்றுக்-கொள்ள ஆசைப்பட்-டேனோ?’’ என்று தன் வயிற்றுக்குள் வளரும் எட்டு மாத உயிரைத் தடவிக்-கொண்டே கலங்கு-கிறார் செல்வி.

‘‘கடந்த வாரம் நாங்கள் போக இருந்த போட்டை நேவிக்காரர்கள் எரிச்சுப் போட்டாங்க. யாரும் அகதி-யாப் போகக் கூடாதுன்னு மிரட்டினாங்க. நாங்க போகத் திட்டமிட்டிருந்தது தெரிஞ்சிருந்தா, இந்நேரம் ஏதேனும் ஒரு புதைகுழியில் பிணமாகிப் புதைஞ்சிருப்போம்’’ என்-கிறார் கிறிஸ்டியா.

‘‘கடல் வழியா தமிழ்நாடு வந்துட்டா, நாங்க பிழைச்-சோம். இல்லையென்றால் கடலிலேயே இறந்து-போவோம். ஆனால், எங்கள் நாட்டில் சிங்களப் படை-யிடம் சிக்கினால், ஆண்கள் உடல் சிதைந்து சின்னா-பின்னமாகி இறக்க வேணும். பெண்கள் இறந்தால், பல ஆண்களின் வல்லுறவுக்கு ஆளாகி இறக்க வேணும். கடலுக்கு அப்படி-யெல்லாம் சித்ரவதை செய்து கொல்லத் தெரியாதுதானே?

பிழைத்து வந்து அகதியாக வாழ நேர்ந்தாலும், மானத்-தோடு இருக்க -முடியும். அத-னால்தான் எல்லாவற்றையும் துறந்து, துணிந்து புறப்படு-கிறோம்’’ என்கிற கிறிஸ்டியா-வின் வார்த்தைகள் நெஞ்சைச் சுடுகின்றன.

இப்படி ஒவ்வொருவரிட-மும் நிறைய சோகங்கள் இருக்-கின்றன. உயிரைக் காப்-பாற்றித் திட்டில் நம்பிக்கை-யோடு வந்து இறங்குகிற மக்களை இன்னும் அதிக காயப்படுத்துகின்றன விசாரணைகள்.

‘‘தண்ணீரில் நடுங்கிக்-கொண்டே வருகிறவர்களுக்கு ஒரு டம்ளர் டீ கொடுக்கக்கூட தனுஷ்கோடியில் வசதி இல்லை. நம் கடற்படையிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்-காக, அகதிகளை ஆளரவமற்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிடு-கிறார்கள்படகுக்-காரர்கள். 24 மணி நேரமும் வந்து குவியும் மக்கள் வெகு-தூரம் நடந்து வந்து,கடற்படை-யிடம் சரணடைய வேண்டி-யிருக்கிறது. பிறகு, காவல் நிலையத்தில் தங்கள் வருகை-யைப் பதிவு செய்துகொண்டு, வெகு நேரம் காத்திருந்த பிறகே, அவர்கள் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள். குழந்தைகள் மீது யாரேனும் இரக்கப்பட்டுக் குடிக்கப் பால் வாங்கித் தந்தால்தான் உண்டு. அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தனுஷ்கோடியில் இறங்கியவர்களை மண்டபம் முகாமுக்கு அழைத்துச்- செல்ல எந்த வாகன வசதியும் கிடை-யாது. மூட்டை முடிச்சுகளோடு குழந்தை--களையும் சுமந்துகொண்டு வெகுதூரம் நடக்க வேண்டிய நிலை. அகதிகளை அலட்சியமாக நடத்தாமல், கொஞ்சமாவது கௌரவ-மாக நடத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள -வேண்டும்’’ என்கிற ரோஸ்மேரி, அகதிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மீனவர் கூட்டமைப்பைச் சேர்ந்த அருளானந்தம், ‘‘அகதிகளோடு மீனவர்களையும் சேர்த்துப் பந்தாடுகிறது அரசாங்கம்’’ என்று குற்றம் சாட்டுகிறார். ‘‘இலங்கையில் உயிரைப் பணயம் வைத்து அகதிகளை ஏற்றி வருகிற இலங்கைத் தமிழ் மீனவர்கள் அந்நாட்டுக் கடற்படையிடம் சிக்கினால் மரணமோ, சிறைத் தண்டனையோ நிச்சயம். இந்தியக் கடற்படை-யிடம் சிக்கினாலும், அதே பரிசுதான். இரண்டு நாட்டு அரசுகளும், அகதிகள் மீது இரக்கப்படாமல் நடுக் கடலிலேயே கொன்றுவிட வேண்டும் என்று விரும்பு-கிறதா? கிடைக்கிற எந்த மீனவனையும், அகதியையும் விடுதலைப் புலியாகவே சித்திரித்து, விசாரணை என்கிற பெயரில் சித்ரவதை செய்து, படகைப் பறிமுதல் செய்து சிறையில் தள்ளினால், மீனவர்கள் எப்படி அகதிகளைக் காப்பாற்றுவார்கள்? கடல் நடுவில் உள்ள திட்டில் பசியோடும், பயத்தோடும் இருக்கிற சகோதரர்களைக் கனிவோடு ஏற்றிக்கொண்டு ஒரு தமிழக மீனவன் கரைக்கு வந்துவிட்டால், அவனது வாழ்க்-கையே முடிந்துவிடும். இரக்கப்-படக் கூடாது என்று அரசாங்கமே சொல்வது--தான் வேதனையாக இருக்கிறது. இரண்டு நாட்டு மீனவர்களையும் கைது செய்து கொடுமைப்படுத்து-வதை, இரண்டு நாடுகளும் உடனடியாகக் கைவிட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் அருளானந்தம். மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமுக்குள் நுழைந்தால், தங்களுக்கு வழங்கப்படுகிற உதவித் தொகையையும், உணவுப் பொருட்களையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கி-றார்கள் அகதிகள்.

‘‘குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற உதவித்தொகையில் பால் வாங்கவும் ஏலாது. எங்களுக்கு ஏதேனும் உடலுழைப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்-தித் தந்தால், நாங்கள் எங்கள் உழைப்பி-லேயே கொஞ்சம் சுயமரியாதை-யோடு வாழ்ந்துவிடுவோம்’’ என்கிறார்கள் அகதிகள் கண்ணீரோடு.

அகதிகள் வந்திருப்பதாகக் காவல் நிலையங்களிலிருந்து மண்டபம் முகாம் அதிகாரிகளுக்குத் தகவல் வந்து-கொண்டே இருக்கிறது. அரசு அலுவலகத்-தில் கோப்புகள் நகரும் விதத்திலேயே மிகவும் மந்தகதியில் நடக்கின்றன வேலை-கள். அகதிகளுக்கு வழங்கப்படுகிற உணவுப் பொருட்-களிலும் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் இருக்கின்றன. சொந்த நாட்டில் மட்டுமின்றி, வந்த நாட்டிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள் அப்பாவிகள். ‘‘எங்கள் சகோதர நாடுதானே இந்தியா! எங்கள் நாட்டில் அமைதி ஏற்பட, எங்கள் தமிழ்ச் சகோதரர்கள் உதவி செய்வார்கள்தானே?’’ என்று மூட்டை முடிச்சுகளோடு நம்பிக்கை-யையும் சுமந்தபடி கேட்கிறார்கள் இலங்கைத் தமிழ் அகதிகள்.

தனுஷ்கோடி கடல் அகதிகளின் கண்ணீரால் அதிகமாகவே கரிக்கிறது!

- த.செ.ஞானவேல்,கி.கார்த்திகேயன்
படங்கள்: கே.ராஜசேகரன்.
நன்றி : விகடன் 09-07-2006 இதழ்


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::

சரி, உங்க கருத்து ??